Tuesday, April 19, 2022

கடுங்கோபத்துடன் தந்தை இளையராஜாவிற்கு

ஆம் நீங்கள் தற்போது தந்தை இடத்தில் தான் தமிழகம் வைத்திருக்கிறது

ஆதலால்தான் அவ்வப்போது நீங்கள் காட்டும் கோவத்தையும், உளறல்களையும், கர்வத்தையும் பொறுத்துவந்தோம். ஆனால் அந்த பொறுமையை நீங்கள் எங்கள் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்க பயன்படுத்தினால் எப்பொழுதும் போல பொறுத்துகொள்ளலாகாது.



...........ராசைய்யாவை இளையராஜாவாக்கியது மக்களும் நீங்கள்பிறந்து வளர்ந்த பின்னணி சூழலுமே. அந்த எளிய மக்கள் சூழலில் பிறந்து வளராமல் மேல்தட்டு மக்கள் சார்ந்த சூழலில் வளர்ந்திருந்தால் இப்படிப்பட்ட இசை உங்களிடம் வந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படிப்பட்ட இளையராஜா சொந்தமாக கருத்து சொல்ல முழு உரிமை உண்டு. அவர் மதவெறியர்களை ஆதரிக்கவும் முழு உரிமை உண்டு. அதேபோல அதை எதிர்த்து சொல்ல எங்களுக்கும் உரிமை உண்டு.

அவர் இதற்கு முன்பு அம்பேத்கரைப்பற்றி எப்பொழுதாவது பேசியிருப்பாரா? நினைத்திருப்பாரா? அப்படி நினைத்திருந்தால் தான் பிறந்த சமூகத்தை தள்ளி மேல்தட்டு பார்ப்பனராய் இருக்க ஏங்கி அழுதிருக்க வாய்ப்பில்லை.

முதலில் அம்பேத்கரை ஒரு மதவெறியரோடு ஒப்பிட்டதே வடிகட்டிய அயோக்கியத்தனம்

நீங்கள் அம்பேத்கரை அந்த மதவெறியரோடு ஒப்பிட்ட முக்கியமான 3 கருத்துகளுக்கு எங்கள் பதிலை சொல்லவேண்டியது எங்கள் கடமை

1. அம்பேத்கரும் அந்த மதவெறியரும் வறுமையான சூழலில் இருந்த வந்தவர்கள் என்கிறீர்கள்

இந்த கூற்றை படித்த போது சிரிப்புதான் வருகிறது. நான் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். அம்பேத்கரின் அப்பா ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றியவர், மேலும் அவர் நடுத்தர மக்களைவிட செல்வ செழிப்பாக வளர்ந்தவர்.

இதிலிருந்தே தெரிகிறது. உங்களுக்கு அம்பேத்கரையும் தெரியவில்லை. அம்பேத்கர் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் என்னென்ன செய்திருக்கிறார் என்றும் தெரியவில்லை.

சரி அவரோடு ஒப்பிட்ட அந்த மத வெறியரை பற்றியாவது தெரியுமா? அதுவும் தெரியாது. அவருக்காக இந்த தகவல்.

நீங்கள் ஒப்பிட்ட அந்த இந்துத்துவ மதவெறியர், காக்கி டவுசர் போட்டு ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பயின்றவர் என்பதாவது தெரியுமா?

மேலும் நான் டீ வித்தேன்னு சொன்ன அவர். எப்போது வித்தார் என்று பார்த்த போது அவர் சொன்ன காலத்தில் அங்கு ரயில் நிலையமும் இல்லை எதுவும் இல்லையென்ற செய்தியாவது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவிலேயே இல்லாத பாடத்தை இல்லாத கல்லூரியில் படித்த அந்த மதவெறியறியரின் கல்வி தகுதி என்னவென்று தெரியுமா?

எல்லாத்துக்கும் மேலே

2002 குஜராத கலவரத்தில் அந்த மதவெறியரின் மேற்பார்வையில் இந்துத்துவா கும்பல் இஸ்லாமியர்களை தேடி தேடி வேட்டையாடியது. உச்ச பச்சமாக கர்ப்பிணிபெண்ணின் வயிற்றை கிழித்து சிசுவை எடுத்து நெருப்பில் போட்டு எக்காளமிட்டது.

இந்த சம்பவம் நடந்துகொண்டிருந்த போது அழகி, ரமணா படத்திற்கு நீங்கள் இசை அமைத்து கொண்டிருந்திருப்பீர்கள். அந்த கலவரத்தைப்பற்றியும் அதில் இறந்து போனவர்களைப்பற்றியும் இதுவரை எதாவது கருத்து கூறியதுண்டா?

2. அம்பேத்கரும், அந்த மதவெறியரும் எப்போது மக்களைப்பற்றி சிந்தித்து கொண்டிருந்தார்கள் உதாரணத்திற்கு முத்தலாக் சட்டம் நீக்கி இஸ்லாமியருக்கு நன்மை செய்ததாக சொல்லியிருக்கிறீர்கள்

இந்த கூற்றை சொல்லும் நீங்கள் சிஏஏ, என்.ஆர்.ஸி, விவசாய சட்டம், புதிய கல்வி கொள்கை, நீட், க்யூட், பண மதிப்பிழப்பு பற்றியெல்லாம் சொல்ல மனமில்லையா இல்லை அதனால் நாடு நாசமாய் போய்க்கொண்டிருப்பது தெரியாதா?

சரி அதை விடுங்கள் நீங்கள் சொன்ன முத்தலாக் சட்டத்திற்கே வருவோம் இன்னொரு மதத்தின் சட்டதிட்டங்களை திருத்தி நன்மை செய்யும் அந்த மதவெறியர்.

சுப்ரீம் கோர்ட் சொன்னதுக்கு அப்புறமும் சபரி மலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் வைத்திருக்கிறார்களே அதற்கு என்ன செய்திருக்கிறார்.
ஹத்ராஸில் இந்து பெண்ணின் முதுகெலும்பை உடைத்து, பாலியல் வன்புணர்வு செய்து, நாக்கை அறுத்து எரித்து கொன்ற போது என்ன செய்தார்?

ஒவ்வொரு கோயில் கருவறையிலும் எந்த தாழ்த்த பட்ட பிற்படுத்தப்பட்ட இந்துவும் நுழைய முடியாமல் இருக்கிறதே அதற்கு என்ன செய்திருக்கிறார்

மாட்டுக்கறி வைத்திருந்ததிற்காக அடித்து கொலை செய்கிறார்களே. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரும்போதெல்லாம் கலவரம் செய்கிறார்களே அதற்கு என்ன செய்திருக்கிறார் அந்த மதவெறியர்

3. அம்பேத்கரும் அந்த மதவெறியரும் இந்தியாவைப்பற்றி கனவு கண்டவர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

இந்த கூற்றிலிருந்து அம்பேத்கர் கண்ட கனவு எங்களுக்கு தெரியும். அது நம் அனைவருக்கும் அதிகாரம், கல்வி உட்பட சமநீதி கிடைக்கும் நாடாக நம் நாடு இருக்கும்.

ஆனால் அந்த மதவெறியர் கண்ட கனவு இந்து ராஷ்ட்ரம் என்ற ஆர்.எஸ்.எஸ் கனவு என்பது உங்களுக்கு தெரியாதா? தெரிந்திருக்க வாய்ப்பில்லையென்றால் இசை அமைப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள்

இந்தியா என்பது மத சார்பற்ற நாடு, இந்த நாடு பன்முகத்தன்மை, பன்மொழி, பல இனம் வாழும் நாடு. பல சமஸ்தானங்களின் ஒன்றியம் என்பது உங்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தெரியும்.

இது போல் எதுவுமே தெரியாமல் இருவரைப்பற்றிய பின்னணி எதுவுமே தெரியாமல். இருவரையும் ஒப்பிடுவது. அறியாமை என்று எடுத்துகொண்டாலும், அதற்காக வருத்தப்படாமல் தன் கருத்தில் உறுதியாய் பின்வாங்காமல் பிடிவாதமாய் இருப்பது கர்வம், திமிர், ஆணவம் இதைத்தவிர வேறென்ன சொல்வது?

இந்த சமயத்தில் கிடைத்தது வாய்ப்பென்று உங்கள் இசை என்னவென்றே தெரியாத அல்லது உங்கள் இசையை கேட்டே இருக்காத சங்கிகளும், இந்து என்ற ஒரு காரணத்திற்காகவே ஆதரவளிக்கும் சிலரை நீங்கள் நம்பி உங்கள் கருத்தில் உறுதியாகக்கூட இருக்கலாம். ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதே கூட்டம் நாளை நீங்கள் கொஞ்சம் இடரி தமிழினத்திற்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் ஆதரவா ஒரு கருத்து பேசினாலும்

உங்கள் இயற்பெயரான டேனியல் ராசைய்யாவை சொல்லி. உங்களை கிறிஸ்தவ கைக்கூலி என்று எள்ளி நகைக்கும். அன்று உங்களுக்காக வரப்போவது நாங்கள்தான்


இன்று காவிப்பாசாம் பிடித்த உங்கள் எண்ணத்தினால் உங்களுக்கு ஜனாதிபதவியே கூட தரலாம் ஆனால் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

நீங்கள் அந்த இருக்கையை விட்டு எழுந்து போன பின் அந்த இடத்தையே தீட்டு என்று கழுவிவிடுவார்கள். சந்தேகம் இருந்தால் தற்போதைய ஜனாதிபதியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

எனக்கு தெரிந்து இனி நெஞ்சை அள்ளும் இசை உங்களிடமிருந்து வராது வரவே வராது
அது ஏன் என்று உங்களவாவிடம் கேளுங்கள்
அல்லது உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்

இறுதியாக

இலைநிறைய
அறுசுவை உணவு வைத்து
பஹவான் பெயரால்
சாப்பிடு நாயே என்று சொன்னால்
நீங்கள் வேண்டுமென்றால்
குருபிரம்மா குருவிஷ்ணு சொல்லி
நீங்க வேணா சாப்பிடுவீங்க

ஆனால்
உங்க பிள்ளைகளாகவே இருந்தாலும்
விருட்டென எழுந்து இலையை வீசியெறிந்து
வெளியேறுவோம் நாங்கள்
ஏன்னா
சோறைவிட எங்களுக்கு முக்கியம்
சுயமரியாதையும் சமூக நீதியும்

வயதானதால் நீங்கள் மறந்திருக்கலாம்

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு

- ரெ

குறிப்பு:-
இந்த கட்டுரையில் நான் மதவெறியர் என்று குறிப்பிட்டுருப்பது யார் என்று அவரவர் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறேன். ஏனெனில் அம்பேத்கர் என்ற எழுத்துக்களுக்கு பக்கத்தில் எழுதக்கூட அவருக்கு தகுதியில்லை. வேண்டுமானால் மதவெறியரோடு கலவரக்காரர் என்று போட்டுக்கொள்ளுங்கள்