Wednesday, January 1, 2020



எங்கடா போன 

நீ பேசிப்போன அலைபேசி
உன் குரல் தேங்கி
உறைந்து போனதால் கணத்துப்போனதேடா
அதில்
என்றாவது உன் அழைப்பு வருமென்று
உன் எண்ணி அழிக்கவில்லையடா
தவறிய அழைப்பிலெல்லாம்
தாய்முகம் தேடும்
மிகச்சமீபமாய் பிறந்த சேய்போல
உன் எண்முகம் தேடினோமடா
எங்கள் பதின்ம பருவம் முடிவதற்குள்
மணமாகமலே எங்களை தந்தையாக்கினாயடா



நீ பிறந்தது முதல்
ப்பா
சொல்லுங்கப்பா
சரிங்கப்பா
இவைதான் உன்னிடம்
நாங்கள் அதிகம் கேட்ட்து
எங்களுக்கான உன் அகராதியில்

எல்லாப்பக்கங்களிலும்
இதையே எழுதிவைத்திருப்பாய் என்று
எங்களுக்கு தெரியாது
எதிர்த்தெங்களை பேசாத்தால்
எங்களுக்கு ஹிட்லர் மனதும்
மண்நோக்கி பேசும் மரியாதையும் தந்தாயடா

கூடி வாழ்வதே இப்பிறப்பின் பொருள்
அப்பிறப்பே இப்பிறப்பென்று
எப்போதும் தப்பாது வாழ்ந்தாயடா
அன்பில் வகுப்பில்லை
அன்பிற்கு வகுப்பில்லை
அது ஓர் பரந்த வெளி என்று

படரும் கொடிகள் போன்று
உன் கைக்கொடிகள்
எங்கள் மேல் படர்ந்தும் தொடர்ந்தாயடா
உணவின் உன்னதம் உணர்த்தினாயடா
அதை பெருமையாய் ஊருக்கே உரைத்து
பசித்து புசிக்க மட்டுமல்ல
ருசித்தும் புசிக்க கற்றுக்கொடுத்தாயடா
எதிரி என்று இங்கு எவரும் இல்லை
இன்னும் பழகாதவர்களே
என்றும் எங்களுக்குள்ளும்
இன்னும் கொஞ்சம் மனிதம்

விதைத்தாயடா
திசையில்லா
வர்ணமில்லா

வகுப்பில்லா
உன் மனம்
இல்லங்களெங்கும்
மகனாய் அண்ணனாய்
தம்பியாய் மாப்பிள்ளையாய்
கறையில்லா உறவாய் உலவியது

உன் ஊர்வலத்தில்
உறுதியானதேயடா
அதே திசையில்லாமல்
திரும்பிய பக்கமெல்லாம்
விரும்பிய கணங்களெல்லாம்
அதிருசி ஊண் நேரங்களிலெல்லாம்

உன் அருகாமை உணர்கிறோம்
நீ இருப்பாய் என்று
இக்கணமும் நம்புகிறோம்

நம்பத்தான் வைத்தாயடா
மாய உருவம் கலைத்து
உண்மை முகமும் உடலும்
இனி அணிய இயலா வண்ணம்

எங்கேடா போன
எங்கள் மகனே
உன் இருக்கை
உன் இலை
உன் பாடல்

உன் இசை
உன் பாய்
இன்னும் உனக்கான எல்லாம்
எங்கள் வட்டத்தில்
என்றும் இருக்கும்

நம் வட்டத்தில்
விரிசல் விழா
இணைப்புப் புள்ளியாய்
என்றும் நீ இருப்பாய்
என்று நம்புகிறோம்


மோடி ஊழல் செய்யமாட்டார்
ஊழல் செய்யவும் விடமாட்டார்
இந்தியாவில் ஊழலற்ற ஒரே கட்சி பா.ஜ.க.

மேலே உள்ள வரிகளை 50 தபால் அட்டைகளில் எழுதி உடனடியாக 50 நண்பர்களுக்கு அனுப்பினால், 24 மணி நேரத்தில் நல்ல செய்தி வந்து சேரும்.

மேற்கு வங்கத்தில் முகுல் ராய் என்பவர் 100 பேருக்கு அனுப்பினார். அவர் மேல் இருந்த சாரதா சிட்பண்ட் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் 200 பேருக்கு அனுப்பினர். அவர்கள் மேல் இருந்த சுரங்க வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது.

ஹரியானாவில் துஷ்யந்த் சௌதாலா என்பவர் 100 பேருக்கு அனுப்பினார். அவரது தந்தைக்கு உடனே ஜாமீன்  வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிராவில் அஜித் பவார் 300 பேருக்கு அனுப்பினார். அவர் மேல் இருந்த ஒன்பது வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன.

மேலும் ஜார்கண்ட், அஸ்ஸாம் மாநிலத்திலும் தபால் அட்டை அனுப்பி பலனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ப.சிதம்பரம் என்பவர் தபால் அட்டை அனுப்பாமல் அசட்டையாக இருந்துவிட்டார். இப்போது சிறையில் சிரமப்படுகிறார்.

ஆகவே நண்பர்களே.

ஒடனே நீங்களும் ஒரு அட்டேல எழுதி
ஷேர் பன்னி ச்சீ பண்ணி
உட்ருங்க

அப்டி உட்டீங்கனா
10நாளுக்குள்ள

ஒங்க வீடு தேடி
15 லட்சம் வந்துடும்

2 கோடி பேருக்கு வேல ச்சீ
வேலை கெட்ச்சிடும்

காஷ்மீர்ல ஒரு 5 செண்ட்டாவது நம்ம காதுல
ச்சீ நம்ம பேர்ல வாங்கலாம்

திருவள்ளுவரோட 56இஞ்சி ச்சீ இன்ச் மார்ப பூணூலோடு பாக்கலாம்

எல்லா மசூதி மண்டேலயும் ராமர் கோயில் சொம்ப ச்சீ கும்பத்த பாக்கலாம்

நம்ம ஆத்துலயும் ச்சீ வூட்லயும் நன்னா இருக்கேளா ஷேமமா இருங்கோனு தமிழ்லயே பேசி பீத்திக்கலாம்

சீக்கிரமா ஹிந்தில படிச்சு ஒட்னே டெல்லிக்கு கூலி வேலைக்கு பொலாம்

நீட்டா ச்சீ நீட்டுக்கு விழ்ந்து விழ்ந்து பட்ச்சு OBC கோட்டால ஒரு கோட்டாவது ச்சீ கோட்டா சீட்டாவது வாங்கி டாட்ராய்ரலாம்

அப்பால
பட்டேல் செல கண்ல இருக்க ஜூம் லென்ஸை வச்சு பாகிஸ்தான வேவு பாத்து
போர் வெமானத்த மேகத்துகுள்ள பதுங்கி ரேடாரை ஏமாத்தி பாகிஸ்தான் செவுட்டலடிச்சு
அங்க இருக்குறவங்கள்ட்ட
கம்பெனி குடுக்கலாம் ச்சீ
அங்க இருக்க பிஜேபி தலகளோட கம்பெனிய குளோஸ் பண்ணி இந்தியாவுக்கு மாத்தி கல்லால காசு சேக்கலாம்

பெட்ரோல் வெலய முருகன் டாலரவெட ச்சீ அமெரிக்க டாலரவுட சீப்பா சீவலாம் ச்சீ குடுக்கலாம்

கட்ச்சியா
எல்லா நாட்டுக்கும் ஏத்திவுட்ட கோமாதா கறியையும் யூரினையும்

யூரினா?

தமிழ்ல சொன்னா ஒரு மாறி கீது அதான் இங்கிலீஸ்ல....

கோமாதா கறியையும் யூரின் மருத்துவ பானத்தையும்
நம்ம மக்களுக்கே
குடுக்கலாம்

அதனால
அட்டைய எடுங்க
பட்டைய கெளப்புங்க

எதோ எதோ
நமோ வாரியர்ஸ்
சம்போ சங்கீஸ்
காக்கும் காவீஸ்
அக்கும் பொரம்மாஸ்மீ