Monday, July 9, 2018


இதுவும் இந்தியாதான்!
ஆ.சாந்தி கணேஷ்
நன்றி: ஆனந்த விகடன்
 
சென்னை மாநகரம் கோடை மழையை ருசித்துக்கொண்டிருந்த ஒரு மாலை. ‘இப்போது வீடற்றவர்கள் என்ன செய்வார்கள்? கையளவு மறைவுகூட இல்லாமல் மழையிலும் வெயிலிலும் வானமே கூரையாக வாழும் சாலையோரப்  பெண்களின் வாதை என்ன?’ கேள்விகள் அறுத்தன. மறுநாள் அதிகாலை மணி 5. 45. சென்ட்ரலை ஒட்டிய வால்டாக்ஸ் ரோடு. முந்தைய தினம் பெய்த மழையில் சேறும், அழுக்குமாய் கால் வைக்கவே கூசும் தெரு. பிய்ந்துபோன பாய்களில், மீன்பாடி வண்டிகளில், கடைகளின்படிக்கட்டுகளில், பெரிய பெரிய பார்சல்களின் மேல்... எனப் பெண்கள், தங்களை மறந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கட்டிக்கொண்டு சில குழந்தைகளும். தெருவோரங்களிலேயே பிறந்து, வளர்ந்து, திருமணம் முடித்து, கிடைத்த மறைவுகளில் தாம்பத்யம் சுகித்து, அடுத்த தலைமுறைகளையும் இதே அழுக்குத் தெருக்களுக்கு வாரிசாகக் கொடுத்தவர்கள். 

புது ஆட்களின் அரவம் கேட்டுத் தெரு நாய்கள் தங்கள் கடமையைச் செய்ய, உறக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்த சில பெண்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். ‘`ஒரு நிமிசம் மேடம்’’ என்றவர்கள்,  ஓடிப் போய், தெருவோரக் குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தைக் கழுவித் துடைத்துவிட்டு வந்தார்கள்.


‘`நைட்டெல்லாம் தூறல் போட்டுட்டே இருந்துச்சே, தூங்க முடிஞ்சதா?”
‘’எங்க தூங்கறது? குழந்தைகள தோ, இந்தமாரி கடைப் படிக்கட்டுகள்ல படுக்க வெச்சிட்டு நாங்க மழை நிக்கிற வரைக்கும் விடிய விடிய நின்னுகிட்டேதான் இருந்தோம். விடியல்ல ரெண்டு, மூணு மணிக்குத்தான் படுத்தோம். நேத்து ராத்திரி மட்டுமில்ல, எங்களமாரி தெருவுல இருக்கிற பொம்பளைங்க டெய்லியுமே விடியக்காலைலதான் தூங்கவே ஆரம்பிப்போம். ஏன்னா, நைட்ல ஜன நடமாட்டம், வண்டிங்க நடமாட்டம் குறைஞ்சதுக்கப்புறம்தான் பாயையே விரிக்க முடியும். அப்படியே படுத்தாலும் உடனே தூங்கிட முடியாது. தண்ணிய போட்டுட்டு ரோடுல போறவனுங்க எங்க பொம்பளைப் புள்ளைங்க பக்கத்துல வந்து படுத்துக்கினு தொல்லை பண்ணுவானுங்க. அவனுங்கள விரட்டி விடணும்; எங்க புள்ளைங்கள காவல் காக்கணும். எல்லாப் பிரச்னைகளும் அடங்கி நாங்க தூங்கறதுக்கு விடிகாலை ஆயிடும். எங்களமாரி ரோட்டோரத்துல வாழ்ற பொம்பளைங்க பொழுது விடிஞ்சுகூட தூங்கறதுக்கு இதான் காரணம்’’ என்ற செல்வி, இதே வால்டாக்ஸ் ரோடு, பிள்ளையார் கோயில் சந்துத் தெருவோரத்தில்தான் பிறந்திருக்கிறார்.
இங்கேயே திருமணம் முடித்து, நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்துவருகிறார். ‘`புள்ளைங்க தலையெடுத்த பெறகுதான் வாடகைக்கு வீடு பார்க்கணும்’’ என்று செல்வி சொல்ல, வள்ளி அவரை நம்பிக்கைக்குறைவாகப் பார்க்கிறார்.
‘`நாங்க என்ன அடுப்பும் சிலிண்டருமா வெச்சிருக்கோம்? விறகடுப்புலதான் சமைக்கணும். அப்படி சமைச்சா, அக்கம் பக்கம் இருக்கிற பெரிய கடைங்கள்ல புகைபடியுதுன்னு திட்டுவாங்க’’ என்கிறார் பரிதாபமாக. கிழிந்த பாயில் அமர்ந்தபடி நாங்கள் பேசிக்கொண்டிருக்க, ‘`அக்கா...’’ என்றழைத்தாள் அந்த இளம்பெண். ‘`குளிக்கப்போற இடத்துலேயும் எங்களுக்குப் பாதுகாப்பு கிடையாதுக்கா.

‘`அப்படியே வாடகை வீடு பார்த்துக்கிட்டுப் போனாலும் தொடர்ந்து எங்களால வாடகை கொடுத்து இருக்க முடியலீங்க. ஏதோ ஐந்நூறு, ஆயிரம்னா பரவாயில்லீங்க. ஐயாயிரம், ஆறாயிரம் வாடகைக்கு நாங்க எங்க போறது? இதுல நாப்பதாயிரம், அம்பதாயிரம்னு அட்வான்ஸ் வேற. இங்க ஆம்பளை, பொம்பளை எல்லாரும் தினக்கூலிக்கும், வாரக்கூலிக்கும் போறவங்கதான். வாங்குற கூலி சாப்பாட்டுக்கும், கக்கூசுக்குக் கொடுக்கிறதுக்குமே சரியாப்பூடுது. காலங்காத்தால ஒண்ணுக்குப் போறதுக்கு அஞ்சு ரூபா, ரெண்டுக்குன்னா பத்து ரூபா, குளிக்கணும்னா அதுக்கொரு பத்து ரூபா. கையில் காசில்லைனா குளிக்கவே முடியாது. அழுக்குப் புடிச்சு நாறிப்போயிதான் கிடக்கணும். நாங்க சாப்பிடறதும் ஓட்டல் கடைங்கள்லதான். அப்புறம் எங்கிருந்து காசு சேர்த்து, அட்வான்ஸ் கொடுத்து வாடகை வீட்டுக்குப் போவறது?’’ - கேள்வியுடன் நிறுத்துகிறார் வள்ளி.
‘`நீங்களே சமைக்கலாமே?”
பாத்ரூம், மேலே தொறந்துதான் இருக்கும். குளிச்சிக்கிட்டே இருக்கிறப்போ திடீர்னு நிழலாட்டமா தெரியும். நிமிர்ந்து பார்த்தா, எவனாவது நாங்க குளிக்கிறதைப் பார்த்துக்கிட்டிருப்பான்; வீடியோ எடுத்துட்டிருப்பான். உயிரே போயிடும்க்கா’’ - பாதி வார்த்தைகளும் மீதி பரிதவிப்புமாகச் சொன்னவளின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன்.

 




ஒரு பெண் இடுப்பில் குடத்துடன், கையில் சோப்பு டப்பா, தோளில் சுடிதார் சகிதம் பொதுக் குளியலறைக்குக் கிளம்ப, ‘அப்பா... குளிக்கக் கிளம்பியாச்சா?’ என்று அவருக்குக் கையசைக்கிறார்கள் என்னுடன் அமர்ந்திருந்த பெண்கள். ‘`அந்தப் பொண்ணுதான் அவங்க குடும்பத்துக்கு அப்பா. இங்க மூத்ததா பொறந்த பொண்ணுங்கதான் ஸ்டீல் பட்டறையில வேலைக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்தறாங்க. அந்தப் பொண்ணுங்களை எல்லாம் நாங்க அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவோம்’’ என்றவர்கள், அவர்கள் குடும்பத்து ஆண்களைப் பற்றியும் சொன்னார்கள். 

 ‘எங்க ஆம்பளைங்க எல்லாம் குடி, போதைன்னு சீரழிஞ்சு கிடக்கிறாங்க. கேட்டா, ‘உழைக்கிறோம். உடம்பு வலிக்குது’னு சொல்வாங்க. இதாவது பரவாயில்ல, பல ஆம்பளைங்க பொண்டாட்டி, புள்ளைங்கள அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போயிடுவாங்க. இதெல்லாம் மீறி மிச்சம் மீதி இருக்கிற ஆம்பளைங்களையும்  இந்த ஏரியாவுல ஏதாவது பிரச்னைன்னா, போலீஸ்காரங்க இஸ்துக்கினு போயிடுவாங்க’’ என்று சொன்ன பெண்களின் கண்களில், அனுபவங்கள் கண்ணீராய் அரும்புகின்றன. ஆறேழு மாதங்களுக்கு முன்னால்தான் இந்தத் தெருவோர வாழ்க்கையில் இருந்து வாடகை வீட்டுக்குக் குடி போயிருக்கிறார் பிரேமா. ‘`என் பொண்ணுங்க வேலைக்குப் போனவுடனே வாடகை வீட்டுக்குப் போயிட்டேன். தெருவுல தூங்கினது, இருட்டுல குளிச்சது, தார்ப்பாய்க்குள்ள புருசன்கூடக் குடும்பம் நடத்தினதெல்லாம் என்னோட போகட்டும்ங்க’’ என்கிறார். 

ஒரு பெண் இடுப்பில் குடத்துடன், கையில் சோப்பு டப்பா, தோளில் சுடிதார் சகிதம் பொதுக் குளியலறைக்குக் கிளம்ப, ‘அப்பா... குளிக்கக் கிளம்பியாச்சா?’ என்று அவருக்குக் கையசைக்கிறார்கள் என்னுடன் அமர்ந்திருந்த பெண்கள். ‘`அந்தப் பொண்ணுதான் அவங்க குடும்பத்துக்கு அப்பா. இங்க மூத்ததா பொறந்த பொண்ணுங்கதான் ஸ்டீல் பட்டறையில வேலைக்குப் போயி குடும்பத்தைக் காப்பாத்தறாங்க. அந்தப் பொண்ணுங்களை எல்லாம் நாங்க அப்பான்னுதான் செல்லமா கூப்பிடுவோம்’’ என்றவர்கள், அவர்கள் குடும்பத்து ஆண்களைப் பற்றியும் சொன்னார்கள்.  

‘`எங்க ஆம்பளைங்க எல்லாம் குடி, போதைன்னு சீரழிஞ்சு கிடக்கிறாங்க. கேட்டா, ‘உழைக்கிறோம். உடம்பு வலிக்குது’னு சொல்வாங்க. இதாவது பரவாயில்ல, பல ஆம்பளைங்க பொண்டாட்டி, புள்ளைங்கள அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போயிடுவாங்க. இதெல்லாம் மீறி மிச்சம் மீதி இருக்கிற ஆம்பளைங்களையும்  இந்த ஏரியாவுல ஏதாவது பிரச்னைன்னா, போலீஸ்காரங்க இஸ்துக்கினு போயிடுவாங்க’’ என்று சொன்ன பெண்களின் கண்களில், அனுபவங்கள் கண்ணீராய் அரும்புகின்றன. ஆறேழு மாதங்களுக்கு முன்னால்தான் இந்தத் தெருவோர வாழ்க்கையில் இருந்து வாடகை வீட்டுக்குக் குடி போயிருக்கிறார் பிரேமா. ‘`என் பொண்ணுங்க வேலைக்குப் போனவுடனே வாடகை வீட்டுக்குப் போயிட்டேன். தெருவுல தூங்கினது, இருட்டுல குளிச்சது, தார்ப்பாய்க்குள்ள புருசன்கூடக் குடும்பம் நடத்தினதெல்லாம் என்னோட போகட்டும்ங்க’’ என்கிறார்.

‘`இங்க எல்லார்கிட்டேயும் வோட்டர் ஐ.டி இருக்குக்கா.  எங்களுக்கு அட்ரஸே இல்லன்னாலும் அதை மட்டும் தேடி வந்து கொடுத்துடுறாங்க. ஆனா, கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட் இல்ல. அது இருந்தா, எங்களுக்கான சலுகைகள்ல படிச்சி, எப்படியாவது மேலே வந்துடுவோம்’’ என்று எதிர்காலத்தின் மீது மிகுந்த நம்பிக்கையாகப் பேசுகிறார் சங்கீதா. (சாதி சர்ட்டிபிகேட்டை கிழித்தால் சாதி ஒழிந்துவிடும் )
‘`உங்க பொஸ்தகத்துல எங்களப் பத்தி வர்ற நேரத்துலயாவது எங்களுக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கணும்மா’’ என்றபடி வீட்டு வேலை, ஹோட்டல்களுக்குத் தண்ணீர் பிடித்துக் கொடுக்கிற வேலை, ஸ்டீல் பட்டறை வேலை என்று  என்னைச் சூழ்ந்து நின்ற பெண்கள் எல்லோரும் அவரவர்  வாழ்வாதாரத்துக்காகக் கலைய ஆரம்பித்தார்கள்.
சில்லிட்டது தூறல். மழை எல்லோருக்குமானதுதான். அதன் பாடுகள் சிலருக்கே!