Wednesday, September 5, 2018

நல் ஆசிரியர்கள் வாழ்க !

சிறந்த கவிஞரும், சமுக சீர்திருத்தவாதியும், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் அன்னை சாவித்திரிபாய் பூலே அவர்கள்தான் ஆசிரியர்கள் தினத்தில் நினைவு கூறத்தக்கவரே ஒழிய இராதாகிருஷ்ணன் அவர்களல்ல..!
At least அப்துல்கலாம் அய்யா பேரிலாவது மாற்றலாம்

(ஏன்? குறிப்பா ராதா கிருஷ்ணன் பெயரால் இருக்கக்கூடாது என்பதன் காரணம் கடைசியில்)


அதற்குமுன்பு 

சாவித்திரிபாய் பூலே  பற்றி அறிந்து கொள்வோம். இவர் 1831 இல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் வயதில் ஜோதிராவ் புலேவை( 13 வயது) 1840இல் மணந்தார். ஜோதிராவ் புலே தனது துணைவி சாவித்திரிபாயை சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.  யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். 


ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட சமுகத்து பெண்களுக்குக் கல்வி புகட்டினார். 

1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. 

பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.

விதவைப் பெண்களின் தலையை மொட்டையடிப்பதைக் கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை சாவித்திரி பாய் நடத்தினார்.

1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார்.

1897 இல் ஏற்பட்ட பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக,சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது. சாவித்திரிபாய் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அம்மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 இல் இறந்தார்.


1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை, சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் கவிதைகளான 'கவிதை மலர்கள்' என்ற நூலை வெளியிட்டார்கள்.

பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயில் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தியது.

2015 இல் புனே பல்கலைக்கழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது.


மார்ச் 10, 1998 அன்று, இந்திய அஞ்சல் துறை இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டு பெருமைத் தேடிக் கொண்டது. 

ஆசிரியர் தினத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக தன் வாழ்வை அர்பணித்த அன்னையைப் இந்நாளில் போற்றுவோம்..!

இப்பொழுது ஏன்? குறிப்பா ராதா கிருஷ்ணன் பெயரால் இருக்கக்கூடாது என்பதன் காரணத்திற்கு வருவோம்

கல்லூரி பேராசிரியராக வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது இந்த வேலை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு (Indian ambassador) இந்திய தூதுவர்  வேலை வேண்டுமென்று பணியில் சேர்ந்து *சேவை* செய்தார்.

என்ன மக்கள் சேவை அல்லது கல்விப்பணி செய்தார் என்று நீங்களே தேடிப்பாருங்கள் அல்லது கேட்டுப்பாருங்கள்.

அப்துல் கலாம் அவர்கள் NASA உள்பட உலகின் பல நாடுகள் தங்கள் நாட்டில் உயரிய வேலை தருகிறோம் என்ற போது நான் என் நாட்டுக்காகத்தான் சேவை செய்வேன் என்றார். அதே போல் ஜனாதிபதி பணியிலிருந்து  ஓய்வு பெற்ற பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்ட போது நான் ஆசிரியராக பணிபுரிய ஆசைப்படுகிறேன் என்று சொன்னார். செய்தும் காட்டினார். தன் வாழ்நாள் முழுவதும் மாணவர்களுடன் உரையாடுவதையே விரும்பினார். தன் உயிரையும் மாணவர்களுடன் உரையாடும் போதே துறந்தார்.