Monday, December 14, 2020



























நான் பாரதி வந்திருக்கிறேன்
பாரதி யார்? என்று
சிலர் கேட்பது என் காதுகளில் விழுகிறது
உங்கள் கேள்வியிலேயே பதிலுண்டு

ஆம்
பாரதியாரென்றும் என்னை அழைப்பர்
இன்னும் விளங்கவில்லையா?

மதம் கொண்ட யானையினால்மரித்துப்போன 
மகா கவி என்று பெயரெடுத்தவன்
எட்டையபுரத்திலிருந்து இன்னொரு முறை
எழுந்து வந்திருக்கிறேன்
 
இப்போது ஏன் மறுவருகை என்று
என்னை நீங்கள் கேட்டால்?

எதிலாவது இச்சமூகம் மாறியிருக்கிறதா
என்று பார்க்கும் ஆசையில்தான் வந்தேன் இப்படி!
 
இக்கணம் வரை இந்தியா முழுவதும் சுற்றிவிட்டேன்

இப்போது யாம் அறிந்த மொழிகளிலே
தமிழ்போல் இனிதாவதெங்கும் காணோம் என்ற
எம் தமிழ் சூழ் நிலம் நிற்கிறேன்

ஓடி விளையாண்ட பாப்பாக்களே
ஓய்வறியா இவ்வுலகத்தில் 
ஓயாது பெற்றோர் கனவு மெய்ப்பிக்க
ஆடி ஆடி ஓடி ஓடி தேடி தேடி
தீர்த்துவைக்கும் கைநூல் பொம்மையாய்
சுற்றி சுற்றி வெற்றி நோக்கியே சுழன்றதால்
அப்பாலகர் இழந்த பால் பருவம் கண்டு

ஓடி விளையாடு உன் வீட்டுக்குள்ளே
என்றா நான் பாடினேன்? என்று கேட்க தோணுது

மாதர் உம்மை உணர்ந்து விட்டீர்
மடமையை மாதரே கொளூத்துகிறீர்
கல்வியில் சிறந்து ஓங்கவே     
கண்டம்விட்டு கண்டம்கூட பாய்கிறீரே
என்றெண்ணும் வேளையில்

பால் வேட்கையில் பாலியல் வேட்டைக்கு
பலியாகும் பால்பருவ மழலைக்கு
பாகுபாடு பார்த்தே பாவம் பார்ப்பது சரியா?

மாட மாளிகை மாதருக்கும்
மண்குடிசை மாதருக்கும் ஓரே மானம்
என்று உணரா மாதரே நீ மாற
மாதரென்றால் எல்லோரும் மாந்தரே என்று
இன்னோர் கவிபாட எனக்கு தோணுது  
 
 
காதலை கொண்டாடிய நான்
காதலியை கண்ணம்மாவாக்கினேன்
கண்ணம்மா காதலர்களின்
பொதுவுடைமை பெண்பாலானாள்
கண்ணப்பன்களை ஆண்பாலாக்கி
பெண்டிருக்கு பொதுவுடைமை செய்யாதது
என் பிழையல்ல

நான் வெறும் கோடிட்டேன்
என்பின்னே சாலையிட
என்னைப்போல் கவி வருவானென்று
நினைத்தே அப்பிழை விட்டேன்
 
இன்றோ 
இங்கே சட்டம் போட்டு 
காதல் சமைக்கின்றீர்
சைவெமென்றும் அசைவமென்றும்
சாதியென்றும் மதமென்றும்
விதவித பண்டங்கள் பல வண்ணங்களில்
உண்போருக்கோர் சுயம்
உண்டோருக்கோர் பயம்
இலைமுன் இருப்போருக்கோர் ஐயம்
எடுக்கவோ கடிக்கவோ
என்று யோசிப்பதற்கா காதலுணவு
 
பரந்துவிரிந்த இந்த பாரில்
காதலால் வந்தது உயிரினங்கள்
அதற்கு மூலக்கூறுகளூம் இருந்ததில்லை
வாய்ப்பாடுகளும் இல்லை
இலக்கணங்களும் இல்லை
அதை குறிக்க இலக்கங்களும்
இதுவரை இல்லை இனியும் இல்லை

காதல் இயற்கை 
அது மானுட நிலை
என்று புரியாத பதர்களுக்கு
காதலால் ஆன கவிதைகளை
நிறைய எழுதாமல் விட்டுவிட்டோமே
என்றழுகத்தோணுது

காக்கையையும் குருவியையும்
மானுட சாதியாய் ஆக்கிய நான்
அம்மானிடமோ சந்துக்கொரு சாதி 
சங்கம் தமிழுக்கல்ல சாதிக்கென்று  கண்டு  
காக்கையையும் குருவியையும்
ஏன் நான் கட்டிப்பிடித்த கழுதையையும்கூட
பறவையாய் விலங்காய் பறந்தும் திரிந்தும்
பாரெங்கும் பழையபடி பண்பாய் வாழச்சொல்ல தோணுது
 

எங்கு காணினும் சக்தியடா
என்று சொன்னதை 
எப்படி எடுத்துக்கொண்டதோ?
இந்த மனித புத்தி
சக்தியை மத யுத்தியாக்கிய
இச்சைவ சவர்க்கர்கள் கண்டு
எனக்கோர் பயம்
 
எங்கேனும் இன்னோர் மதம் பிடித்த ஆணை
என்னை ஏறி மிதிக்கும்
என் பயம் எனை சூழ்ந்தாலும்
 
இன்னும் எங்கோ சில கங்கு வெப்பம்
சுள்ளென சற்றே சுட்டும் ஒளி வீசி எறிகிறது
நான் பற்றவைத்த தீ குஞ்சுகள் அவை
என் எழுத்தை கவிதையை
சரியாய் புரிந்து எரிந்து சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்
அவை இருக்கும் நம்பிக்கையால்தான்
 
தேடிச்சோறு நிதந்தின்று- பல
சின்ன்ஞ்சிறு கதைகள் பேசி- மனம்
வாடி துன்பமிக உழன்று-பிறர்
வாட பல செயல்கள் செய்து-நரை
கூடி கிழப்பருவ மெய்தி- கொடுங்
கூற்றுக் கிரையெனபின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப்போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

என்று இன்னும் சத்தமாய்
கத்தி கவிபாட தோணுது

திரும்ப திரும்ப வருவேன்
வெந்து தணிந்த அநீதிக்காடு காணும்வரை

- ரெபி

-  

Wednesday, December 9, 2020

மார்பக வரிச்சட்டம்

குஷ்பு வானதி தமிழிசை மற்றும் வரலாறு தெரியாத சங்கி வகையறாக்களின்

கவனத்திற்கு!

இந்தியாவில் எத்தனையோ
விசித்திரமான சட்டங்கள்
இருந்தது அதில் ஒன்று தான்
இந்த மார்பகவரி சட்டம்

1800 களில் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட
திருவனந்தபுரம் கன்யாகுமரி
போன்ற கேரளா பகுதிகளில்
தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பக வரி செலுத்தி ஆக
வேண்டும் என்று சட்டம்
இருந்தது

இது நாடார், சர்வர், ஈழவர்
முக்குவர், புலையர் என்ற
18 தாழ்த்தப்பட்ட ஜாதியினர்
மீது சுமத்தப்பட்டது

இது உயர் ஜாதி நம்பூதிரிகள்
பிராமணர்கள், நாயர்கள்
ஆகியோருக்கு மரியாதை
செலுத்தும் விதமாக இந்த முலைவரி சட்டம் அமுலில் இருந்தது.

பெண்கள் மேலாடைகளே அணியக்கூடாது தங்களின் மார்பகங்களின் அளவிற்கு
ஏற்ப வரி செலுத்தவேண்டும்

இந்த ஜாதிக்கொடுமைக்கு
எதிராக போராடிய வீரபெண்
நாங்கிலி  30 வயது அழகு தாழ்த்தப்பட்ட பெண்  வரி கட்ட மறுத்து போராடினாள்

திருவாங்கூர் அரசு இவளுக்கு இரட்டை வரி
விதித்ததன் காரணம் இவள் மார்பகங்கள் சற்று பெரிதா
இருந்ததால்

பலமுறை வற்புறுத்தியும்
வரி கட்ட மறுத்தாள்
இறுதியில் வரி வசூல்
செய்யும் பார்வாத்தியார்
நாங்கிலியின் வீட்டிற்கு 
வந்துவிட்டார் கூட்டத்தோடு

நாங்கிலி  ஒரு நிமிடம் காத்திருங்கள் என்று உள்ளே சென்றவள்
வாழை இலை எடுத்து வந்து
விரித்தாள் தன்னுடைய மார்பகங்களை அறுத்து வைத்தாள். அப்படியே கீழே சரிந்து உயிர் நீத்தாள் அந்த மானமிகு வீரபெண்.

அவள் இறந்ததும்  அவள் வாழ்ந்த ஊர் முலைச்சிபரம்பு
என்று அழைக்கப்பட்டது

இன்று அதன் பெயர்
மாற்றப்பட்டு மனோரமா காவலர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

நாங்கிலி இந்த தேசத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றின் முதல் அத்தியாயம்.

மனுதர்மத்திற்கு வக்காலத்து
வாங்கும் மனிதர்களே உங்க
மனசாட்சியை கேளுங்கள்

தமிழை அமுதென்றறிவது

ஒருதுளி அது மா கடல்
நீந்தி முத்தெடுப்பது உன் மதி

ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் இலை என்று பெயர்

அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை கீரைஆகின்றது.

மண்ணிலே படர்கின்றவை கொடிவகை இலைகளுக்குப்
பூண்டு என்று பெயர்

அறுகு, கோரை முதலிய இலைகள் புல் ஆகின்றன

மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்கு பெயர் தழை

நெல், வரகு முதலியவற்றின் இலைகள் தாள் ஆகும்.

 சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளின் பெயர்  மடல்

கரும்பு, நாணல் போன்ற இலைகளின் பெயர் தோகை

தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகளுக்கு 
ஓலை என்று பெயர் 

இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களில் இலக்கணம் மட்டுமல்ல,
தாவரவியல் அறிவியலும் 
அடங்கி இருக்கிறது.

முடிந்தால் தேடிக்கூறு பிற மொழியில் இவ்வாறெல்லாம் இருக்கிறதென்று சான்றுடன்

இனி நாங்கள் தமிழெக்கென்று
நிறமுண்டு தனியே அதற்கு
ஒரு குணமுண்டு என்று
கூவப்போவதில்லை

முடிந்தால் ஆடு இல்லை ஓடு


 சார் Racism ஒங்கள ரொம்ப கஷ்டப்டுத்துது ஒத்துக்கிறோம்

நம்ம ஊர்ல இன்னொன்னு பண்றோமே Castism 
அப்டினா என்ன?

ஏன்னா 

Racism பாக்குற வெள்ளக்காரன் எந்த வெள்ளக்காரியையும் காதல் பண்ணலாம், கல்யாணம் பண்ணலாம்

Racism பாக்கப்படுற கருப்பரும் எந்த கருப்பியையும் காதல் பண்ணலாம், கல்யாணம் பண்ணலாம்

இதில் சில சமயம் வெள்ளைகாரன் கூட கருப்பிய கருப்பன்கூட
வெள்ளைக்காரிய காதல் பண்றான், கல்யாணம் பண்றான் ஆனால் South Asians எப்பிடிப்பா இருக்கோம்?

ஆனால் நம்மூரில்???????

நாம் படித்தும், வேலைக்கு
வெளிநாட்டுக்கு வந்தும்
இங்குள்ள பெரும்பாலான சமத்துவத்தை பார்த்தும் கொஞ்சமும் திருந்தாமல் 

அங்குள்ள அதே Castismஐ 
Digital Clubsஸா, websitesஸா, Facebookல், Twitterல் தூக்கி சுமக்கும்
அதே South Asians தான் நாம எல்லோரும் இல்லை
ஆனால் பெரும்பாலோர்

இந்த அறிவியல் பரிணாம வளர்ச்சிக்கெல்லாம் பெயர்
என்னப்பா? Racismமா?

நமக்கு வந்தா ரத்தம்!

நாம சொல்லும் SouthAsiaல் 
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கு வந்தா தக்காளி சட்னியாப்பா

முதலில் நம்ம யோக்கியதை
என்னவென்று பார்ப்போம்
அப்பால Racism பத்தி நாம பேசலாம் South Asians

கடந்த  2  ஆண்டுகளில்



வைரமுத்துவின் கருத்து  இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் விஜய் திரைப்படம் இந்துக்களை புண்படுத்திய தால் பிஜேபி போராட்டம்!

நெல்லை கண்ணன் பேச்சு இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

சுகி சிவம் பேசிய கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகர் சிவகுமார் கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

விஜய் சேதுபதி கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

நடிகை ஜோதிகா கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்!

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் கருத்து
இந்துக்கள் மனதை புண்படுத்தியதால் பிஜேபி போராட்டம்

இந்து மனம் புண்பட்டதால் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்தும் போராட்டம்

இந்து மனம் புண்பட்டதால் 
எம்ஜிஆர் சிலைக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை!
இந்து மனம் புண்பட்டதால் 
பெரியார் சிலைக்கு காவி உடை சர்ச்சை!

இந்து மனம் புண்பட்டதால் 
பெரியார் சிலைகளை சேதப்படுத்தி பதட்டம்!

இந்து மனம் புண்பட்டதால் 
அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டி பதட்டம்!

இது போல கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் ஒரு முறை யாராவது, எங்காவது, எதையாவது பேச அதை வைத்து பிஜேபி போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று 7 கோடி தமிழ் மக்களையும் திசை திருப்பி வருகிறது.

இவர்கள் இப்படி திட்டமிட்டு திசை திருப்பி வருவதால்
மத்திய அரசு மாநில அரசால் பாதிக்கப்படும் மக்களின் அன்றாட பிரச்சினைகள் முக்கியத்துவம் இல்லாமல் நீர்த்துப் போகின்றன.

அவைகளின் பட்டியல் கீழே
- நீட் தேர்வு
- ரஃபேல் ஊழல்
- இந்தி திணிப்பு
- விலைவாசி உயர்வு
- கீழடி ஆய்வு முடக்கம் 
- வேலைவாய்ப்பின்மை
- காவல் துறை அராஜகம்
- புதிய மீன்பிடி கொள்கை
- OBC இட ஒதுக்கீடு பறிப்பு
- பணமதிப்பிழப்பு தோல்வி
- GST வரி மற்றும் வரிஉயர்வு
- தூத்துக்குடி படுகொலை
- பெட்ரோல் டீசல் விலை    
   உயர்வு
- கேஸ் சிலிண்டர் விலை 
   உயர்வு
- 5 மற்றும் 8 வகுப்பு 
   பொதுத்தேர்வு
- எட்டு வழிச்சாலைக்கு 
   புதிய வடிவம்
- காவிரி மேலாண்மை 
   உரிமை பறிப்பு
- 2020 புதிய சுற்றுச்சூழல் 
  தாக்க மதிப்பீடு
- தமிழக பணியில் வட 
  இந்தியர் நியமனம் 
- புதிய கல்வி கொள்கை 
  என்ற குலக்கல்வி
- காவிரி டெல்டா பகுதி 
  கார்ப்பரேட்டுகளுக்கு 
  தானம்

எனறு அனைத்து மக்கள் பிரச்சினைகளையும் பிஜேபி திட்டமிட்டு திசை திருப்பி வருகிறது.

தமிழகம் மக்கள் அனைவரும் குழம்பி விடாமல், சுயமாக தெளிவாக சிந்தித்து தங்கள் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுகாதாரம், நல்லிணக்கம் போன்றவற்றில்
கவனம் செலுத்த வேண்டும்.

தினந்தோறும்  நம்மை திசை திருப்பும் பிஜேபியை மக்கள் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

இல்லையென்றால் தமிழகம்
உத்திர பிரதேசத்தைப்போல் பின்னடைவை சந்திக்கும்
அம்பேத்கரை தமிழ் சினிமா எவ்வாறு கையாள்கிறது
எவ்வாறு கையாளவேண்டும்

நன்றி விகடன் 


அரசியல் சார்பற்றது என்று சொல்லப்பட்டாலும்கூட, தமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்தே அது ஏதோ அரசியலைச் சார்ந்துதான் இருக்கிறது, படத்தின் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, சமயங்களில் பாடலாசிரியர் அரசியல்கூட திரைப்படத்தில்
பிரதிபலிப்பது உண்டு. அந்த 'சிவகாமியின் மகனிடம் சேதி சொல்லடி' என்று காங்கிரஸில் சேருவதற்காக காமராஜரிடம் கண்ணதாசன் பட்டணத்தில் பூதம் பாடல் மூலம் தூதுவிட்டார்.

தமிழ் சினிமாவை முழுக்க அரசியலுணர்வுடன் நன்கு பயன்படுத்தி வெற்றி கண்ட இயக்கம் திராவிட இயக்கம்.

பத்திரிகை, இலக்கியம், நாடகம், திரைப்படம் என எல்லாவற்றையும் தங்கள் கொள்கை பரப்பும் சாதனங்களாகவே கண்ட திரைப்பட இயக்கத்தினர், திரைப்படங்களில் தங்கள் தலைவர்களின் பிம்பங்கள், கொடியின் நிறம், சின்னம் ஆகியவற்றை நேரடியாக குறியீட்டு ரீதியிலாகவோ காட்சிப்படுத்தினர். ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம், திராவிட இயக்க சினிமா உச்சத்தில் இருந்த காலத்தில் அவர்களின் முன்னோடியான பெரியார் பெரிதாக திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது. காரணம் அவருடன்
 முரண்பட்டு தனிக்கட்சி கண்ட தி.மு.க, அவருக்கோ அவர் கருத்துகளுக்கோ எதிரா சித்திரிக்கவில்லையே தவிர பெரியார் உருவத்தை திரைப்படங்களில் காட்சிப்படுத்தவுமில்லை.

உதயசூரியன், கறுப்பு - சிவப்பு, காஞ்சித்தலைவன் என்று இயன்றவரையில் தி.மு.க அடையாளங்கள் அவர்கள் திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' என்ற எம்.ஜி.ஆர் பாடும் பாடலில் மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்றே ஒலிநாடாவில் இருக்கும்.  தணிக்கை காரணமாகப் படத்தில் 'மேடையில் முழங்கு திரு.வி.கவைப்போல' என்று மாறியிருக்கும்.  பெரியார், அண்ணா இருவருடனும் நட்புடன் இருந்த, காந்தியத்தின் மீதும் ஈர்ப்பும் மரியாதையும் கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் 'தீனா மூனா கானா' என்றே பாடல் பாடினார். திராவிட இயக்கச் சினிமாக்களில் பெரியார் அவ்வளவு பெரியதாகவே காட்சிப்படுத்தப்படாதது
போல் அம்பேத்கரும்கூட காட்சிப்படுத்தப்படவில்லை

திராவிட இயக்க சினிமா அலை ஓய்ந்தபிறகு அரசியல் சினிமா குறைந்துவிட்டன. பாரதிராஜா படங்களில் அரசியல் பேசப்பட்டாலும் அவர் எந்த குறிப்பிட்ட இயக்கத்தையும் வலிந்து காட்சிப்படுத்தவில்லை. குறிப்பாக 'வேதம் புதிது' போன்ற நேரடியான நாத்திகமும் பார்ப்பன எதிர்ப்பும் பேசிய படத்திலும் பெரியார் குறித்து எப்படியும் காட்சிப்படுத்தப்படவில்லை. பாரதிராஜாவும் பாலசந்தரும் இருவர் எடுத்த பெண்ணியம் பேசும் படங்களில் அதிகமும் பாரதியாரின் உருவப்படமும் பாடல்வரிகளுமே வலிந்து காட்சிப்படுத்தப்பட்டன.

அவை முழுமையான பெண்ணியப்படங்களா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் தீவிரப் பெண்ணியக் கருத்துகளை முன்வைத்த பெரியாரை ஏன் அவர்கள் காட்சிப்படுத்தவில்லை? என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

பாரதிராஜாவின் சீடரான மணிவண்ணன் மார்க்சியம், பெரியாரியம் அம்பேத்கரியம், தமிழ்த்தேசியம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவரது படங்களில்தான் ஓரளவுக்கு அரசியல் தன்னுணர்வுடன் அம்பேத்கர், பெரியார் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஏன் தமிழ் சினிமாக்களில் அம்பேத்கர் படங்கள் அதிகம் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதற்கான பதில் மிக எளிமையானது. தமிழ் சினிமா நாயகர்களாகத் தலித் பாத்திரங்கள் இடம் பெறாதபோது அங்கே அம்பேத்கரும் இடம்பெறவில்லை.
சில சமயங்களில் நாயகர்களின் நண்பர்களாக, சீர்திருத்தப்பட வேண்டியவர்களாக, எளிய வாய்ப்புகளையும் தியாகம் செய்பவர்களாகத் தலித் பாத்திரங்கள் சித்திரிக்கப்படும்போது மூலையில் அம்பேத்கர் படமும் இடம் பெற்ற சாத்தியங்கள் உண்டு. விசுவின் படங்களைப் போலவே குடும்ப நாடகமாக எடுக்கப்பட்ட வி.சேகர் படங்களில் சாதி மறுப்பு, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணுரிமை ஆகியவை பேசப்பட்டதுடன் பெரியார், அம்பேத்கர் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பெரியாரிஸ்டான வேலு பிரபாகரன் இயக்கிய 'கடவுள்' படம் அம்பேத்கரின் பிம்பத்தைக் காட்சிப்படுத்தவில்லையே தவிர, தலித் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையைப் பிரசார பாணியில் சொன்னது.

90களில் கிராமப்படங்கள் என்ற பெயரில் எடுக்கப்பட்ட நாட்டாமை, பண்ணையார் நிலப்பிரபுத்துவப் படங்கள் மிகக் கொடூரமானவை. அவை உழைக்கும் மக்கள் நாட்டாமைக்கும் பண்ணையாருக்கும் குடை பிடிப்பதையோ காலில் விழுவதையோ காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வதையோ எந்தக் கூச்சமும் இல்லாமல் காட்சிப்படுத்தின. இவர்கள் எல்லாம் யார் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. விவசாயக்கூலி அல்லது வேலைக்காரப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு நாட்டாமை பஞ்சாயத்து தீர்ப்பு கூறும் காட்சி இடம்பெறாத கிராமப்படங்களே இல்லை எனலாம். ஒரு பாலியல் வன்புணர்வுக்குக்கூட சட்டப்படியான நீதி கிடைத்ததாகச் சரித்திரமில்லை. இந்தப் படங்கள் எல்லாம் சட்டத்துக்கு வெளியே இயங்கிக்கொண்டிருந்தது விநோதமானதுதான்.

2000க்குப் பிறகுதான் தமிழ் சினிமாவின் முகம் மாறத்தொடங்குகிறது. மேல்பூச்சு முற்போக்கைத் தாண்டி அரசியல் தன்னுணர்வு கொண்ட சினிமாக்கள் உருவாகின. இதற்கான முன்னோடிப்படமாக இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் 'ஈ' படத்தைச் சொல்லலாம். ராமநாராயணன் படத்து மசாலா கம்யூனிசமாக இல்லாமல் நேரடியான மார்க்சிய-லெனினிய அரசியலைச் சித்திரித்தது 'ஈ'. கம்யூனிச அடையாளங்களே காட்சிப்படுத்தப்பட்டபோதும் சாதிய ஒடுக்குமுறையையும் வர்க்க அரசியலையும் இணைத்ததன் மூலம் அம்பேத்கரிய அரசியலும் உள்ளார்ந்து இருந்தது.

வெளிப்படையாக அம்பேத்கரைத் திரைப்படங்களில் சித்திரிப்பது, தலித் அரசியலைப் பேசுவது ஆகியவற்றைத் தொடங்கிவைத்தவர் பா.இரஞ்சித். அவரது முதல் படமான 'அட்டக்கத்தி' காதல் - காதல் தோல்வி குறித்து பகடியாகச் சித்திரித்த படம் என்றாலும் சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் அம்பேத்கர் உருவப்படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார். இங்கிருந்தே இரஞ்சித்தின் அரசியல் செயற்பாடு தொடங்குகிறது என்று சொல்லலாம். 'மெட்ராஸ்' திரைப்படத்தில் நேரடியாகவே தலித் அடையாளங்களைப் பாத்திரங்களாக மாற்றியதுடன் அம்பேத்கர், குடியரசுக் கட்சி, அயோத்திதாசர், நீல நிறம் என தலித் அரசியல் அடையாளங்களைக் காட்சிப்படுத்தினார்.

வணிகரீதியாகவும் 'மெட்ராஸ்' வெற்றி பெற்றதால் நீலப்புரட்சி பரவலானது. அவரது அடுத்தடுத்த படங்களான 'காலா', 'கபாலி' படங்களிலும் வசனங்கள், பாடல்கள், காட்சிகள் ஆகியவற்றில் அம்பேத்கர் சித்திரிக்கப்பட்டார். இரஞ்சித்தைத் தொடர்ந்து அம்பேத்கர், பெரியார், மார்க்ஸை முன்வைக்கும் அரசியல் சினிமாக்கள் தமிழில் அதிகமாக வரத்தொடங்கின. 'விசாரணை'யில் மனித உரிமை அரசியலைப் பேசிய வெற்றிமாறன் 'அசுரன்' படத்தில் பஞ்சமி நிலப்பிரச்னை, தலித் அரசியல் என்று நேரடியாகவே காட்சிப்படுத்தினார்.

ஜீவா' படத்திலேயே கிரிக்கெட்டில் நிலவும் சாதி குறித்து தொட்டுக்காட்டியிருந்த சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' திரைப்படம் முழுக்க முழுக்க சாதி எதிர்ப்புப் படமாக உருவாகியிருந்தது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் படங்களும் அடையாளங்களும் வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டன. ராஜூமுருகனின் 'ஜோக்கர்' திரைப்படத்திலும் 'ஜிப்ஸி'யிலும் தொடர்ச்சியாக அம்பேத்கர் காட்சிப்படுத்தப்பட்டார். இயக்குநர் பிரம்மாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படத்தில் ஜோதிகா அம்பேத்கரை முன்னிலைப்படுத்தும் பெரியாரிஸ்ட்டாக நடித்திருந்தார். உடுமலை சங்கர் - கௌசல்யா சம்பவமும் கதையினூடாகவே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 'சூரரைப் போற்று' போன்ற மணிரத்னம் பாணியில் உருவாகியிருந்த சினிமாவிலும்கூட இன்று அம்பேத்கரையும் பெரியாரையும் தவிர்க்க முடியாது என்ற சூழல் உருவாகியிருக்கிறது. மற்ற திரைப்படங்களில் இருந்து விலகி 'மகாமுனி'யில் பௌத்தம் தழுவிய துறவுநிலை அம்பேத்கர் சித்திரிக்கப்பட்டிருந்தார். மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை என்று அம்பேத்கரிய அரசியலை எடுத்துச் செல்லும் பல இயக்குநர்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள்.

அம்பேத்கரோ பெரியாரோ மார்க்ஸோ விற்பனைச் சரக்கு என்று உணர்ந்து அவர்களை வெறுமனே பிம்பங்களாகச் சித்திரிக்கும் படங்களும் வரத்தொடங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு 'கறுத்தவன்லாம் கலீஜா' என்ற பாடல் வெளியிட்டபோது அம்பேத்கரின் உருவமும் அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்தப் படம் பேசும் கருத்துகளுக்கும் அம்பேத்கருக்கும் எந்தத் தொடர்புமில்லை. விடுதலை அரசியலை முன்வைத்தவர்களைத் தவிர்க்க முடியாத சூழல் உருவாகியிருப்பது என்பது வரவேற்கத்தக்கதே என்றாலும் அவர்களை வெறுமனே பிம்பங்களாக மாற்றிவிடக்கூடிய, அவர்கள் கருத்தியலுக்கு எதிரான படங்களில்கூட அவர்களின் பிம்பங்கள் இடம்பெறக்கூடிய அபாயமும் உண்டு என்ற எச்சரிக்கை தேவை.

இரண்டாவதாகத் தலித் பாத்திரங்கள் இடம்பெறக்கூடிய கதையிலோ தலித் அரசியல் பேசும் சினிமாக்களில் மட்டுமே அம்பேத்கர் என்று சுருக்கிவிடக்கூடாது. அம்பேத்கர் வெறுமனே தாழ்த்தப்பட்ட தலைவர் மட்டும் அல்லர். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோல்களின் வழியாக இந்தியச் சமூகத்தை ஆராய்ந்த அறிவின் சின்னம் அவர். தன்னால் முடிந்தளவு சட்டங்களினூடே அறத்தைத் தூவிய அறக்காவலர். ஆழ்ந்த படிப்பாளி. அவர் பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர்கள், பெண்கள் என பலதரப்பு மக்களுக்கும் ஆற்றிய பங்களிப்புகள் அதிகம்.

Saturday, October 17, 2020


 பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன ஆர்எஸ்எஸ் சங்கிகள். தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?

2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?

4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?

6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?

7) முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?

8) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?

13) முன்பு ஆர்எஸ்எஸ் தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு என்று அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விலக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே! இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?

14) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?

15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

17) முன்று எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே! இன்று அதுபோல் வரி போட முடியுமா?

18) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?

19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?

21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

24) இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

25) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க. குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?

26) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?

27) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?

28) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?

29) அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?

30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?

31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?

34) இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எறித்தார். பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவது நீங்கள்தான் என்பது திண்ணம்! பெரியார் பெரும்படை அதனை முறியடிக்கும் எச்சரிக்கை!

நன்றி :

#பெல் ஆறுமுகம்!

Monday, October 12, 2020




ஒரு குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை வைத்து அந்தக் குடும்பத்தின் அரசியல் பின்னனியை ஓரளவு கணித்துவிடலாம்

1950-55 களின்  இங்கர்சால், பெர்னாட்சா, லெனின், ஸ்டாலின், ஜீவா போன்ற பெயர்கள்

1960கள்  ராஜேந்திரன், சோழன், மாறன், சேரன், இளங்கோவடிகள், தொல்காப்பியன், நக்கீரன், திருவள்ளுவன், தமிழரசன்  போன்ற பெயர்கள்;

1970 களில் அண்ணாதுரை, சம்பத், கருணாநிதி, வீரமணி, நெடுஞ்செழியன் போன்ற பெயர்கள் எந்த வீட்டிலாவது இருந்தால் அது நிச்சயமாக திராவிடர் கழக  அல்லது திமுக குடும்பமாக பெரும்பாலும் இருக்கும்.  

காரணம் என்ன தெரியுமா?

அந்த  இயக்கங்களின் பொதுக்கூட்டங்கள் என்பது மாலை நேர வகுப்புகளுக்கு நிகரானதாக இருந்து. 

உலக வரலாறுகள், இலக்கியங்கள் என அத்தனை அறிவு சார்ந்த தகவல்களை சொல் நயத்துடம் பாடம் நடத்திய பொதுக்கூட்டங்கள் ஏராளம். 

இந்த வரிசையில் தான் 1984ஆம் ஆண்டுக்கு பிறகு பல திமுககாரர்களின் வீடுகளில் சூட்டிய பெயர் பிரபாகரன். 

இப்பவும் பிரபாகரன் என்ற பெயருடைய முப்பது வயதை தொட்டவர்களின் தகப்பனார்கள் பெரும்பாலும் திமுககாரராகவே இருப்பார். அது வெறும் பெயரல்ல. உணர்வின் அடையாளம். மற்றவர்களைப் போல ஃபேக் ஐடிக்கு வைத்துக் கொண்ட பெயர் அல்ல.  

யாருக்கு யார் ஈழ உணர்வை ஊட்டுவது? 

கஞ்சா கடத்தல், சாயாரம் கடத்தல் மாதிரி செய்தி கடத்தல் கேள்விப்பட்டு இருக்கீங்களா? 

இப்போது போல வாட்ஸ் அப், முகனூல் இல்லை. 

இலங்கையில் நடக்கும் போரின் படங்கள் கோடியக்கரை வரை வரும். 
அதனை சிவகாசிக்கு கொண்டு சென்று போலீஸுக்கு தெரியாமல் அச்சடிக்க வேண்டும். அச்சடிக்கப்பட்ட படங்களை ஊர் ஊராக அனுப்ப வேண்டும். 

இதெல்லாம் யார் செய்தது?

இன்று வெவ்வேறு இயக்கத்தில் இருக்கலாம் ஆனால் அன்று திமுகவில் அல்லது திமுகவின் ஆதரவு பெற்ற அமைப்புகளில் இருந்தவர்கள் மட்டுமே செய்தனர். 

1970களில் பிறந்தோருக்கு அரசியல் புரியத் தொடங்கிய காலத்தில் நன்கு தெரிந்த  அரசியல்வாதிகள் என்றால் தலைவர் கலைஞரை தெரியும். 

அவருக்கு எதிரி என்ற முறையில் MGRஐ தெரியும். அதன் பின் தெரிந்த ஒரே பிரபலம் பிரபாகரன். 

1990களில் பதின்ம வயதையொத்த பலர்  பள்ளிக்கூட, கல்லூரி நாட்களில் பிரபாகரன் பற்றி பெருமைப் பேசாதவர்கள் உண்டா? 

நிச்சயம் வாய்ப்பே இல்லை.  

அந்தளவுக்கு பிரபாகரனின் பிம்பம் கட்டியமைத்ததில் , அதை கட்டிக்காத்ததில் திமுகவிற்கும், தலைவர் கலைஞருக்கும் பெரும்பங்கு உண்டு. 

பிரபாகரனின் இறுதி நாட்கள் வரை அவரும் கலைஞரை வாய் தவறியும் தவறாக பேசியதில்லை. தலைவரும் பிரபாகரனை தவறாக பேசியதில்லை.  இருப்பினும் இன்று சிலர் பிரபாகரனுக்கு எதிராக பதியப்படும் பதிவுகளுக்கு யார் காரணம்? 

பிரபாகரனுக்கு மரியாதை வாங்கித் தருகின்றோம் என ப்ரொபைலில் பிரபாகரன் படத்தை வைத்துக் கொண்டு கலைஞரை, திமுகவை திட்டியதின் விளைவு தான்.  

தமிழ் தேசியவாதிகளால் பிரபாகரனுக்கு இழிவை மட்டுமே தேடித்தர முடியும் என்பது இப்போதாவது புரிகின்றதா? 

இவர்கள் கலைஞரை திட்டவில்லை என்றால் உடன்பிறப்புகளால் பிரபாகரன் என்ற அந்த பிம்பமும் உடையாமல் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.  

கலைஞரை சாடுவதற்காக, திமுகவை திட்டி குறை சொல்வதற்காக கையில் எடுக்கப்பட்ட ஆயுதங்கள் எல்லாம் கூர் மழுங்கிப் போனது. 

கண்ணதாசனின் வனவாசம் பற்றி பேசுவார்கள். ஆனால் அதே கண்ணதாசன் பத்தாண்டு கால பிரிவிற்கு பின்னர் வரத்தப்பட்டு கலைஞர் என் காதலன், நீயே கலைஞன், 

நீயே கவிஞன், 

நியே தலைவன் என எழுதியதும்,  தனக்கு இரங்கல் கவிதை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதையும் இவர்கள் தெளிவாக மறந்து மறைத்து விடுவார்கள்.இவர்கள் எதையுமே தேடி வாசிக்கவில்லை என்பது தான் இங்கு பிரச்சனை. 

அடுத்து காமராசரை  ஆயுதமாக கையில் எடுத்தார்கள். 

தமிழகத்தில் அதிகமாக அணைக்கட்டினார் என்று அடுத்த ஆயுதம் எடுத்தார்கள்

எண்ணிப்பார்த்த போது திமுக ஆட்சிகாலத்தில் தான் அதிக அணைகள் கட்டப்பட்டன என வரலாற்று பூர்வமாக நிருபீக்கப்பட்டது. 

மதிய உணவைத் தாண்டி பெருந்தலைவர் காமராசரின் தொலைநோக்கு திட்டங்கள் என்ன எனக் கேட்ட போது 

கலைஞரை நோக்கி ஆட்காட்டி விரலை நீட்டினார்களே தவிர திடடங்களை என்ணுவதற்கு விரல் விட முடியாமல் நின்றார்கள். 

அடுத்து எம்.ஜி ஆருக்கு புரட்சி வேசம் போட்டு கையில் வீரவாள் கொடுத்து நிறுத்தினார்கள். 

ஆனால் இந்திராகாந்தியின் அச்சுறுத்தலுக்கு பயந்த அதிபுரட்சிதலைவருக்கு , திரைக்கு வெளியே தைரியம் என்பதே கிடையாது. புரட்சி வெடி நமத்துப்போனது

இப்படியாக கண்ணதாசன், காமராசர்,  எம்.ஜி.ஆர் ,  நெடுமாறன், சர்க்காரரியா கமிஷன் என்ற ஆயுதங்கள் எல்லாம் கூர் மழுங்கி போன நிலையில் தான் தற்போது பிரபாகரன் என்ற ஆயுதத்தை ஏந்துகிறார்கள்

கலைஞருக்கு  எதிராக இதுப்போன்ற ஆயுதங்களை ஏந்தினால் அதிகபட்சமாக ஒரு தேர்தல் வெற்றியை வேண்டுமானால் தடுக்கலாம்

ஆனால் சமூகநீதி பெறும் போராட்டம்  மட்டும் தோற்கவே தோற்காது. 

காரணம் 95வயதுவரை கலைஞர் இதுபோல பல அவதூறுகளையும் வதந்திகளையும் தாக்குதல்களையும் அனாசியமாக கடந்து வந்தவர்

இவர்களுக்கு காமாராசர், கண்ணதாசர், எம்.ஜி.ஆர் பிரபாகரன் ஆகியோர் எல்லாம் ஆயுதங்களே தவிர அவர்கள் மீது அன்போ, அக்கறையோ துளியளவும் இல்லை 

2009 - 2010 ல் முகநூலில் பயணிக்க தொடங்கிய கலைஞர் பிரபாகரன் பிம்பத்தை உடைத்ததில்லை

பிரபாகரனை படத்தை முகப்பில்  வைத்து கொண்டு அரசியலில் அறுவடைசெய்ய  முயற்சி செய்கிறார்கள்

ராஜிவ் மரணத்தின் போது திமுகவினரை தவிர வேறு எவனாவது பாதிப்புக்கு உள்ளானீர்களா? 

பிறகென்ன இன உணர்வை பற்றி பாடம் நடத்துறீங்க. 

உங்க உடம்பில் இருக்கும் ஈழ சொரனைக்கும் கலைஞர் தான் தகப்பன்

காரணமின்றி கலைஞரை எதிர்த்த ஜெயலலிதாவும் பிரபாகனும் மறைந்த தேதி நமக்கு தெரியாமல் தான் வரலாறு நிறைவடைந்துள்ளது. 

உண்மையான வரலாற்றை வாசித்து விட்டு வாருங்கள்.

பிரபாகரன் நினைவுநாள் என்றால் அவரது புகழ்பாடுவதை செய்திருக்க வேண்டும். 

அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராசர் ஆகியோரின் பிறந்தநாள், நினைவுநாள் ஆகியவற்றை நாங்களும் அனுசரிக்கின்றோம். அவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அவர்களின் பேச்சுகள் எழுத்துகள், விவாதங்கள் என தேடிதேடி எழுதுகின்றோம் 

ஆனால் யாரையும் தரக்குறைவாக பேசுபதற்கு எந்த பட்டத்தையும் பயன்படுத்தி தலைக்குனிவை ஏற்படுத்தவில்லை.   

சேரர், சோழர்,பாண்டியன் நாங்கள் படித்த வரலாறு பிரபாகரன் நாங்கள் பார்த்த வரலாறு.

இப்படியாக எழுத நினைவேந்தல் செய்தோம். 

நாங்களும் பிரபாகரனுக்கு வீர வணக்கம் செய்தவர்கள் தான்.

2010, 2011 களில் இந்த மே17, மே18 தினங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது.  

2011ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். காலை 8மணிக்கு வேலையிடத்தில் அமர்ந்த படி முகநூலில் சில பதிவுகளை வாசித்த போது கண்ணீரை அடக்கமுடியாமல் மறைவிடம் தேடி , ஓடிச்சென்று கதறி இருக்கின்றோம் அரைநாள் விடுப்பெடுத்து வீட்டுக்கு சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் 

மாலை நேரத்தில் குடும்பத்துடன் பிரபாகரனுக்கு மலரஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். 

அந்தளவுக்கு எங்களுக்குள் இருந்த ஈழ  உணர்வுகளை வரிகளில் பிரதிபலித்தோம்.  

இறுதியாக 
2012, ஆகஸ்ட் 11ம் தேதி, ஈழம் என்ற சொல்லை  உச்சரிக்கத் மத்திய அரசுத் தடை விதித்த போது உயர்நீதி மன்றத்தை அனுகி 24 மணி நேரத்தில் அந்த தடையை உடைத்த காரணத்தால் தான் இன்று ஈழம் என்ற சொல்லை எழுதிக் கொண்டிருக்கின்றீர்கால்

விடுதலைப்புலிகள் இயக்கிற்கு தடை விதித்த போது "சிறுத்தைகள் உலவலாம், புலிகள் உலவக் கூடாதா?" என கேட்டவர் கலைஞர். 

பார்ப்பன வீட்டுப் பெண்களும் இன்று மொட்டைப்பாப்பாத்தியாக  வீட்டிற்குள் முடங்வில்லை அதற்கு காரணம் பெரியார் என்பது போல 

நாம் ஏந்தும் பிரபாகரன் படத்துக்கும், ஈழம் என்ற சொல்லுக்கும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர். 

- Saravanaprabhum umayal