Monday, February 29, 2016

ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்!அதிரவைத்த டிகாப்ரியோ

  
ந்த மாலைப் பொழுதில் மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை அவர் சொல்லச் சொன்னார். அதாவது, தாராள மனதுடன் வழங்கப்படும் இந்த விருதைப் பெற வருத்தத்துடன் அவர் மறுத்துவிட்டார். விருதை அவர் மறுக்கக் காரணம், திரைப்படத் துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதுதான்!”  - இது மார்லன் பிராண்டோவின் பிரதிநிதியாக  ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற சாஷீனின் குரல்.
ஆம். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை புறக்கணித்த கலைஞன்,  'நான் ஏன் விருதை மறுக்கிறேன்...?' என்று எழுதிய நீண்ட கடிதத்தின் ஒரு சிறு பகுதி இது.  மார்லன், நமது முந்தைய தலைமுறையின் ஆதர்ச நாயகன். தன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, அவர் விருதை மறுக்கவில்லை... தன் நாட்டின் தொல்குடிகளான செவ்விந்தியர்கள், எப்படி நிஜத்திலும், திரையிலும் மோசமாக சித்தரிக்கப்படுகிறார்கள் என்று வருந்திய  கலைஞனின் கலகக்குரல்தான் அந்த கடிதம். உலகமே உற்று நோக்கிக்கொண்டிருந்த ஒரு விழா மேடையில், தன் தேசத்திற்கு எதிராக சுட்டு விரலை நீட்டிய உண்மையான கலைஞன் அவர்.

மார்லன் திரை நாயகன் மட்டுமல்ல... நிஜ நாயகனும் கூட.  ஒரு முறை லண்டன் நகரத்திற்கு படப்பிடிப்பிற்காக சென்றபோது, கருப்பின மக்களின் மெழுகுவர்த்தி பேரணி செல்வதை அறிகிறார். பல கருப்பின அப்பாவி மக்கள், எந்த குற்றமும் செய்யாமல் பல நாட்கள் லண்டன் சிறைகளில் வாடுகிறார்கள், அவர்களை விடுவிக்கக்கோரிதான் அந்த பேரணி. தான் உலகம் கொண்டாடும் நாயகன் என்ற எந்த மமதையும் இல்லாமல், உற்சாகமாக பேரணியில் கலந்து கொள்கிறார், கோஷமிடுகிறார்.

ஆம். மார்லன் அப்படிதான். உண்மை எப்போதும் எந்த அரிதாரமும் பூசி திரிவதில்லை. உண்மை உருமாறாதது, நிர்வாணமானது-  நாம் பார்க்க மறுத்தாலும். அது அங்கு அப்படியேதான் இருக்கும். அந்த உண்மையை பேசிய கலகக் கலைஞன் மார்லன். “நான் படங்களில் நடிப்பது, பணத்திற்காகதான்...” என்று உண்மையை உரக்க சொன்னவர் அவர்.

ஆஸ்கர் மேடையில் மீண்டுமொரு கலகக்குரல்:
நாம் எப்போதும் உண்மையை சந்திக்க தயங்குகிறோம்.  அந்த உண்மையை சந்திக்கும் பண்பு, நம் சிறு வயதிலிருந்தே துவங்கி விடுகிறது. தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் நாள் இன்னும் தள்ளிப் போகாதா என்று ஏங்குவது, விடுமுறையை கொண்டாட மட்டுமல்ல... விடைத்தாளை சந்திக்கவும் பயந்துதான். அதே பண்புதான் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. முகத்தில் அறைந்தாற்போல் உண்மையை பேசுபவர்களை நமக்கு பிடிப்பதில்லை. இது தனி மனிதனின் குணம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், தேசத்தின் குணமாகவும் இதுதான் இருக்கிறது. தம் தேசத்திற்கு எதிராக யாராவது சுடும் உண்மையை பேசினால்,  அவர் மீது தேச விரோத முத்திரை குத்தப்பட்டு, விலக்கி வைக்கப்படுகிறார்.

பல ஆண்டுகள் காத்திருப்புக்குன் பின் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த விருது கிடைக்கிறது. நாம் என்ன செய்வோம்...? இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு, விழா ஏற்பாட்டளர்களை புகழ்ந்து பேசுவோம். இல்லையென்றால், நாம் இந்த விருது வாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று ஒரு கதை அளப்போம். எத்தனை பேர் நமக்கு கிடைத்த மேடையை, உலகம் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்னையைப் பற்றி பேச பயன் படுத்துவோம்...?

ஆனால்,  லியோனார்டோ டி காப்ரியோ பயன்படுத்தி இருக்கிறார்.  “நாம் ஆதரிக்க வேண்டும்-  புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை  மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை,  புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”

-  இது ஆஸ்கர் மேடையில் காப்ரியோ பேசியது.

மேம்போக்காக பார்த்தால், இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், பருவநிலை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தும், தொடர்ந்து கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்காவில் நின்று கொண்டு பேச ஒரு கலைஞனுக்கு மாபெரும் துணிச்சல் வேண்டும்.

புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க வேண்டும், அதற்காக கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள  வேண்டும் என்று ஐ.நா மன்றம் வலியுறுத்தியது. ஆனால்,  இதில் தன் பங்களிப்பை அமெரிக்கா போல வளர்ந்த நாடுகள் புறந்தள்ளி வந்தன. பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு, அண்மையில் தான் பாரிசில் நடந்த மாநாட்டில் கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள முன்வந்து, அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அந்நாடுகள் அதை செயல்படுத்துமா என்பது கேள்வி குறி...

இந்த சூழலில் காப்ரியோவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. அவரின் பேச்சு தட்டையானது அல்ல.  மறைமுகமாக தன் நாட்டின் மீது தான் குற்றம் சுமத்துகிறார். 

பேராசையின் அரசியல்:
ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் பேர் பருவநிலை மாற்றத்தால் இறக்கிறார்கள். முப்பது கோடி பேர் மறைமுகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம். பருவநிலை மாற்றம் இயற்கையான நிகழ்வல்ல... அது ஒரு சிலரின் பேராசை, நிறுவனங்களின் பணத்தாசை, வளர்நத நாடுகள் தாங்கள்தான் அனைத்து நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்ற எண்ணத்தில், வரைமுறை இல்லாமல் செய்யும் ஆயுத உற்பத்தியும், அதன்  விளைவுகளும்தான் புவிவெப்பமயமாதல்.

இத்தகைய சூழலில் நாம் காப்ரியோவின் பேச்சை, மற்றுமொரு பேச்சாக கடந்து சென்றுவிட முடியாது...

மார்லனின் உரைக்கு பின்புதான்,  செவ்விந்தியர்கள் மீது கவனம் குவிந்தது. அவர்கள் நலன் குறித்து பேச்சு எழுந்தது.  இப்போது, 43 ஆண்டுகளுக்கு பின்பு காப்ரியோ, விழா மேடையில் ஒரு கலகக் குரலை எழுப்பி உள்ளார்.

தனது உரையில் 'பேராசையின் அரசியல்' என்ற சொல் பதத்தையும் காப்ரியோ பயன்படுத்தி உள்ளார்.  பேராசைப் பிடித்த அந்த அரசியலின் மனசாட்சியை அவரது  உரை தட்டி எழுப்புகிறதா என்று காத்திருந்து  பார்ப்போம்

Friday, February 26, 2016

மதிப்புக்குரிய இந்துத்துவர்களே
ஜேஎன்யு என்பது பாபர் மசூதி அல்ல.

 - மருதன்   

வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை வெறுப்பதற்கான எல்லா நியாயங்களும் பாஜகவுக்கு இருக்கின்றன. ஜேஎன்யு-வால் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பிரயோஜனம் ஏற்பட்டிருக்கிறதா என்று சீறி விழுவதற்கும், ஜேஎன்யு தேசவிரோதிகளின் கூடாராமாகத் திகழ்கிறது என்று குற்றம் சாட்டுவதற்கும்கூட இந்துத்துவர்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது.
அவ்வளவு ஏன், ஜேஎன்யுவை இழுத்து மூடவேண்டும் என்று அவர்களில் ஒரு பகுதியினர் துள்ளிக்குதித்து கூப்பாடு போடுவதையும்கூட கொஞ்சம் அவர்கள் பக்கம் நின்று பார்த்தால் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்!

மூன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜான் காட்டன் என்னும் கிறிஸ்தவ குருமார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

பி.ஏ., எம்.ஏ என்று படித்தவர். மிகுந்த பேரும் புகழும் பெற்று தேவாலயத்தில் பணியாற்றிவந்தார். பல நூல்களைக் கரைத்துக் குடித்தவர். கற்றறிந்த ஞானி என்று போற்றப்பட்டவரும்கூட. இவ்வளவு செல்வாக்குடன் இருந்த இந்த காட்டன்,  தனது நூல் ஒன்றில் இப்படி எழுதி வைத்தார். ’அதிகம் படிப்பவர்களும் அதிக அறிவாற்றல் கொண்டவர்களும் சாத்தானுக்குப் பணியாற்றுவதற்கே தகுதியானவர்கள்!’
அவரே படித்தவர்தான் என்றாலும் அதிகம் படிப்பவர்களைக் கண்டு காட்டன் எரிச்சலடைந்ததற்குக் காரணம் அவர்கள் பைபிள், இறையியல் என்று மட்டும் திருப்தி கொள்ளாமல் அறிவியல், வரலாறு, புவியியல் என்றெல்லாம் கண்டபடி தேடிப் படித்ததுதான். இந்தத் துறைகள் எல்லாம் அவரைப் பொறுத்தவரை தேவையற்றவை மட்டுமல்ல, ஆபத்தானவையும்கூட. காரணம் இவற்றையெல்லாம் படிக்கும் ஒருவர் இறைவனின் இருப்பையும் தேவலாயத்தின் அதிகாரத்தையும் கேள்வி கேட்கத் தொடங்கிவிடுவார்.

எதையும் சந்தேகிக்கும் குணம், எதையும் நம்ப மறுக்கும் பழக்கம், யாரையும் எதையும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஆற்றல் வளர்ந்துவிடும். புண்ணியத்தைத் தேடித்தரும் பக்தியைக் கைவிட்டுவிட்டு தீங்கு விளைவிக்கும் அறிவை நாடிச் செல்பவர்கள் சாத்தானுக்கு ஊழியம் செய்பவர்கள்தான். இல்லையா?

ஜேஎன்யுவுக்கு வருவோம். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சங் பரிவாரங்களும் இன்னபிற இந்துத்துவர்களும் ஜேஎன்யுவை  கண்டு எரிச்சல் கொள்வது ஏன் என்பது இப்போது புரிந்திருக்கும். அறிவைத் தேடிச் செல்பவர்களை,  ஜான் காட்டனைப் போல் ஏன் அவர்கள் வாய்க்கு வந்தபடி சபிக்கிறார்கள் என்பதும் புரிந்திருக்கும். அறிவுத் தேடலுடன் உள்ளவர்களை வெறுக்கும் போக்கு கிட்டத்தட்ட உலகம் தழுவியது.

ஓராண்டு முழுக்க ஒரு புத்தகத்தைக் கூடப் புரட்டாமல் காலம் கழித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 28 சதவிகிதம். அதே அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர்  இன்னமும் பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளவில்லை. அறிவியலை வெறுப்பவர்கள் மற்றும் புறக்கணிப்பவர்களின் எண்ணிக்கையும் அங்கே குறைவில்லை.

ஜான் காட்டன் உலகம் முழுக்கப் பரவியிருக்கிறார். இந்தியாவில் அவர் இந்துத்துவர் என்று அறியப்படுகிறார்.  காஷ்மீர் அவருக்குப் புனிதமானது என்பதால் எல்லோரும் அதை ஒரு புனிதப் பொருளாகப் பாவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். காஷ்மீர் குறித்து கேள்வி எழுப்பும் ஜேஎன்யு மாணவர்களை அவர் மனதார வெறுக்கிறார். உடன்படுபவர்களையும் வழிபடுபவர்களையும் மட்டுமே அவர் தேச பக்தர்கள் என்று கருதுகிறார்.  முரண்படுபவர்கள், சந்தேகிப்பவர்கள் தேச விரோதிகள். சாத்தானுக்கு ஊழியம் செய்பவர்கள்.

மேலும் மேலும் முரண்பாடுகள் முளைக்காதிருக்க வேண்டுமானால், காஷ்மீர் போல் மேலும் பல புனிதங்கள் சிதறடிக்கப்படாமல் இருக்கவேண்டுமானால், மேலும் பல கன்ஹையா குமார்களும் உமர் காலித்துகளும் பெருகாமல் இருக்கவேண்டுமானால், ஜேஎன்யு என்னும் சாத்தானின் கோட்டை அகற்றப்பட்டாகவேண்டும். எனவேதான் ஜான் காட்டன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களை அச்சுறுத்துகிறார். ஜேஎன்யு-வுக்கு முடிந்த அளவுக்கு இழிபெயரை வாங்கித் தந்துவிடமுடியாதா என்று தலைகீழாக நின்று பிரயத்தனப்படுகிறார்.

இந்துத்துவ நண்பர்களே, ஜேஎன்யுவை இந்த வழிகளில் எல்லாம் வீழ்த்துவது சாத்தியமில்லை. ஜான் காட்டனைப் போல் சபிப்பதிலும் பலனில்லை. உங்கள் விருப்பு, வெறுப்புகளைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் கோபத்தையும் எரிச்சலையும் கையறு நிலையையும் தாற்காலிகமாக மறந்துவிட்டு நேர்மையாக யோசித்துப் பாருங்கள்.
ஜேஎன்யு,  இடதுசாரிகளின் கோட்டையாக மாறிவிட்டது என்று வெறுமனே குற்றம் சுமத்தாமல்,  அந்தப் பல்கலைக்கழகத்தின் அமைப்பையும் அடித்தளத்தையும் ஆராய்ந்து பாருங்கள். ஊர் பேர் தெரியாத ஒரு கன்ஹையாவுக்காக எங்கிருந்தோ நோம் சாம்ஸ்கியால் எப்படிக் குரல் கொடுக்க முடிகிறது? ஜேஎன்யு வளாகத்துக்குள் காவல் துறையினர் நுழைந்ததை இலக்கியத்துக்கான நோபல் பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் ஏன் கண்டிக்கிறார்? தற்போதைய அரசு எதேச்சதிகார போக்குடன் செயல்படுவதைக் கண்டிக்கிறேன் என்று ஜுடித் பட்லரால் எப்படி அறிக்கை வெளியிடமுடிகிறது?

கொலம்பியா பல்கலைக்கழகம், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம்,பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி, மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம், சான் மார்டின் பல்கலைக்கழகம் என்று தொடங்கி உலகின் பல மூலைகளில் இருந்தும் பேராசிரியர்களும் அறிவுஜீவிகளும் போராடும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக எப்படிக் கூட்டாக இணைகிறார்கள்? நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் என்று எப்படி அவர்களால் ஒரே குரலில் சொல்லமுடிகிறது?
கடைசியாக இப்படியொரு ஆதரவை நீங்கள் எப்போது பெற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? விமானத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரியையும் நாங்கள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டோம் என்று நீங்கள் சொன்னபோது எத்தனை பல்கலைக்கழகங்களில் இருந்து உங்களுக்கு ஆதரவு திரண்டுவந்தது? எவ்வளவு கற்றறிந்த அறிஞர்கள் உங்களுடன் இசைந்தார்கள்?   

சாவர்க்கரும், ஹெட்கேவாரும்,  கோல்வால்வரும் ஏன் உலகின் கவனத்தை இன்றுவரை ஈர்க்கவேயில்லை என்பதை நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? உங்களுடைய இந்துத்துவா ஏன் உலகால் எதிர்மறையாகவே பார்க்கப்படுகிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா? உலகை விடுங்கள், நாக்பூரைத் தாண்டினால் எவ்வளவு பேருக்கு சாவர்க்கர் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தீன்தயாள் உபாத்யாயாவை எவ்வளவு தென்னிந்தியர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நேருவைத் தாக்குகிறீர்கள். அவர் பெயர் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்தையும் தூற்றுகிறீர்கள். தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரேயொரு தலைவரையாவது உங்களால் இதுவரை உருவாக்கமுடிந்திருக்கிறதா? சர்தார் வல்லபபாய் படேலைக்கூட முழுமையாகச் சொந்தம் கொண்டாடமுடியாமல், நீங்கள் ஏன் தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்கள்? இன்றைய தேதி வரை ஏன் சாவர்க்கரை உங்களால் சஞ்சலமின்றி முன்னிறுத்த முடியவில்லை? ஏன் அவர் கருத்துக்களை மக்களிடம் பிரசாரம் செய்யமுடியவில்லை? என்ன தயக்கம்?

கடைசியாக ஓர் இந்துத்துவர் எழுதி வெளியிட்ட ஓர் ஆய்வு நூல் என்ன? அந்நூல் சான்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா? வரலாற்றை இடதுசாரிகளின் பிடியில் இருந்து விடுவிக்கவேண்டும் என்று முழங்க முடிந்த உங்களால், ஏன் ஒரு ரொமிலா தாப்பரை, ஒரு இர்ஃபான் ஹபீப்பை, ஒரு ரஜனி கோத்தாரியை உருவாக்கமுடியாமல் இருக்கிறது? இன்னொரு ஆர்.சி. மஜும்தாரைக்கூட ஏன் காணமுடியவில்லை?

அறிவுஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள், சமூகவியல் ஆய்வாளர்கள், அரசியல் சித்தாந்தவாதிகள், தத்துவவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று அறிவுத்துறையின் எந்தக் கதவைத் திறந்தாலும் அங்கே இடதுசாரிகள் அணிவகுத்து நிற்பது ஏன்? வலதுசாரி சிந்தனையோட்டம் இங்கே ஒரு படி கூட வளராமலே இருப்பதால்தானே? இதை நீங்கள் எப்போதாவது நேர்மையுடன் எண்ணிப் பார்த்ததுண்டா?

அறிவுசார் துறைகளுக்குக்கூடப் போகவேண்டாம். உங்கள் இருப்புக்கும் லட்சியங்களுக்கும் ஆதாரமாக இருக்கும் மதத்தையே எடுத்துக்கொள்வோம். இஸ்லாத்தை, கிறிஸ்தவத்தை மிகக் கடுமையாக எதிர்த்து, அந்த மதங்களைச்  சேர்ந்தவர்களைப் பகைச் சக்திகளாகப் பார்க்க உங்களால் முடிந்தது. என்றேனும் இந்துக்களை நீங்கள் நட்புச் சக்திகளாகப் பார்த்ததுண்டா? இந்து மதத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பிளவுகளையும் சாதி மோதல்களையும் நீங்கள் எதிர்த்ததுண்டா? அடித்தட்டு தலித் மக்களை இந்துத்துவத்தின் பெயரைச் சொல்லி அரவணைத்துக் கொள்ளமுடிந்ததா? இந்துவாகப் பிறந்தேன், ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று அறிவித்து இந்து மதத்தைத் துறந்த அம்பேத்கரை இன்று சொந்தம் கொண்டா விரைந்தோடி வரும் உங்களால் அம்பேத்கரை அன்று ஏற்கமுடிந்ததா? அவருடன் உறவு பேண முடிந்ததா? அவரை இந்து மதத்தில் தக்க வைக்கமுடிந்ததா?
வரலாற்றுக்குப் போகவேண்டாம்... இன்று நடப்பது என்ன? ரோகித் வெமுலாவின் அப்பாவின் சாதி என்ன, அவருடைய மூதாதையரின் சாதி என்ன என்னும் அளவுக்குத்தான் உங்கள் ஆய்வுப் பார்வை வளர்ந்திருக்கிறது என்பது உண்மையிலேயே அவமானகரமானது இல்லையா? இன்று உங்களுக்கு அதிகாரம் கைகூடியிருக்கிறது. உங்கள் பலம் கட்டற்ற முறையில் வளர்ந்திருக்கிறது. ஆனால் இந்தப் பலத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்களே பாருங்கள். இதைத்தான் நீங்கள் செய்ய விரும்பினீர்களா? ஒரு பல்கலைக்கழகம்தான் உங்கள் எதிரியா?

உண்மையில், ஜேஎன்யு-வை நீங்கள் எதிரியாகப் பாவிப்பது தவறில்லை. ஆனால் ஜேஎன்யு-வுடன் போரிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும்? உங்கள் அதிகார பலத்தையோ அரசு பலத்தையோ அல்ல, அறிவு பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கவேண்டும். ஜேஎன்யு எந்த அடித்தளத்தின் மீது எழுந்து நிற்கிறதோ அப்படியொரு அடித்தளத்தில் நீங்களும் ஏறி நின்று உரக்கப் பேசியிருக்கவேண்டும். அறிவு என்பது அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டதல்ல. அதைத் தனியே பிரயத்தனப்பட்டுதான் வளர்த்துக்கொண்டாகவேண்டும். கடினமானதுதான், ஆனால் அதைத்தவிர வேறு வழியில்லை. சிக்கல் என்னவென்றால் ஜேஎன்யு-வை நீங்கள் இதைக்கொண்டு மட்டுமே எதிர்கொண்டாகவேண்டும்.

ஜேஎன்யு என்பது பாபர் மசூதி அல்ல. எனவே, இடிப்பதைப் பற்றி யோசிக்காமல் உருவாக்குவதைப் பற்றி யோசியுங்கள்.

எங்கே உங்களுடைய ஜேஎன்யு?

உங்களால் ஒரு ஜேஎன்யுவை உருவாக்கமுடியுமா? முடியுமென்றால் அதை உருவாக்கிக் காட்டிவிட்டு பிறகு அங்கிருந்து உரையாடத் தொடங்குங்கள். அப்சல் குரு, காஷ்மீர், தேச பக்தி, தேச விரோதம், இந்து தேசியம், இந்துத்துவம், சாவர்க்கர் என்று நீங்கள் பேச விரும்பும் எதையும் அங்கிருந்தபடி பேசுங்கள். உங்கள் தரத்தை உயர்த்திக்கொண்டு, உங்கள் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்திக்கொண்டு உரையாடுங்கள். உங்களால் ஏற்கமுடியாத கருத்துக்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு, ஆதாரங்களுடன் மறுத்து உங்கள் தரப்பை முன்வையுங்கள். விஞ்ஞான கண்ணோட்டத்துடன் ஆய்வுகள் நடத்துங்கள். போராடுங்கள். கோஷமிடுங்கள்!

நீங்கள் வெறுத்தொதுக்கும் இடதுசாரிகள் அனைவரும் இதைத்தான் செய்தார்கள்.

இறுதியாக ஒன்று. ஜான் காட்டன் தோற்கடிக்கப்பட்டவர் என்பதை மறந்துவிடவேண்டாம்

தனி மனிதன் உருவாக்கிய காடு!

  ருமபுரி என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் மனசித்திரம் எப்படி விரியும்...? அது ஒரு பாலை நிலம், பெண் சிசு கொலை அதிகம் நடந்த ஊர், சாதிக் கலவரங்கள், நக்சல் பகுதி... இப்படியானதாகதான் இருக்கும் உங்கள் எண்ணம்.
 
ஆம். எனக்கும் இப்படிதான் அந்த ஊர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அதில் உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால், அது மட்டுமே உண்மையும் இல்லை.... அந்த ஊருக்கென இன்னொரு முகம் இருக்கிறது, யாருக்கும் அதிகம் தெரியாத முகம். பசுமை முகம்.  இந்த கட்டுரை அந்த பசுமை முகத்தை பற்றி அல்ல. அதை விதைத்த ஒரு தனி மனிதனை பற்றி...  ஆம். வரலாறு நெடுகிலும் சில அற்புதங்கள் தனி மனிதர்களால் நிகழ்ந்து இருக்கிறது.
 
அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திய ஒரு மனிதனை பற்றி 
 
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜாதவ் பயேங்கை தெரிந்து இருக்கும். யாரது என்கிறீர்களா...?  அசாமில் பிரம்மபுத்திரா மணல் படுகையில் ஒரு காட்டையே உருவாக்கியவர். அதற்காக பத்ம ஸ்ரீ விருது வரை வாங்கியவர்.   நம் ஊரிலும் ஒரு ஜாதவ் பயேங் இருக்கிறார்... அதுவும் தருமபுரியில்.  அவரை அறிமுகப்படுத்தவே இந்த கட்டுரை....  
 
தமிழகத்தின் ஜாதவ் பயேங்:
 
ஜாதவ் பயேங் உருவாக்கிய காடு அரசுக்கு தெரிய வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. ஊருக்குள் வந்த யானைகளை துரத்திக் கொண்டே சென்றவர்கள்,  கடைசியில் அடைந்த இடம் ஒரு காடு. தங்கள் வரைப்படத்தில் இல்லாத  காட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், இது எப்படி உருவானது என்ற தேடலுக்கான விடைதான் ‘ஜாதவ் பயேங்’. இதுபோல்தான் எனக்கும் தமிழகத்தின் ஜாதவ் பயேங் அறிமுகமானார்.  வேறொரு வேலையாக தருமபுரி மாவட்ட எர்ரப்பட்டிக்கு சென்று, அரசு வரைபடத்தில் இல்லாத ஒரு கானகத்தில் சிக்கி கொண்டேன். என்னை தொலைத்து அந்த அற்புத கானகத்தை கண்டடைந்தேன்.  அங்குதான் அந்த காட்டை உருவாக்கிய ‘பியுஷ் மனுஷ்’ அறிமுகமானார்... ராஜஸ்தான் பூர்வீகம். போன தலைமுறையில் தமிழகம் வந்து குடியேறியவர். 
 
 தமிழ் ஜாடையில் இல்லாத, ஆங்கிலத்தில் உரையை துவங்கிய அவருடன் என்னால் உடனே ஒட்ட முடியவில்லை. ஆனால் பேச ஆரம்பித்த சில மணிநேரங்களில் அவரின் உற்சாகம், என்னையும் தொற்றிக் கொண்டது. அவருடன் மாலை நேரத்தில் துவங்கிய இந்த உரையாடல் பின்னிரவு வரை நீண்டது...
 
 
காடெனப்படுவது யாதெனில்...
 
இந்த காடு எப்படி உருவானது...? 
 
“2007 ல் இந்த பகுதிக்கு வேறு வேலையாக வந்தேன். இந்த பகுதியின் நில அமைப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போது மழை தொடர்ந்து பல ஆண்டுகள் பொய்த்து இருந்ததால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று,  நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். சூழலியல் மீது அக்கறை கொண்ட நண்பர்களிடம் பேசி நிதி திரட்டி, இடம்பெயர்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து நிலத்தை வாங்கினேன். ஏறத்தாழ நூறு ஏக்கர். நான் விவசாயி கிடையாது, விவசாயமும் தெரியாது.... ஆனால் கல்லூரிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டு இருக்கிறேன். அந்த  அனுபவத்தில் இந்த வறண்ட நிலத்தில், மரங்கள் நட துவங்கினேம். ஏக்கருக்கு 1300 மரங்கள் வீதம், இது வரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் நட்டேன்...இப்படியாகதான் இந்த கூட்டுறவு காடு உருவானது...” என்று பியூஷ் தன் மழலை தமிழில் சொன்னார்.  
 
காடெனப்படுவது யாதெனில், வெறும் மரங்களின் தொகுப்பு மட்டுமல்ல.... ஓடைகள், குளங்கள், இதெல்லாம் இருக்க வேண்டும். அப்போதுதான் வனவிலங்குகள் வரும்... இப்போது இந்த காட்டில் ஒரு வற்றாத ஓடையும், 8 குளங்களும், 2 ஏரிகளும், 17 தடுப்பணைகளும் இருக்கிறது. அவ்வபோது காட்டு பன்றிகளும், எப்போதும் மயில்களும் வந்து போகிறது...
 
வளங்குன்றா வாழ்வும், பசுமை தொழிற்களும்
 
 
இனி அவருடனான உரையாடலில் இருந்து...
 
வணிக குடும்பத்தில் பிறந்த உங்களை எது சூழலியல் செயற்பாட்டில் ஈடுபடத் தூண்டியது...?
 
நானும் ஒரு வணிகனாகத்தான் என் வாழ்க்கையை துவங்கினேன். கொசு வலை உற்பத்தி செய்யும் ஒரு சிறு தொழிற்சாலை வைத்து இருந்தேன். அப்போது, தினமும் காலையில் மிதிவண்டியில் செடிகளை சுமந்து கொண்டு வீதி, குளக்கரை ஓரங்களில் மரம் நடுவதை பழக்கமாக வைத்து இருந்தேன். ஆனால், இன்னொரு புறம், என் தொழிற்சாலையில் கொசு வலையில் சாயம் ஏற்றுவதற்காக நீர் நிலைகளை மாசுப்படுத்தி கொண்டிருந்தேன். இந்த முரணில் செயல்பட பிடிக்கவில்லை. தொழிற்சாலையை மூடினேன். பிறகு சூழலுக்கு மாசு உண்டாக்காத பசுமை தொழில்களை செய்ய துவங்கினேன். அதன் ஒரு பகுதிதான் இந்த காடும்.

என்ன... காடு உருவாக்குவது ஒரு தொழிலா...? அதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
ஆம் தொழில்தான்... சொல்லப்போனால் இதுதான் நீடித்த வருமானம் வரும் தொழில். பிற தொழிற்சாலைகள் உற்பத்தியை உண்டாக்குகிறோம் என்று இயற்கையை சுரண்டும் போது, நாங்கள் இயற்கைக்கு கொடுத்து அதிலிருந்து உரிமையுடன் எங்களுக்கு வேண்டியதை பெறுகிறோம்.

புரியவில்லையே...? 
 
நாங்கள் பத்து விதமான பசுமை தொழிற்களை பட்டியலிட்டுள்ளோம். மூங்கிலிலிருந்து மேசை, நாற்காலி உற்பத்தி செய்கிறோம், பழங்களை மதிப்புக்கூட்டி விற்கிறோம், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு என இயற்கையை சுரண்டாத தொழில்கள் செய்கிறோம்...

என்ன விளையாடுகிறீர்களா.... இதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
உங்களின் இந்த பொது புத்திதான், பலர் இது போன்ற பசுமை தொழில்களுக்கு வராமல் இருப்பதற்கான காரணம். நாங்கள் உற்பத்தி செய்யும் மூங்கில் சாமான்களுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.  சொல்லப்போனால், என்னால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. என்னிடம் ஒரு பெரிய ஜீப் இருக்கிறது, பெரிய வீட்டில் குடி இருக்கிறேன். நம்புங்கள்.... இது  அனைத்தும் இங்கிருந்து கிடைக்கும் வருமானம்தான்... 

ஹோ... பொருட்களை மதிப்புக் கூட்டி விற்றால், வருமானம் வரும் என்கிறீர்கள்...? 
 
ஆம். மதிப்பு கூட்டுதல் மட்டுமல்ல... காலத்திற்கு ஏற்றார் போல் விவசாயத்தையும் நவீனப்படுத்தாமல், விவசாயம் நஷ்டம் தருகிறது என்று கூறுவது வெற்று பிதற்றல் என்கிறேன்.
 
புரிகிறது. ஆனால், இதை எப்படி விவசாயிகள் செய்ய முடியும். அரசு தானே செய்ய வேண்டும்...?
 
ஆம். நான் அரசைத்தான் சொல்கிறேன். பன்னாட்டு நிறுவனங்கள், பல ஆயிரங்கள் முதலீடு செய்கிறது. ஆனால், அவர்கள் தரும் வேலை வாய்ப்பு சில ஆயிரங்கள்தான். ஆனால், நாங்கள் இது போன்ற பசுமை தொழிற்கள் மூலம், சில லட்சங்கள் முதலீட்டில், பல பேருக்கு வேலை தருகிறோம். வளங்குன்றா வாழ்விற்கு, இது போன்ற தொழிற்களே சிறந்தது என நான் நம்புகிறேன். இயற்கையை சுரண்டுவதும் இல்லை, சூழலை மாசுப்படுத்துவதும் இல்லை. இது போன்ற தொழிற்களை ஊக்கப்படுத்த அரசு முன் வர வேண்டும். அதேவேளை, இளைஞர்களும் பசுமை தொழிற் பக்கம் வர வேண்டும். நான் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். மகிழ்வானதும், நிரந்தர வருமானம் வரக்கூடியதும் இதுதான்.
 
இப்போது சூழலியல் குறித்து அதிக விழிப்புணர்வு  ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தளத்தில் மிக உற்சாகமாக வேலை பார்க்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்தில் செய்த தவறையே செய்கிறார்கள், இயற்கையை சுரண்டும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, இயற்கையை காக்க போராடுகிறார்கள்... அவர்கள் பசுமை தொழில் செய்ய முன் வர வேண்டும்.  
 
இரவு அவருடைய கானகத்திலேயே தூங்கிவிட்டு காலை கிளம்பும் போது,  “பசுமை தொழிற்களில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இந்த கூட்டுறவு காட்டின் வாசற்கள் திறந்தே இருக்கிறது. அவர்கள் இந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளாலாம்”  என்று சொல்லி விடை கொடுத்தார்.
 
நுரையீரல் முழுவதும், கானகத்தின் சுத்தமான பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்

Wednesday, February 24, 2016

ஜிம்முக்கு போறதுக்கு முன்னாடி இந்த 7 விஷயங்களை படிச்சுட்டு போங்க!

ஜிம்முக்குச் செல்ல வேண்டும், உடற்பயிற்சி செய்து உடலை முறுக்கேற்ற வேண்டும் என பலருக்கும் ஆசை இருந்தாலும், ஜிம்மில் முறையான சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், உடல் வலி ஏற்பட்டு ஓரிரு நாட்களுக்குப் பின்னர் ஜிம்முக்குச் செல்வதையே நிறுத்திவிடுபவர்கள்தான் அதிகம். ஜிம்முக்குச் செல்பவர்கள் இந்த ஏழு விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

1.ஜிம்முக்குச் செல்லும்போது டிஷர்ட், டிராக் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து செல்வது அவசியம். உடைகள் இறுக்கமாக இல்லாமல் தளர்வானதாக இருப்பது அவசியம்.

2.முதன்முதலில் ஜிம்முக்குச் செல்லும்போது, ஃபிட்னெஸ் டெஸ்ட் எடுக்க வேண்டும். உடலின் நெகிழ்வுத்தன்மை, உடல் வலிமை, கார்டியோ உடற்பயிற்சிகளைச் செய்யும் திறன், உடலின்  சமநிலைத்தன்மை, பி.எம்.ஐ மதிப்பு போன்றவற்றைப் பரிசோதித்து, அதன் பிறகே உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும்.
 
 3. உடற்பயிற்சி தொடங்குவதற்கு முன்பு, ஐந்து நிமிடங்கள் வார்ம்அப்  பயிற்சிகள் அவசியம். வார்ம்அப் பயிற்சிகளுக்குப் பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான்,  உடற்பயிற்சி செய்வதற்கு உடலில் உள்ள தசைகள் ஒத்துழைக்கும். தசைப்பிடிப்பு உள்ளிட்ட தசையில் ஏற்படும் கோளாறுகளும் தவிர்க்கப்படும்.

4. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அதிகமாக கார்டியோ பயிற்சிகளைச் செய்வதால் உடல் எடை குறையும். ஆனால், உடல் ஃபிட் ஆக இருக்காது. அடிக்கடி சோர்வு ஏற்படும். எனவே, ஒரு மணி நேர உடற்பயிற்சியில் 40 நிமிடங்கள் கார்டியோ பயிற்சிகளையும், 20 நிமிடங்கள் வலுவூட்டும் பயிற்சிகளையும் செய்ய வேண்டும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள், 70 சதவிகிதம் வலுவூட்டும் பயிற்சிகளையும், 30 சதவிகிதம் கார்டியோ பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
 
5. 'உடற்பயிற்சியின்போது தண்ணீர் குடிக்கக் கூடாது' என்று சிலர் சொல்கிறார்கள். இது தவறு.  நாக்கு உலரும்போதுதெல்லாம் 50 மி.லி தண்ணீரைப் பருக வேண்டும். உடற்பயிற்சி முடிந்தவுடன் 15 நிமிடங்கள் கழித்து, தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கலாம்.

6. வாரத்துக்கு ஒரு நாள் உடற்பயிற்சிக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். தசைகளுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே, அடுத்த வாரம் முறையாக உடற்பயிற்சி செய்ய இயலும். எனவே, ஆர்வக்கோளாறில் ஜிம்மில் சேர்ந்ததும் ஏழு நாட்களும் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

7. உடற்பயிற்சிகள் அனைத்தையும் முடித்தவுடன் தசைகளின் இறுக்கத்தை  தளர்த்தும் வண்ணம் சில  ஸ்டிரெட்ச்சிங்  பயிற்சிகளை செய்ய வேண்டும். 3 முதல் 5 நிமிடங்கள் வரை செய்யும் இந்தப் பயிற்சியை, உடற்பயிற்சியாளர் கண்காணிப்பில் செய்ய வேண்டியது அவசியம்

Monday, February 8, 2016

 

ரோமன் ஹாலிடே', `மை ஃபேர் லேடி' போன்ற படங்களில் நடித்த ஆட்ரி ஹெபர்ன், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை. 1950-ம் ஆண்டுகளில் யுனிசெஃப் நிறுவனத்தில் நடைபெற்ற பல்வேறு நற்பணிகளில் பங்குகொண்டவர். அவர் தனது அனுபவத்தில் இருந்து சில அறிவுரைகளைக் கூறியிருக்கிறார்.

கண்கள் அழகாக இருக்க வேண்டுமா? உங்களைச் சுற்றி உள்ளவர்களின் நல்ல தன்மைகளைக் காணுங்கள்.

மெல்லிய உடல் வேண்டுமா? உங்களின் உணவை, பசித்தவர்களுடன் பகிர்ந்து உண்ணுங்கள். எப்போதும் சந்தோஷத்தையும் சிரிப்பையும் உடன் வைத்திருங்கள்.

சிரிப்புதான் ஆரோக்கியத்தின் முதற்படி. ஒப்பனை செய்துகொள்வதால் உங்கள் முகம் மட்டும்தான் அழகாக இருக்கும். ஆனால், மனம் அழுக்காக இருந்துகொண்டு முகம் அழகாக ஒளிர்வது தவறு அல்லவா?

அழகான கூந்தல் வேண்டும் என்றால், உங்களின் கூந்தலை, ஒரு குழந்தை தனது பிஞ்சு விரல்களால் தினமும் ஒருமுறை கோதிவிடட்டும்.

எவரையும் துச்சமாக நினைக்காதீர்கள்; பொருட்களைவிட அவசியம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மனிதர்கள்.

உங்களுக்கு இரண்டு கைகள் இருக்கின்றன. அதில் ஒன்று உங்களுக்கு, மற்றொன்று பிறருக்கு என்பதை நீங்கள் உணர வேண்டும்'



 
 
 
இது பெண்கள் அகராதி 
 
உனக்குப் பிடிச்சு இருந்தா நீ பண்ணு, எனக்காகவெல்லாம் பண்ணாம இருக்காதே. (பண்ணினா டைவர்ஸ் உறுதி!)

இது நல்லா இருக்கா? (நல்லா இருக்குனு சட்டுன்னு சொல்லிடுங்க பாஸ், நல்லா இல்லைனா உங்ககிட்ட கேட்டே இருக்க மாட்டாங்க!)

இட்ஸ் ஓகே பரவாயில்லை. (ரொம்ப டேஞ்சரான கட்டத்துல போய்க்கிட்டு இருக்கே. கால்ல விழு குமாருனு அர்த்தம்!)

நீ உன் ஃப்ரெண்ட் கணேஷ்கூடவே படத்துக்குப் போ, நான் நாளைக்கு பிஸி. ( ‘எனக்கும் வேலையிருக்கு படத்துக்கு போகலை’னு சொன்னாக்கூட தப்பிக்கலாம், ஆனா, ‘சரி செல்லம் படத்துக்குப் போறேன்’னு சொன்னீங்க. கணேஷ்கூடதான் கடைசி வரை சினிமா பார்க்கணும்!)

உன் இஷ்டம். (செஞ்சே மகனே, செத்த நீ!)

 இந்த வீக் எண்ட் நான் ஃப்ரீ. (வெளியே கூட்டிட்டுப் போடா வெண்ரு!)