Tuesday, December 6, 2011

கண்களும் கவர்ந்ததும்

எண்ட ஸ்நேக மாருதி


குண்டலினியை எழுப்பும் நிண்டலினி


பால நாகம்மா இல்ல இல்ல பால் ல நாகம்மா

பிகர பாக்க முடில....இப்பிடி போனா
பிகர பாக்கவே முடியாது






ஒ இதுதான் Hand Made ஆப்பா


Friday, December 2, 2011

ஏழாம் அறிவு



தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால்  இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய....



பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...???

ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட  முடிச்சா அப்ப அதுக்கு முன்னாடி இருந்த மக்கள் எந்த அளவுக்கு நாகரிகத்தில், கல்வியில், கட்டகலையில் சிறந்து விளங்கி இருக்க முடியும்??

ஆயிரம் ஆண்டு  கோவில் ஒரு சான்று அவ்வளவே...

250 வருசத்துக்கு முன்னாடி இருக்கும் பொருளை கூட ஒரு அமெரிக்கன் கடவுளை பார்ப்பது போல  பீல் பண்ணி பார்ப்பான்.ஆனா இங்க ஆயிரம் வருஷத்து கோவில் சுவத்துலேயே பான்பராக் போட்டு  எச்சி துப்பி வைப்போம்.....காரணம் நம்ம கிட்ட இருக்கும் அலட்சியம்.. அப்படி அலட்சியம் வரக்காரணம் என்ன?? நாம் மிக மிக பழமையானவர்கள்..


பொதுவாகவே தமிழர்கள் பற்றிய  செய்தியை இருட்டடிப்பு செய்வதற்க்கு என்றே உலகம் முழுவதும் பல குழுக்கள்   இருக்கின்றது.. அவர்களுக்கு தமிழர்கள் என்றால் எட்டிக்காய் போல கசக்கும்...தமிழ் என்ற வார்த்தையை பிரயோகித்தால் நக்கல் விடுவார்கள்.. தமிழில் பேசினால் அவர்களை அசிங்கப்படுத்துவார்கள்...அதனால்தான் இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் கிளர்ச்சியும் முக்கிய கிளர்ச்சியுமான வேலூர் சிப்பாய் கலகத்தை வரலாற்றில் இருந்தே தூக்கி தூர எறிந்தார்கள்..இந்திய அளவில் தமிழன் பெயர் பெற்றவிட்டால்..??

எப்போது எல்லாம்  தமிழர்கள் ஒற்றுமையாக எந்த செயலை செய்தாலும் உறவாடிக்கெடுக்க அவர்கள் காய் நகர்த்துவார்கள்.. அதனை செய்து முடிக்க தமிழ் இனத்திலேயே எட்டப்பர்கள் நிறைய பேர் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.. உதாரணம் இலங்கை ...



இலங்கையில் யாழ் நூலகத்தை எரித்து பசி தீர்த்தார்கள்..ஒரு இனத்தை வேர் அறுக்க அவர்கள் பற்றிய பழம்தகவல்களையும் கலாச்சாரத்தையும் சொல்லும் நூல்களை அழித்தாலே போதும்... உதாரணத்துக்கு தஞ்சை பெரிய கோவிலே இல்லையென்றால் நம்மாளே நம்மளை பத்தி பெருமையா நினைச்சி இருக்கமாட்டான்..

கல் தோன்றுவதற்கு முன் பிறந்த மூத்த தமிழ் என்று பெருமையாக சொன்னால் எல்லாம் நாம் நம்பப்போவதில்லை.. ஏதோ அந்த தஞ்சை பெரிய கோவில் இருப்பதால் இப்ப இருக்கற பயபுள்ளைங்க எங்களுக்கு ஆயிரம் வருஷத்திய பாராம்பரியம் இருக்குன்னு ..


இப்படியாக தமிழ் இனத்தின் மீது திட்ட மிட்ட காய் நகர்த்தலின் காரணமாக ஆறாம் நூற்றாண்டில், இங்கு இருந்து சீனாவுக்கு போய் குங்பூ எனும் தற்காப்பு கலை கத்துக்கொடுத்தது, புத்தமதத்தை பரப்பியவரும், பல்லவ அரச குடும்பத்தில் பிறந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர் என்றால்  எந்த தமிழருக்கும் தெரியாது... ஆனால் சீன பயணி யுவான்சுவாங் பல்லவ ஆட்சிகாலத்தில் தமிழகத்துக்கு வந்தார்  என்பதை மட்டும் தொடர்ந்து வாழையடி வாழையாக படித்து வருகின்றோம்..

காரணம் மேலே   சொன்னதுதான்.. காலம் காலமாய் நடந்து வரும் தமிழ் இனத்துக்கு எதிரான போர்...தமிழர்கள் புத்திசாலிகள் அவர்களை தட்டி வைக்கவில்லை என்றால் வளர்நது விடுவார்கள் என்பதுதான் பொறாமைக்கான அடிப்படை...

எம்ஜியார், சிவாஜி, ரஜினி , கமல் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கும் தமிழர்களுக்கு சீனா, ஜப்பான்,தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தமிழரின் பெருமையை  சொல்லும்கதைதான்..ஏழாம் அறிவு

Tuesday, November 1, 2011

செய்தியும் சிந்தனையும்

மனிதர்களில் அசுத்தமான வாயுவை பொதுஇடங்களில் விட தடை செய்த அரசாங்கம்!

farting-ban

மனிதர்களின் அசுத்தமான வாயு வை பொது இடங்களில் விட தென் ஆபிரிக்காவில் உள்ள மலவி என்னும் நாட்டில் தடை செய்ய பட்டுள்ளது.

யார் எல்லாம் சுற்று சூழலை அசுத்தம் செய்கிறார்களோ அவர்கள் அனைவரும் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
வாயுவைஎங்களால் நிறுத்த முடியாது,அது தானாகவே வரும், நாங்கள் பொது இடங்களில்வாயுவைவிடுவோம், நாங்கள் வாயுவை விட்டதை எப்படி அரசாங்கம் கண்டு பிடிக்கும் ? யார் அவர்கள் விட்ட வாயுவைஒத்துகொள்ள போகிறார்கள்?
அரசாங்கம் இதை விடுத்தது பொது இடங்களில் மலம்,சிறுநீர் கழிப்பவர்களை தண்டிக்கலாம்என்று மக்கள் கூறுகிறார்கள்.
செய்தியும் சிந்தனையும்  
ஒரு கொசுவர்த்தி சுருள் 100 சிகரெட்டிற்கு சமம்

                



புதுடில்லி: ஒருகொசுவர்த்தி சுருளின் புகை 100 சிகரெட்டுகளின் புகைக்கு சமம் என புதுடில்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் டாக்டர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார். புதுடில்லியில் மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சிமையம் போன்றவை இணைந்து நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டசெஸ்ட் ரிசர்ச் பவுண்டேசன் இயக்குனர் சந்தீப் சால்வி இதனை தெரிவித்தார். மே<லும் புதுடில்லியை சேர்ந்த பத்ரா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் பகாய் பேசும் போது இந்தியாவில் காற்றினால் ஒலியினால், மாசுவால் மனித உடல் நலத்திற்கு விளையும் கேடு குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றார்.ஒலி மாசுபாட்டால் ஆண்டு தோறும் ஒரு லட்சம் இந்திய குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், மரபியல் குறைபாடு உண்டாவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்
செய்தியும் சிந்தனையும்

பெல்ட்

இரண்டாம் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. முசோலினி ஹிட்லருக்கு தந்தி அனுப்பினார்,''நிலைமை மிக மோசம். உணவு அவசரத்தேவை. தயவுசெய்து உடனே அனுப்பி வைக்கவும்,''ஹிட்லரிடமிருந்து பதில் தந்தி சென்றது,''உணவுப் பொருட்கள் தங்களுக்கு அனுப்ப வசதி இல்லை. வருந்துகிறேன் ஒவ்வொரு தானிய மணியும் உள்நாட்டிற்கும்,ரஷ்யப் போர்முனைக்கும் தேவைப்படுகிறது ஆகவே வயிறுகளைப் பெல்ட்டினால் இறுகக் கட்டிக் கொள்ளவும்,''முசோலினி மீண்டும் தந்தி அனுப்பினார்,''தயவு செய்து பெல்ட்டுகளையாவது அனுப்பி வையுங்கள்.''

இரவல்
பிரபல நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒருவரிடம் புத்தகம் ஒன்றை இரவல் கேட்டார். அதற்கு அந்த நண்பர்,''என் அறையில் படிப்பதாக இருந்தால் தருகிறேன்,''என்றார். மார்க் ட்வைன் பேசாமல் திரும்பி விட்டார். சில நாட்கள் கழித்து அதே நண்பர் மார்க் ட்வைனிடம்,''உங்கள் தோட்டத்துக் கடப்பாறையை ஒரு நாள் இரவல் கொடுங்கள்,''என்று கேட்டார். மார்க் ட்வைன் அமைதியாகச் சொன்னார்,''என் தோட்டத்தில் தோண்டுவதாக இருந்தால் கொடுக்கிறேன்.''
ஒருவர் பெர்னாட்ஷாவைக் கேட்டார்,''ஏன் இப்படி பஞ்சத்தில் அடிபட்ட ஆள் மாதிரி இருக்கிறீர்கள்?''ஷா சொன்னார்,''என்னைப் பார்த்தால் அப்படி இருப்பது உண்மை. ஆனால் பஞ்சம் எப்படி வந்தது என்பது உங்கள் உருவத்தைப் பார்த்தாலே தெரியும்!''
ஒருவர் நேதாஜியிடம் சொன்னார்,''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்,''நேதாஜி சொன்னார்,''உண்மை.அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே பயம். அவ்வளவு பெரிய திருடர்கள்.''

 
திருநாள்

ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார். அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார். ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார். ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?

பிடித்த மதம்

மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார். விழா அரங்கு முழுவதும் மாணவர்கள். குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை. மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர். ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர். கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை. பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும். சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும். எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார். மாணவர்களிடையே அமைதி. அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல். அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது. அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் இனிய பேச்சைத் தொடர்ந்தார்.

வரவேற்பு

காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார். தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார். மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள். இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?''என்று பேசினார். காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.

மும்மணிகள்

ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,''என்று பேசினார். அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள். அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி. இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,''என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.

பேசும் எந்திரம்

பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை. நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,''என்றார். எடிசன் அவரிடம் சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''


உபயோகம்

1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு. அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான். ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார். உடனே சிறந்த பாராளுமன்றவாதியான  மகாவீர் தியாகி எழுந்து  ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார். பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை. அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.

 
சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில்  ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார். போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர். வாரியார் தொடர்ந்தார்,''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத்  தான்  சொல்கிறேன் .''

அறிஞர்

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர் உடனே கிண்டலாக சொன்னார்,''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?''  வாலி  சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.

தெரியுமா?

பிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு  சிறந்த மேதை. அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது. டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர் வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
                                                                         இப்படிக்கு.
                                                                       ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன் வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!''என்று பதில் சொல்லியதாம்.
                                                                        இப்படிக்கு
                                                                       ஆர்ச் பிஷப்

உடைமை

அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார். அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது. எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார். உயிருள்ள தன் மனைவியை ஒரு பொருளுடன்  ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை. எனினும் தன் நண்பரின் வாயடைக்க விரும்பினார். அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர், உமக்கு  உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத் திறக்கவில்லை.

எந்த கட்சி?

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக்  கட்சிக்காக  தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். கூட்டத்தில் ஒருவன் எழுந்து,''நான் ஜனநாயகக் கட்சியை  சேர்ந்தவன்,''என்று கூச்சலிட்டான்.  ''நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்?''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட். அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார். எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்? அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,''கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.''

கெளரவம்

இங்கிலாந்து அரசராக இருந்தவர் எட்டாவது எட்வர்ட். சிறுவனாக இருக்கும்போது ,ஒரு நாள் அவரது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது,''சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகக் கருதப்படுவார்கள்.''என்றார்.உடனே எட்வர்ட்,''என்ன,எல்லோரும் ஒன்றாகக் கருதப்படுவார்களா?என் பாட்டி விக்டோரியா மகாராணியாரைக் கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதுவார்கள்?''என்று சந்தேகம் கேட்டார்.''ஆமாம்.''என்று ஆசிரியர் கூறினார்.''அப்படியானால் என் பாட்டிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்காது. அவர் அங்கே உறுதியாகப் போக மாட்டார்.''என்று அப்பாவியாகப் பதில் கூறினார் எட்வர்ட்.

சோம்பேறி
மார்க் ட்வைன் இளைஞராக இருந்தபோது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆறு மாதம் கழிந்தபின் மேனேஜர் அவரை அழைத்து வேலையிலிருந்து, அவரை நிறுத்துவதாகக் கூறினார். காரணம் என்னவென்று வினவியபோது,மேனேஜர் சொன்னார்,''நீ ஒரு சரியான சோம்பேறி. நீ இந்த நிறுவனத்துக்கு லாயக்கில்லை.''மார்க் ட்வைன் உடனே சொன்னார்,''நீங்கள் தான் சரியான சோம்பேறி.''மேனேஜருக்கு கோபம் வந்தது. தன்னை ஏன் அவ்வாறு கூறினார் என்று கேட்க ட்வைன் சொன்னார்.';நான் ஒரு சோம்பேறி என்பதைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஆறு மாதம் ஆகியிருக்கிறதே? நீங்கள் ஒரு சோம்பேறி என்பதை நான் வேலையில் சேர்ந்த அன்றே தெரிந்து கொண்டேன்.''

மரியாதைக்குறைவு

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் யாரையுமே மரியாதைக் குறைவாய்ப் பேசி அறியாதவர். பாடல்களை கூட சற்று மரியாதைக் குறைவான வார்த்தைகள் வந்துவிட்டால் அதை மாற்ற வழி இருக்கிறதா என்று பார்ப்பார். கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்துக்கு,''யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க.''என்று ஒரு பாடலில் எழுதியிருந்தார். மெல்லிசை மன்னர் ,''என்ன கவிஞரே,இது மரியாதைக் குறைவாய் இருக்கிறதே,கொஞ்சம் மாற்றக்கூடாதா? யாரை நம்பி நான் பிறந்தேன்,போங்கய்யா போங்க,என்று எழுதக்கூடாதா?''என்று கேட்டார். அதற்கு கவிஞர் கிண்டலாகச் சொன்னார்,''டேய்,நீ ரொம்ப அடக்கமானவன். இது எனக்கு மட்டுமல்ல.ஊருக்கே தெரியும். விஜயவாடா என்கிற ஊரைக்கூட விஜயவாங்க  என்று  சொல்கிற  ஆள் நீ. பேசாம   நான் சொல்கிற  பல்லவியை  அப்படியே  போடு .''
வாசித்ததில் நேசித்தது

A typical day's life of today 's younger generation.


காலை எழுந்தவுடன் Mail Box
வாலைக்  குமரியுடன் Gtalk
சாலை முழுவதும் Cell Talk
மாலை முடியும் வரை  Chit Chat
மாலை முடிந்ததும் Work Hour Start

பொய்யுரை எழுத  Status Reports
மெய்யுரை சொல்ல Company Reports
பொய்யை மெய்யாக்க Status Call
மெய்யை உறுதியாக்க Conference Call
பொய்யும் மெய்யும் கலந்த Live Call

டாகுமென்ட் எழுத Copy & Paste
ப்ரோக்ராம் எழுத Cut & Paste
மறந்ததைப்  படிக்க  E-Learning
படிக்காமல் உறங்க Audio-Learning
படித்ததை நினைவூட்ட Google Search

கூடிப் பேச Conference Hall
கடலை போட Coffee Break
காதல் செய்ய Live Chat
குறட்டை விட Training Session
அரட்டை அடிக்க Lunch Break

ஓசியில் திங்க Team Lunch
தின்றதைச் செரிக்க Gym Sport
ஊரைச் சுற்ற Team Outing
ஆடிப்  பாட Team Festival
ஓடி விளையாட Sports Meet

பொழுது போக்க Birthday Party
இதையும் மீறி Friday Pub
அதையும் மீறி Weekend Party
ஆயிரம் இருந்தும் NO PEACE OF MIND

Wednesday, October 5, 2011

செய்தியும் சிந்தனையும்

நான் இந்தியன்



நான் சமீபத்தில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது அதில் என்னை பாதித்த
சில பத்திகளை இங்கே பதித்துள்ளேன் நீங்களும் படிங்க..


இந்திய மக்களைப் படிப்பது அதி பயங்கரமான அனுபவங்களைத் தருகிறது. ஒரு பக்கம் பிளாட்ஃபார்மில் சாமி கும்பிட்டு, பிள்ளை பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் குடும்பம் குடும்பமாக பக்கெட் சிக்கன் வாங்கிக்கொண்டு இருக் கிறார்கள். ஓட்டுக்குக் காசு வாங்குகிறார் கள். இலவசத்துக்கு முட்டி மோதுகிறார் கள். ஈழப் பிரச்னை உச்சத்தில் இருக்கும் போது வைகோவைத் தோற்கடிக்கிறார்கள். வடிவேலுவில் இருந்து குண்டு ஆர்த்தி வரை யார் வந்தாலும் கூட்டம் காட்டு கிறார்கள். கருத்துக் கணிப்புகளை அடித்து நொறுக்கி, வாக்குகளை மாத்திக் குத்து கிறார்கள். அன்பே சிவத்தையும் ஆரண்ய காண்டத்தையும் காலி பண்ணுகிறார்கள். 'திருப்பாச்சி’யை ஹிட்டாக்குகிறார்கள். அதே டெம்போவில் 'திருப்பதி’ எடுத்தால், மொட்டை அடிக்கிறார்கள். ஈழப் பிரச்னைக்கு 'உச்சு’ கொட்டிக்கொண்டே ஐ.பி.எல். பார்க்கிறார்கள். அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு மெழுகுவத்தி ஏற்றிவிட்டு, ஆர்.டி.ஓ. ஆபீஸில் லஞ்சம் கொடுக்கிறார்கள். குழந்தையை ப்ரீ.கே.ஜி. சேர்க்க ஒரு லட்சம் டொனேஷன்கொடுக் கிறார்கள். உணவகங்களில் மேஜை துடைக்கும் சிறார்களைத் திட்டுகிறார்கள். விஜய்க்கு எதிராக எஸ்.எம்.எஸ். இயக்கம் கட்டுகிறார்கள். 'மக்கள் இயக்கம்’ மாநாடு போட்டால், ரவுண்ட் கட்டுகிறார்கள். மதுக் கடைகளிலும் கூட்டம். தியான மையங்களிலும் கூட்டம். துணிக் கடை, நகைக் கடை எங்கெங்கும் கூட்டம். ஆனால், எப்போது யாரைக் கேட்டாலும், ''ஒரே பணக் கஷ்டம் பாஸ்'' என்கிறார்கள். நேர்மை, நியாயம், கோபம், அன்பு பேசும் எழுத்துக்கும் சினிமாவுக்கும் பேச்சுக்கும் கொந்தளிக்கிறார்கள், அழுகிறார்கள். எதிர் ஃப்ளாட்டில் நடக்கும் வெட்டுக்குத்தை மொபைல் பேசியபடி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருவில் ஒரு சத்தம் கேட்டால், கதவைச் சாத்திக்கொள்கிறார்கள். திருட்டு வி.சி.டி. பார்க்கிறார்கள். நித்யானந்தா சி.டி-க்கு அலைகிறார்கள். யாருக்கும் எதுவும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் சேர்த்த காசை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் அழுகிறார்கள். சமூகத்தின் பெரும் அவலங்களையும் அபத்தங்களை யும் நொடியில் கடந்து சென்றுவிடுகிறார் கள்!




ஒரு முறை நண்பனை பஸ் ஏற்றிவிட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போயிருந்தேன். அது பண்டிகை நாள் என்பதால் கூட்டம் கும்மியடித்தது. 200 ரூபாய் டிக்கெட்டுகள் 1,000 ரூபாய்க்கும் கிடைக்கவில்லை. திடுதிப்பென்று ஒரு பிளாட்ஃபார்மில் முண்டியடித்தது கூட்டம். ஒரு வயசுதான் இருக்கும்... ஒரு குழந்தையை யாரோ நடு பஸ் ஸ்டாண்டில் விட்டுப் போயிருக்கிறார்கள். ஒரு தூண் ஓரமாக அது கிடந்து அலறியது.



''ரொம்ப நேரமா அது அங்கதான் கெடக்குது. நானும் யாராவது வருவாங்கனு பாக்கறேன்... காணோம்'' என்கிறார் பக்கத்துக் கடைக்காரர். எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க... ஒரு பெண்மணி மட்டும் சட்டென்று குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டு, ''ச்சூ... ச்சூம்மா... அம்மாவைக் காணமா... வந்துருவாங்கடா குட்டி'' எனத் தட்டிக்கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்தது. மைக்கில் குழந்தையைப் பற்றி அறிவிப்பு கொடுத்தார்கள். அரை மணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஏதோ ஒரு நொடியில், அந்தப் பெண்மணி சட்டென்று குழந்தையை முந்திக்குள் வைத்துப் பால் கொடுக்க ஆரம்பித்தார். கூட்டத்தைக்கூடப் பார்க்கவில்லை. எனக்கு அந்தக் காட்சியைப் பார்த்த கணம், உடல் சிலிர்த்து அடங்கியது. கொஞ்ச நேரத்தில் கூட்டம் கலைந்து ஓடியது. அவரவர்க்கான பேருந்துகளில், அவரவர்க்கான ஊர்க ளுக்கு, அவரவர் போய்ச் சேர்வதுதான் முக்கியம் அல்லவா? போலீஸோடு குழந்தையை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணி சென்றார். எனக்கு அந்தப் பேருந்து நிலையமே நம் தேசத்தைப் போலத் தோன்றுகிறது

Friday, July 1, 2011


எனக்கு சிறு பிராயம் முதலே
ஒரு தேடல் உண்டு

வருடம் ஒரு முறை
மரணம் எனக்கு ஒரு அறிவுறுத்தலை
கொடுத்து கொண்டே இருக்கிறது.

எங்கிருந்து வருகிறது இந்த தகவலும்
தகவல் சார்ந்த நிகழ்வுகளும்?

எனக்குள் ஒரு கூக்குரல்.
வாடா தம்பி!
என்னென்னவோ கற்றுகொள்கிறாய்
என்னைப்படிடா என்று.
எங்கு கற்றுத்தருகிறார்கள்
நல்ல மரணம்?
அல்லது
எவன் கத்து தர்றான் நல்ல சாவு?

இன்று வரை மனதுக்குள்
அந்த கேள்விகயிறு எங்கு சென்றாலும்
தொடர்ந்து வருகிறது
அது ஒரு சிக்கு கயிறு. 

யார் தான் இந்த மரணத்தை
விரும்பி படிக்கிறார்கள்?
படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.

காலன் வந்து காலடியில் நிற்கும் போது
நிம்மதியாக போனவர்கள் எத்தனை பேர்?

என் வாழ்க்கையை நான் நிம்மதியாக,
மகிழ்ச்சியாக களித்தேன்,கழித்தேன்
அல்லது
என் வாழ்நாள் களி தேன் என்று.
விரும்பி விடை கொடுத்தவர் எவர்?


எனக்கு மரணம் கற்று கொடு
நான் தயார் என்று காலனின் பாடத்தை 
காதருகில் கேட்டவர்கள் எத்தனை பேர்  

அது போல் கேட்கவும் கற்கவும் தான் ஆசை
காலா என்னை கூப்பிட்டு செல்லும் முன்
எனக்கு மரணம் கற்றுக் கொடு...
நான் என்ன வாழ்க்கை வாழ்ந்தாலும்
முழு மனதோடு விடை கொடுத்து
மரணப்பள்ளியில் விசும்பலில்லா
சேர்க்கை கிடைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் எங்கு கிடைக்கும்
முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்
இயற்கை செல்வங்களே
இயற்கை கடவுள்களே!

Saturday, April 30, 2011

நிகழ்வும் தகவலும்


உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்………


  • ஒக்டோபஸ்சின் மூளையில் சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.
  • நத்தைகள் 15 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியவையாகும்.



  •  ராஜ நாகத்தின் விஷம் மிகவும் அபாயகரமானதாகும். ராஜ நாகத்தின், 1கிராம் விஷமானது 150 பேரைக் கொல்லக்கூடியதாகும்.
  • சுண்டெலிகளின் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 650 தடவைகளாகும்.

  • மின்மினிப்பூச்சிகளில், ஆண் மின்மினிப்பூச்சிகளே பறக்ககூடியவையாகும்.
  • பூனைக்குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் காணப்படும்.
  • உலகில் மிகச்சிறிய கிளி இனமாக பிக்மி (Pygmy) கிளிகள் விளங்குகின்றன. இந்த இன கிளிகளின் சராசரி நீளம் 8சென்ரி மீற்றர்கள் ஆகும்.

  • இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனமாக அவுஸ்திரேலியாவின் கியா இன கிளிகள் விளங்குகின்றன.
  • குதிரைகள், எலிகள் ஆகியனவற்றினால் வாந்தியெடுக்க முடியாது. இதன் காரணத்தினால்தான் எலிகளுக்கு விஷம் வைத்து அவற்றின் தொல்லையினை கட்டுப்படுத்த முடிகின்றது.

  • உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்
வாசித்ததில்  நேசித்தது




டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.


01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

04. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

05. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

06. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

07. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

08. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

09. தொலைபேசியில் உரையாடும் போது அவதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.


நான் இன்னா நெனக்கிரேன்னா

பெண்கள் சொல்றதெல்லாம் தட்டாம முகம் சுளிக்காம மானம் ஈனம் ரோஷம் பாக்காம செய்ற / இருக்குற காதலன் நல்ல காதலன் அதே போல் செய்ற / இருக்குற கணவன் நல்ல கணவன்.

Thursday, April 21, 2011

தழும்பு





பேகம்பூர் ஸ்டாப்பிங்லாம்  இறங்குங்கப்பா..... பாக்யராஜ் அண்ணன் குரல் கேட்டது...நான் என் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தேன். அம்மா அப்பொழுதுதான் தலைக்கு ஊத்தி முடியை சிக்குநீக்கியால் உருவி விட்டு கொண்டிருந்தார்கள். எனக்கு எப்போதும் என் அம்மாவின் மடியில் படுத்து அல்லது உக்கார்ந்து இருப்பது மிக மிக பிடிக்கும் ஏனென்றால் அது ஒரு தொட்டில் போலவே தோன்றும். நான் விருட்டென்று எழுந்து கொண்டேன். வெளியே வந்து பார்த்தேன். என் அண்ணன் கண்டக்டர் ஆகவும் பாக்யராஜ் அண்ணன் டிரைவர் ஆகவும். முன்னும் பின்னும் இடைவெளி விட்டு இடுப்பில் கயிறு சுற்றி பேரூந்து விளையாட்டு விளையாடுவது கண்டேன். பயணிகளை ஒவ்வொரு தெருவுக்கும் சென்று கட்டாயபடுத்தி இழுத்து வந்திருப்பார்கள் போல. பயணிகள் முகத்தில் கோவமும் பயமும். ஏனென்றால் என் அண்ணன் நண்பர்கள் ஒரு பெரிய பட்டாளம். டிரைவர் பாக்யராஜின் தொல்லை தாங்கமுடிய வில்லை. அவர்களுக்கு பிடித்த வீட்டின் வாசலை ஒரு ஸ்டாப்பிங் அல்லது ஒரு பெரிய ஊராகவே நினைத்து பயணிகளுக்கு எச்சரிக்கை விட்டு கொண்டிருந்தார். பஸ் கொஞ்ச நேரந்தான் நிக்கும் இறங்குரவுங்க இறங்கிக்கங்க...ஓவரா பஸ் போலவே பீல் பண்ணி கொண்டிருந்தார். எங்க அண்ணன் டிக்கெட் கிழித்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து வைத்திருந்தார். இதுல ஒரு ச்செக்கர் வேற வருவாரு அடுத்த தெருவில். இந்த டிக்கெட் எல்லாம் நாங்க பள்ளிக்கு செல்லும் போது பஸ்ல கொடுப்பதை சேகரித்து வைத்தவை. நான் என் அண்ணனிடம் நானும் வர்ரேன்னு கேட்டேன்..உடனே டிரைவர் ....டேய் நீயெல்லாம் ஸ்பீடா எங்க கூட ஓட முடியாது பேசாம இருடான்னு  சொன்னாரு. என் அண்ணன் வேற போடா வீட்ல உக்காரு உன்னால ஓட முடியாதுன்னு சொல்லும்போதே. நான் வீட்டுக்குள்ள  போய் என் அம்மாவை ரெக்கமண்டஷன் க்கு கூட்டிட்டு வந்துட்டேன்...எங்க அம்மா வேண்டாஞ்சாமி பேசாம் இங்க இருடா அவுங்க கூட உன்னால் வேகமா ஓட முடியாதுடான்னாங்க. அப்பறம் என் தொல்ல தாங்காம .. தம்பி இவனையும் சேத்துக்கங்கப்பா....கீழ விழுந்துராம ஓடு சாமின்னு அனுப்பி வச்சாங்க. எங்கண்ணன் மொரச்சுக்கிட்டே ஏறிதொலடா ன்னு நேர் கோட்டுல கயிருக்குள்ள நின்ன பயணிகளோடு நானும் குனிஞ்சு உள்ள போய்ட்டேன். டிரைவருக்கு நான் ஏறினது பிடிக்கல. பல ஸ்டாப்ல கழட்டிவிட பாத்தாங்க. நான் ..ம்ஹூம் நகராப்ள தெரியல. உடனே டிரைவர் எல்லாரும் கம்பிய பிடிச்சுக்கங்க பஸ் பறககபோகுது டாப் கியர் போட்டு ஓட்ட ஆரம்பிக்க. பயணிகள் வேகமா ஓட ஆரம்பிக்க .....என்னால வேகமா ஓட முடியல ...உடனே பஸ்ல இருந்து குதிக்கும் எண்ணத்தில் ஒரு காலை தூக்கி கயிறுக்கு மேலே தூக்கி தாவி தப்பிக்க முயற்சி பண்ண . கயிறு என் பின் முழங்காலை உரசி வேகமா முன்னால் செல்ல கயிறு என் காலை அறுக்க ஆரம்பிக்க கத்த ஆரம்பித்து விட்டேன். டிரைவர் உடனே சடன் பிரேக் போடா பயணிகள் என் மேல் விழ. அலுத்து கொண்டே டிரைவர் மற்றும் நடத்துனரால்  வெளியேற்றப்பட்டேன். உடனே. காலை விந்தி விந்தி இழுத்துக்கொண்டே வீட்டுக்கு  வந்தேன் அம்மா நீ போகும் போதே தெரியும்டா இப்டி நடக்கும்னு சரி உக்காரு ன்னு ஏதோ ஒரு களிம்பு தடவினார்கள்..... ஒரு வாரமா அந்த புண்ணை ஆற விடாம பாத்துக்கிட்டேன்.  எனக்கு மனசுல ஒரு வெறி வந்துச்சி அடுத்த வாரம் நான் கயிறு ரெடி பண்ணி கண்டக்டர் ரெடி பண்ணி பயணிகள் ரெடி பண்ணி டிரைவர் ஆனேன். ஆனா என் பஸ் எல்லைரையும் ஏத்திகிச்சு ....மெதுவாகவும்  போச்சு வேகமாவும் போச்சு...குழந்தைகள் முதல் எல்லைத்தையும் ஏத்திக்கிச்சு அந்த கால வச்சுகிட்டே பன்க்ச்சர் ஆன டயரோட பஸ்ஸ ஓட்டினேன்.நேற்று வேலையின் என்கிரிந்தோ வந்த நீளமான கம்பி என் முழங்காலை உரசி எனது 
பாண்ட்டை கிழித்த பொது தழும்பு தெரிய  தடவினேன்......கீழ விழுந்திடாம ஓடு சாமி ன்னு எங்கம்மாவின் குரல்  அதே தொனியில்  அதே கணீர் குரலில் என் காதுக்குள்ளே கேட்டது.

Sunday, April 3, 2011

செய்தியும் சிந்தனையும்


இந்திய கிரிக்கெட் அணியின் இல்லை இல்லை சோத்துக்கே இல்லாட்டினாலும் கிரிக்கெட் ல் ஜெயித்தால் நாமே ஜெயித்தது போல் இருக்கும் ஒவ்வொரு இந்தியனின் கனவும் நிஜமாகிப் போனது. மறுபடியும்
நாட்டுக்காக விளையாடும் மன நிலையே ஜெயித்துள்ளது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். இறுதி விளையாட்டில் Man  of  the  match award கௌதமுக்கு கிடைத்திருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர்தான் அணியின் சிக்கலான சூழ்நிலையை விடுவித்தவர். பரவாயில்லை தோணியும் சுய விளம்பரத்துக்கான விளையாட்டை எப்போதும் ஆடதவராகவே தெரிகிறார். எனவே அவர் வாங்கியதில் ஒன்றும் வருத்தமில்லை. நான் நினைத்தது போலவே யுவராஜ் Man  of  the  Series  அவரது பெற்றுள்ளார். எனக்கு ஒரு வருத்தம் முத்தையா முரளிதரன் பந்தை பொரிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அவர் மேல் ஒரு விளையாட்டு வீரரா ஒற்றும் வருத்தமில்லை ஆனா அவரை என்னால் ஒரு தமிழனாக பார்க்கவே முடியாது. காரணம் மக்களுக்கு பயன்படாத விஞ்ஞானம் தேவையே இல்லை என்பது போல். இது வரை தமிழர்களின் நலனில் அல்லது அவர்கள் மரணத்தில் கூட வருத்த படாத உள்ளம் அவருக்கு. பாப் மர்லே  தன இசைத்திறமையின் மூலம் மக்கள் விடுதலைக்கு வழி வகுத்தார். முரளி ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் அவ்வளவே. கல்யாணம் செய்யும் பொது மட்டும் நம் தமிழ்நாட்டில் வந்து பெண் எடுத்தார். எப்படியோ போகட்டும். தோணி கையால் உலககோப்பை வாங்கியது மிக சந்தோசம். சந்தோசம் சந்தோசம்.
அவர்கள் எல்லாம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்.

ஆனால் அதே நேரத்தில்

அரசாங்கம் இவர்களை கௌரவ படுத்துகிறேன் என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் பரிசுகளை பணத்த நிலத்தை வாரி இறைப்பது வருத்த்தமளிக்கிறது. ஏனென்றால் உலகத்திலேயே மிக மிக பணக்கார கிரிக்கெட் போர்டு நம் ICC தான். இத்தனைக்கும் அவர்கள் நம் அரசாங்கத்துக்கு கட்டு படாதவர்கள். மற்ற விளையாட்டு துறை இப்படியா
என்று நாம் சிந்திக்க வேண்டும். ஒரு அரசாங்கத்துக்கு கட்டு படாத போர்டு க்காக விளையாடும் வீரர்களுக்கு ஏன் நம் அரசாங்க பணத்தை செலவழிக்க வேண்டும். மேலும் நம் நாட்டு மற்ற விளையாட்டு வீரர்களை நினைத்து பாருங்கள் எத்தனையோ குறிப்பாக ஒலிம்பிக் ல் விளையாடிய
வீரர்கள் பலர் சோத்துக்கே கஷ்டபடுகிறார்கள். ஒரு அரசாங்க வேலைக்கு நாய் படாத பாடு படுகிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

இப்படி ஏதாவது கேட்டால் நம்மை திட்டுவார்கள். உங்களுக்கெல்லாம் நல்லதே தெரியாத என்று. எப்படியோ போங்க......

Tuesday, March 29, 2011


வாசித்ததில்  நேசித்தது





என் நண்பர் சிவா துபாய் ல் இருக்கிறார். என்னுடன் ஆரம்ப பள்ளியில்
இருந்து மேல்நிலைப்பள்ளி வரை என்னுடன் படித்தவர் அவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அது எனக்கு பெருஞ்செய்தியாகவே
எனக்கு பட்டது அதை நீங்களும் படியுங்கள்.


தமிழ் நாட்டில் வாழ்வதற்கு உண்டான தகுதிகள்



நீங்கள் படித்தவரா ? ..............
உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா ?.............
டேக்ஸ் அதிகம் கட்டுபவரா ?...........
சொந்த தொழில் செய்பவரா ?.................

அப்படியானால் நீங்கள் புத்திசாலி இல்லை

ஆமாம் ........ நீங்கள் தமிழ் நாட்டில் வாழும் புத்திசாலி இல்லை

ஏனென்றால்

நாங்கள் படிக்காதவர்கள் .......
சொந்த வீடு , தொழில் எதுவுவுவும் ........ இல்லை .........
பரம ஏழை ..........

ஆனால்

வாழ்வதற்கு வீடு ............
மாதம் தோறும் 35 கிலோ அரிசி
அதை பொங்கி திங்க காஸ் அடுப்பு ........
அரைத்து திங்க கிரைண்டர் , மிக்சி ......
இதற்க்கு ஏற்ப மளிகை சாமான்கள் .....
தீபாவளி பொங்கலுக்கு துணிகள் .....
காலை உணவு முடித்து பகல் பொழுது கழிய மாலை வரை வண்ண தொலைகாச்சி பெட்டி ...
இடையே அரட்டை அடிக்க செல் போன் ....
இரவு வந்தா மலிவு விலை மது , இலவச மின்சாரம் ....
பிறகு சும்மானச்சுக்கும் போரடிச்சா 100 நாள் வேலை ( இஷ்டம் இருந்தா .. போன போவுது )

எங்கள் குழந்தைகள் படிக்க ... இலவச பஸ் பயணம் , சைக்கிள் , மதிய உணவு ,, லேப்டாப் ... உதவி தொகை ....

அவர்கள் கல்யாண செலவு , பிறகு புள்ள பேருக்கு ஊக்க தொகை ,..

பிறகு எதுக்குங்க நாங்க உங்கள மாதிரி கஷ்ட படனும்
நாங்க செய்வது தினமும் இரண்டு வேலை ....

ஒன்னு எங்க காலை கடனை நாங்களே முடிக்கணும் ,
இரண்டு நைட் சமா சரத்தே நாங்களே முடிக்கணும்
( ரொம்ப கஷ்டமான வேலை )

பிறகு 5 வருசத்துக்கு ஒரு முறை போய் ஒரு பட்டனை அழுதிட்டு வந்தா

எங்களுக்கு எல்லாமே வீடு தேடி வந்திடும்

இவ்வளவு நல்வங்கள .. தமில் நாட்டில் மட்டுமே பார்க்கமுடியும் ...


என்னவோ போங்க நீங்க எல்லாம் கஷ்டபடுறத எங்களாலே சகிக்க முடியலே ...

சீக்கிரம் நீங்களும் எங்களோட சேர்ந்துடுவீங்க ....

நிச்சயமா ... எங்க குலதெய்வம் .. முனியப்பா சாமி சத்தியம் ... குலதெய்வம் பக்கத்துக்கு உங்களுக்கு துணையா இருக்கும்


என்னவோ நான் சொல்லறத சொல்லிட்டேன் .. அப்புறம் கஷ்ட படறதும் படா ததும் உங்க இஷ்டம் ...

உங்களுக்கு புத்தி சொல்லறளவுக்கு நான் ஒன்னும் பெரிய புத்திசாலி இல்லை

ஏனென்றால் நான் படிக்காதவன்....... பரம ஏழை ......



இப்படிக்கு ..,

தமிழ் நாட்டின் பரம ஏழை

Sunday, March 27, 2011

திரையும்  கலையும்

யுத்தம் செய்

மறுபடியும் பாரதியாரின் பாடல்வரி தலைப்பில் மிஷ்கின் படம். வாழ்க!
ஒரு நல்ல இயக்குனர் என்றால் அனைத்து வகை கதைகளையும் கையாள
தெரிந்தவராக இருப்பதுதான் அவரை தனித்து அடையாளப்படுத்தும். அந்த
வகையில் மிஷ்கின் தனித்து தெரிகிறார். அடுத்து காதலையே பிடித்து தொங்கி கொண்டிருக்கும் ஜல்லியடி இயக்குனர்களுக்கு மத்தியில் வித விதமான பரிமாணங்களை காட்டும் மிஷ்கின் நம் தமிழ் திரை உலகிற்கு புதியவரும் மனதில் பதிபவரும் கூட.  ஆஹா thriller  ஒரு நல்ல thriller  பார்த்த அனுபவம்.  (அதான் ஒரு த்ரில்லர் சக்சஸ்  ஆயிடுச்சே இனிமேலாவது 
செண்டிமெண்ட் பார்த்தாவது த்ரில்லர் எடுங்கப்பா எத்தன நாளைக்கு 
தான் வகை வகையா காதல எடுப்பீங்க) 

கதை ஆரம்பம் சிறிது  குழப்பமடைய கூடியதே கவனமாக கூடவே நாம் நகர வேண்டும். வயதான பெருசுகளின் சபலங்களினால் பலியாகும் இளம்பெண்கள் அதற்கு உடந்தையாய் இருக்கும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் நம் தமிழ் பட கதா நாயகர்கள் .....அதாங்க ரவுடிகள்.
தன் தங்கையை தொலைத்த கதையை மீறாத காவல் துறை அதிகாரி
கொஞ்சம் கொஞ்சமாக கண்டு பிடித்து பறந்து பறந்து சண்டை போடாமல்
நடைமுறை வாழ்க்கை மனிதனாக நீதியை நிலை நாட்டுகிறார். போதும்........
இதோட நிறுத்திக்குவோம்.


இயக்குனர் பாராட்ட பட வேண்டியவர். நல்ல கதை , திரைக்கதை, காட்சி அமைப்பு, நடிகர்கள் தேர்ந்தெடுத்த விதம். Voyerism  திரையில் கொஞ்சம் கூட நெளியாமல் பார்க்க வைக்கும் காட்சிகளில் இயக்குனர் தெரிகிறார்.
அடுத்து எனக்கு மிக மிக பாராட்ட தோன்றுவது இசை. உண்மையிலேயே.
அறிமுக இசையமைப்பாளர் எவரும் இது வரை தந்திடாத பின்னணி இசை.
நல்ல குத்து பாடல். படத்தில் இல்லாத இளையராஜா சாயலில் மிஷ்கின் பாடிய ஆராரோ பாடல் எனக்கு மிகவும் பிடித்தது ஏன் படத்தில் வைக்கவில்லை இயக்குனருக்கு தான் தெரியும். அனைத்து கதாபாத்திரங்களுமே நிறைவாக செய்திருக்கிறார்கள்.


 இடைவேளை வரை பர பர வென்று நகரும் கதை க்ளைமாக்சை நெருங்க நெருங்க சற்று நீளமாக தெரிகிறது. குத்து பாட்டு மற்றும் மிஷ்கின் ன் கிளிஷே சண்டை காட்சி தவிர்த்திருக்கலாம். மிஷ்கின் கால்களின் காதலன் இம்முறையும் திரையில் தெரிய வைக்கிறார். லக்ஷ்மி மொட்டை தலையில் மிரட்டினாலும் அவர் அயோக்கியர்களை வெட்டும் கண்களின் காட்டும் தீவிரம் கைகளில் தெரியவில்லை இருந்தாலும் மிக நன்று. Y .G ,
அவர்களின் பையன், ஜெயப்ரகாஷ் டாக்டர் நன்றாக நடித்துள்ளார், சேரன், அவரின் சக காவல் துறை நண்பர்கள் ஒரு இடத்தில் பார்த்து கொண்டே இருக்கிறார்கள் அப்புறம் வசனம் பேசுகிறார்கள். இதுவும் மிஷ்கின் ன் பாணி.

நன்று மிஷ்கின் Keep  it  up . அடுத்து வேற Genre  முயற்சி பண்ணுங்க. வாழ்த்துக்கள்.


குறிப்பு.
இந்த படம் வெளி வருவதற்கு முன்பே Memories  of  murder  என்ற கொரிய படத்தின் Copy  என்று Blog  லும், Face  Book லும்  , Message  லும். வறுத்து எடுத்து
விட்டார்கள்  நம்மவர்கள். என்னைப்பொருத்த வரை பார்க்காமலே முடிவுக்கு
வருவது படைப்பாளிகளை காயபடுத்தும். மேலும்  வெளி வந்த பின்பும
Even   சாரு நிவேதிதா கூட இந்த படம்  மேலே சொன்ன கொரியப் படத்தின்
டப்பிங் என்று சொல்லியிருந்தார். நந்தலாலா படத்தில் சில காட்சிகள்
கிக்குஜிரோ  படத்தின் சாயலின் இருந்தது. ஆனால் இந்த படம்
Memories  of  murder ஐ போன்று உள்ளதா ..... எனக்கு அப்படி தோன வில்லை
கீழே அந்த படத்தின் Link  வைத்துள்ளேன் பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஆனால் ஒன்று  Memories  of  murder  படமும் நன்றாக இருந்தது.

Friday, March 25, 2011

செய்தியும் சிந்தனையும்




தேர்தல் என்னும் தேர்வு வந்து விட்டது. இதுதாங்க உண்மையிலேயே
Public  Exam . எல்லோரும் கலந்துக்கிறோம்ல. கையில் கரும்புள்ளி வைத்து நாட்டில் இருக்கும் கரும்புள்ளி அழிக்க நேரம் நெருங்கி வந்து விட்டது. சூட்டோடு சூடாக ஒட்டு போட வேண்டாம் உட்கார்ந்து யோசிப்போம் தினமும் கிடைக்கும் நேரத்தில். யாரோ எவரோ வரட்டும் நமக்கென்ன என இருக்க வேண்டாம். நம் வரிப்பணத்தில் நமக்கு திட்டங்களை நிறைவேற்றி
அதை சொந்த பணத்தில் செய்தது போல் காட்டிகொல்பவர்களை அடையாளம் காட்டிக்கொடுப்போம் . இன உணர்வை ஓட்டுக்காக மட்டும் உரசி பார்ப்பவர்களை விரட்டியடிப்போம் . ஆயிரம் கொடுத்து பல ஆயிரம் திருட நாமே உடந்தையாக இருக்க வேண்டாம். வேட்பாளரின் ஜாதியை மறுத்து நீதியை காப்போம். இலவசங்களை மறுப்போம் நம் பொருளை நம் உழைப்பில் வாங்க வேலை உருவாக்கிகளை ஆதரிப்போம் . ஆண், பெண், திருநங்கைகள் உரிமைகளை செயல்படுத்த நினைப்பவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம். விவசாயிகளை விவசாயத்தை காப்பவர்களை ஆதரிப்போம். அனைவருக்கும் ஒரே கல்வி ஒரே கட்டணம்
செயல் படுத்துபவர்களை கண்டு கொள்வோம்..................................................................


நெறையா இருக்குங்க ....எதுவுமே நம்பிக்கை இல்லையா
49 ஓ போடுவோம்.  அல்லது சுயேட்ச்சைக்கு போடுவோம். ஐயையோ எல்லோரும் இப்படி போட்டா யாருமே வரமுடியாதே.


இது வரைக்கும் செஞ்சவவீங்க வச்சுருந்த நாடு இனிமே ஒன்னும் குடி மூழ்கி போயிட போவதில்லை. நல்லாத்தான் இருக்கும். ................................


இதில் காமராஜர்...கக்கன்..ஜீவா .மற்றும் மறைந்த நம் தலைவர்களை நான் சொல்லவில்லை.........இப்போதிருக்கும் ஒரு சில கம்யூனிஸ்ட் தலைவர்களும் அடக்கம்.


மன்னிக்கணும் நேர்மையும் நீதியும் கொண்ட ஐயாக்களே  

Saturday, March 19, 2011

கண்களும்,கவர்ந்ததும்

    You the fish, can you smile? - Fun Animals3353735084 7fcc1c472b o 100+ Funny Photos Taken At Unusual Angle [Humor]   image

Saturday, March 12, 2011

செய்தியும் சிந்தனையும்


இன்னும் நமக்கு உறைக்கப்போவதில்லை. இயற்கையை சீண்ட சீண்ட
நாம் இன்னும் அழிந்துதான் போகப்போகிறோம். பூமி வெப்பமயமாதல் பற்றி, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றி, விலங்குகள் பாதுகாப்பு பற்றி,
முதியோர்கள் பாது காப்பு பற்றி, விவசாயம் பாதுகாப்பு பற்றி, இன்னும் கொஞ்ச வருஷத்தில் வரபோகிற உணவு பஞ்சம் பற்றி, இனி ஒரு உலகப் போர் தண்ணீருக்கா பற்றி.... பேசுவது நாகரீகமாக, பொழுது போக்குக்காக,
அல்லது இவையெல்லாம் அடுத்தவருக்கு,.... இப்படி அசட்டையாக இருப்போமானால்.. நமக்கு வரபோவது உயிரிழப்புகளும், மற்ற இத்யாதிகளுமே.

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு இதனை கணிக்க முடியும், வெற்றி கொள்ள முடியுமா? யோசிப்போம். வாய்ப்பே இல்லை. வாய்ப்பு இருந்தால்.
முன்னறிவிப்பு கொடுத்தே ஜப்பானில் இவ்வளவு அழிவு வந்திருக்குமா.

சிட்டுக்குருவி பார்க்க முடிகிறதா
சட்டை கழட்டி பட்டாம்பூச்சி பிடிக்க முடிகிறதா
மண் வாசனை மணக்கிறதா நாறுகிறதா
நம் சட்டியில் நம் சோறா அல்லது பர்கரா, பிசாவா  
வானம் பார்த்த பூமியா வானமே பார்க்காத பூமியா
புத்தகத்தில் மட்டும்தான்  பார்க்கும் விலங்குகளா
முற்றத்தில் கூடு கட்டுபவை பறவைகளா கொசுக்களா
காடுகளா அல்லது கழித்து கட்டபபடும் அணுமின் நிலையங்களா
மழை வந்து நாளாச்சா வருசமாச்சா
மலைகளா அல்லது மரங்கள் சிரைத்த மொட்டைத்தலைகளா
வானமா அல்லது அவை கரும்புகை சுவாசிக்கும் பீரங்கி மூக்குகளா
தண்ணீர் பாக்கெட்டிலா பக்கெட்டிலா எதுவோ? தண்ணீர் தானா?
உறங்க ஊமையான ஒரு நாள்  கிடைக்கிறதா 
நெல் செடியிலா மரத்திலா? கேள்வி தோன்றுகிறதா?
ஆறுகளில் படகுப்பயணமா பாதப்பயணமா?
உங்களின் ஒருமூச்சு பயணம் நிறுத்தங்களை கொண்டதா?

இந்த கேள்விகளை நானும் நீங்களும் கேட்டு பெரும் பதிலை பொறுத்து
நம் வாழ்க்கை முறையை இயற்கையோடு தொடங்குவதா வேண்டாமா
என்று முடிவு செய்ய வேண்டும்.

இயற்கையை கொண்டாடுவோம்
சுற்றுபுறத்தை காப்போம்
என்னால் முடிந்த அளவு இவ்வுலகுக்கு
கெடுதல் இல்லாத உயிராய் இருப்பேன்
என்று உறுதி கொள்வோம்.
அதற்கு இயற்கையை புரிந்து கொள்வோம்.


Wednesday, March 9, 2011


நான் எழுதி கிழித்தது




எதிரும் புதிருமாய் நான்.
எனெக்கென தோன்றும்
கேள்விக்கணைகள்  எப்போதும்
நிழல் போல துரத்துகிறது.
ஆனால் அடைக்கப்பட்ட
மூளையின் வளைவுகளில்
நகரும் படிமங்களாய்.
என் கேள்வியின் நிழல் கருப்பு அல்ல
வெள்ளையும் அல்ல...
மனிதனின் நிறங்களை தின்னக்கூடியவை. 
எதிர் தோன்றும் நிகழ்வுக்கேற்ப
வேண்டுமென்றே நிறம் மாற்றிக்கொள்ளும்
பச்சோந்தி கேள்விகள்
ஏன் நான் இப்படி?
அதற்கும் உடனே ஒரு தர்க்கம்.
நான் என் கேள்விக்கான பதிலை 
கேட்கும் போதே 
அது இன்னொரு கேள்வியை 
தலைக்கு வெளியே பிதுக்குகிறது.
நான் உண்மையிலேயே எனக்கான எதிர்தான்.
இதற்கான விடை
என் கேள்விகளின் ஆரம்ப புள்ளியில்
ஆரம்பிக்கிறது ...
ஒவ்வொரு புள்ளியாக இணைக்கையில்  
எனது அலங்கோலம்
கோலமாகவே தெரிகிறது
புள்ளிகள் இல்லாததாய்!
சிக்கலான சிந்தனையாய்!
புரிகிறது நான் புதிர் என்று
எப்போது என்ன  நினைப்பேன்?
என்ன  செய்வேன்?
எனக்கு தெரிய விளைகையில்  
மறுபடியும் கிடைக்கிறது
கேள்வி என்று சொல்லக்கூடிய பதிலும்  
பதில் என்று சொல்லக்கூடிய  கேள்வியும்
என் சிலந்திவலை மூலையில்
நேர் கோட்டில்
வளைந்து வளைந்து ஓடுகிறது
தொடர் ஓட்டமாய்
கையில் கேள்விக்கோலுடன்.
ஆம்!
நான் எனக்கு எதிர்தான்.
நான் எனக்கு புதிர்தான்.
மற்றவனுக்கு?
மனநலமற்றவன்தான் .






Saturday, March 5, 2011

சில Funny (பன்னி) த்தனமான கேள்விகள்
என்னிடம் சில கேள்விகள் உள்ளன (ரொம்ப நாட்டுக்கு முக்கியம்). இது போல் உங்களுக்கு கண்டிப்பா தோனிருக்கும். தோணினா பதில் அனுப்புங்க)



முகத்திலோ அல்லது உடம்பிலோ மென்மையான முடியை ஏன் பூனை முடி என்கிறோம் ( பூனைக்கு ராயல்டி கொடுத்தமா

யாராவது கேள்வி கேக்கும்போது ஏன் மூக்கின் மேல் ஆள்காட்டி விரலை வைத்து தட்டிக்கொண்டே மேல் மூளையை பார்க்கிறோம் ( எவனும் அங்க உக்காந்து எடுத்து குடுக்குறானா

theatre ல் இடைவேளையின் போது..ஏன் நண்பனிடம் ... இனிமேல்தாண்டா கதையே என்கிறோம் ( இதுவரைக்கும் என்னத்த பாத்த)


நல்லா அழுதுகிட்டு இருக்கும்போது கொட்டாவி வந்தா என்ன செய்வீங்க.. தொடர்ந்து அழ முடியும்னு நெனக்கிறீங்க? ( விட்டு விட்டு அழுப்பா)


கறிக்கோழி விலை ரூ.150௦ என்று brailer  கோழியை சொல்லுகிறவர்கள் 
ஏன் மற்ற கோழிக்கு எலும்பு கோழி விலை ரூ.75 என்று போடுவதில்லை  


நாட்டு கோழி விலை போடுகிறவர்கள். நாட்டின் பெயரையும் போடலாமே.
(நமக்கு தான் தேசபற்று அதிகமே இந்தியக் கோழி மட்டும் சாப்பிடுவோம்)

ஏன் Comedien கள் மட்டும் Bomb  போடுகிறார்கள்.( கதாநாயகர்கள் அடக்கி வச்சுக்குவான்களோ)

அவன் அம்மணக்குண்டியா இருக்கான்னு சொல்றோமே 
உண்மையை சொல்லுங்க அது மட்டுமா அம்மணமா இருக்கு)

அவனுக்கு காக்கா வலிப்பு ன்னு சொல்றோமே ( காக்காவுக்கு தெரிஞ்ச கடுப்பாகாதா)

ஷிட் னு சொன்னா ஆங்கில அறிவுன்னு  பாக்குறோம் ஏன் பீ ன்னு சொன்னா மூஞ்சிய சுளிக்கிறோம். ( ஏய் போப்பா.... அவுங்கல்லாம் ரொம்ப ரீசண்டானவுங்க)

பன்னிக்குட்டியை மோதிருச்சுனா வண்டியை வித்துர சொல்றாங்களே. பன்னிகுட்டியை அடிச்ச அரசுபேருந்த Goverment  யார்ட்ட வித்துருக்கும்
(வேற ஸ்டேட் ல வித்து status  ஐ  காப்பாத்திருக்குமோ)

ஏன் ஆண்களெல்லாம் குழந்தையை வலப்பக்கமும் பெண்களெல்லாம் இடப்பக்கமும் தூக்கி வைத்து கொள்கிறார்கள்.
( எப்டியோ தூக்குரான்களே அத பாருடா)


அவள் முணுக்குன்னா மூஞ்சிய தூக்கிவச்சுககுவா னு சொல்றோமே. மூஞ்சிய தூக்கிட்டா அவ உயரமா தெரியுவாளா? ( ஒட்டகசிவிங்கிடா உருப்புடாதவனே)


ஏன் திரைப்படத்தில் ஒளிஞ்சிருந்து ஒட்டு கேட்பவர்கள் முடிந்ததும் ம்ம்ம்... என்று தலையை ஆட்டுகிறார்கள்.
( அப்படியா இரு சொல்லிக்குடுக்குரேன் சொல்றாங்களாம்)


ஏன் சில பெண்கள் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து விட்டு கிளாஸ் ல் கொஞ்சம்
மிச்சம் வைக்கிறார்கள் ( ஏம்ப்பா மண்டியா இருக்கும்ல )

  
அறிவியல் ஆசிரியர்களில் ஏன் பெரும்பாலோர் கண்ணாடி அணிந்திருக்கிறார்கள். ( தெளிவா பாத்து நடத்தனும்ப்பா)


தெருவில் பிச்சை எடுக்கும் பலரை ஏன் இவரெல்லாம் ஒருகாலத்துல
பெரிய ஆளுன்னு தெரியாமலேயே Build  up கொடுக்கிறோம். ( ஏதோ நம்மளால முடிஞ்சது)


ஏன் இளையராஜாவின் ரசிகர்கள் மட்டும் அவரின் சம கால இசையமைப்பாளர்களை விட A .R .ரஹ்மானின் மேல் கோவம்
அடைகிறார்கள். ( ஏம்ப்பா sound க்கும் இசைக்கும் வித்யாசம் இருக்குப்பா...

சினிமாவில் கதா நாயகன் ஜட்டியை காண்பிக்கும் பொழுது ஏன் பெரும்பாலும் வெள்ளை நிற ஜட்டியையே காண்பிக்கிறார்கள்
( ஜட்டி போட்டால்தானே அழுக்காவதற்கு)

சளி பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க பிடிச்சிருந்தா வச்சுக்க வேண்டியதுதான எதுக்கு துப்புறாங்க.

 

 (தொடரும்)

Friday, March 4, 2011

செய்தியும் சிந்தனையும்

எனது நண்பர் ஒருவர் பஹ்ரைனில் இருக்கிறார் ( உடனே வடிவேல் மாதிரி.. சார்ஜாவா, அபிதாபியானு கேட்டு கிண்டல் பண்ணாதீங்க.) அவர் பெயர் லக்ஷ்மி நாராயணன். அவர் என்னுடன் பள்ளியில் பயின்றவர். அவர் எனக்கு ஒரு வீடியோ அனுப்பியிருந்தார். அதை அவர் நகைச்சுவையாக எண்ணி அனுப்பியிருந்தார். ஆனால் அது எனக்கு நகைச்சுவையையும் இசைச்சுவையையும் அளித்தது. இசைக்கு மொழி இனம் நாடு ...எதுவும் இல்லை ரசனை மட்டும் இருந்தால் போதும் என்று தலையில் குட்டியது..
கீழே அதை கொடுத்துள்ளேன் கேட்டு பார்த்து இன்புறுக என் அன்பர்களே.



Friday, February 25, 2011


ஆசை நூறுவகை
காதல் வைபோகமே
ஒரு கூட்டு கிளியாக
பூங்காற்று திரும்புமா
நீ  கொடுத்தத திருப்பி கொடுப்பேன்

நீங்கள் இயற்கை எய்தியது
செய்தி கிட்டியதும்
சட்டென்று ஒரு வினாடியில் தோன்றிய
பாடல்கள்தான் மேலே குறிப்பிட்டவை
நல்ல குரலும், சூழ்நிலைக்கேற்ப பாடுவதும்
தமிழ் உச்சரிப்பும் இருந்த ஒரு குரல்
மெல்ல ஒலி இழந்து
உயிரும் இழந்தது
வாலிபத்தின் வாசலில்
பல நேரங்களில்
என்னை மெய் மறக்க
செய்த உன் குரலுக்கு
நன்றி


திரையும்  கலையும்

Peepli  Live (ஹிந்தி)


என்னடா ஹிந்தி படம்லாம் பாத்து எழுத ஆரம்பிச்சுட்ட  ன்னு நெனக்க வேண்டாம் இங்கிலீஷ் Subtitle உதவியுடன் பார்த்தேன்.

இந்தியாவில் விவசாயிகள்  வாழ்க்கை   நிலையை செவிட்டுல அறையுராப்ல நகைச்சுவையும் , கிண்டலும், கேலியுமா அதிகமா சிந்திக்க வைத்தும் படம் எடுத்திருக்கிறார்கள்.

நத்து வும் அவரது மூத்த சகோதரரும் கடனை திருப்பி அடைக்காததல் அவர்கள் நிலம் பறிபோகும் நிலை. உதவி கேட்டு கட்சி அலுவலகம் செல்ல அங்கே... இருக்கும் பெரிய மனிதர்கள்  இவர்களை கேலியும் கிண்டலும் செய்ய... ஒரு கட்டத்தில் .....Government  ல ஒரு scheme  இருக்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் ஒரு லட்ச ருபாய் தருவார்கள். என்று சொல்கிறார்கள். அதை இவர்கள் இருவரும் ...மிக சீரியஸ் ஆக எடுத்து கொண்டு மூத்தவர் இளையவரை அதாவது  நததுவை நீ தற்கொலை செய்து கொள் நான் குடும்பத்தையும் மற்றவர்களையும் பார்த்து கொள்கிறேன் என்று சொல்கிறார்.  இந்த விஷயத்தை ஒரு டீ கடையில் வைத்து Government  ல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் ஒரு லட்ச ருபாய் தருவார்கள். என்று சொல்கிறார்கள் அங்கு பின்னால் நிற்கும் ஜன மோட்சா  என்ற லோக்கல் பத்திரிகை நிருபர் அதை செய்தியை வெளியிட. அது election  நேரமாகையால் ஒரு பெரிய தொலைகாட்சி நிறுவனம் பேட்டியெடுக்க நினைக்கிறது. மற்றும் அவர்களது தற்கொலையை ஒளிபரப்ப நினைக்கிறது. அது ஆங்காங்கே பரவி... Peepli  என்கிற இவர்களது கிராமம், மற்றும் நத்து  காலைக்கடன் சென்றால் கூட கேமராவால் தொடரப்படுகிரார்கள்.இதற்கிடையில் லோக்கல் வேட்பாளர்களால் இலவச தொலைகாட்சி அளிக்கப்படுகிறது. அது வீட்டில் ஒரு மூலையில் அப்படியே கிடக்கிறது. முதல்வர் வந்து சந்திக்கிறார். இதில் பெரிய வேடிக்கை என்னெவென்றால் நமது விவசாய மந்திரி  படம் முடியும் வரை நமக்கு இன்னும் ஹை கோர்ட் ஆர்டர் வரல என்று சொல்வதுதான். இறுதியில் ஒரு ஊடகம், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் பிடியில் நத்து. அங்கு செல்லும் ஜன மோட்சா நிருபர் அங்கு செல்ல நடக்கும் பிரச்சனையில் அவர் இறக்க . நத்து காணமல் போய்விட. பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் நத்து இறந்து விட்டார் என்று சொல்கிறது. திரை இருள்கிறது. அடுத்து நகரத்தில் விழிக்கிறது. அங்கு நத்து கட்டிட வேலையில் அமர்ந்திருக்கிறார். திரையில் எழுத்துக்கள் மேலே ஊர்ந்து செல்கிறது. விவசாயிகள் கிராமத்தில் இருந்து வெளியேறும் புள்ளி விவரத்துடன். யோசிக்க வைக்கிறது. நத்து பாத்திரத்தில் நடித்த மற்றும் அவரது அண்ணன் பாத்திரத்தில் நடித்தவர்கள் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். நத்து பாத்திரத்தில் நடித்தவருக்கு அப்படியே நம் மயில்சாமி நடிகரின் சாயல். மற்ற எல்லோருமே நிறைவாக செய்திருக்கிறார்கள். நம் சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியை எச்சரிக்கையை சொல்லும் ஒரு திரைப்படம். அமீர்கான் ஒரு சமூக பொறுப்புள்ள கலைஞன். அவரின் தாரே சமீன் பர். போலவே இதுவும் ஒரு நல்ல படம்.

Sunday, February 20, 2011

திரையும் கலையும்


ஆடுகளம்

Aadukalam Review

எனக்கு தெரிந்து  பாலு மகேந்திரா வின் சீடர்கள் தான் ஒரு கதையை மிக மிக நுணுக்கமாக அணு அணுவாக பிரித்து மேய்கிறார்கள். அவரின் சீடர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வந்துள்ள ஆடுகளம் அதை நிரூபிக்கிறது. எனக்கு அவர் திரைப்படத்தில் காட்டியுள்ள (முக்கியமாக கிராபிக்ஸ் உதவியுடன் ) சேவல் சண்டைக் காட்சி நேரில் பார்த்த அனுபவம் உண்டு. என்னுடன் Polytechnic  College  இல் Physics  Lecturer  ராக
பணிபுரிந்த நண்பரின் குலதெய்வம் கோயில் கிடா வெட்டுக்கு நாங்கள் உணவு வெட்ட போயிருந்த போது அங்கு ஒரு பெரிய பந்தல் போட்டு நிறைய சேவல் த்யாராயும் சண்டையிட்டுக்கொண்டும் இருந்தது.( திண்டுக்கல்  அருகே அம்மா பட்டியில் இன்றும் நடக்கிறது)  ஆட்கள் பந்தயம் வேறு கட்டிக்கொண்டு இருந்தார்கள். நான் ஏண்டா காமெராவை எடுத்துட்டு வரலையே ன்னு வருத்தப்பட்டேன். சரி படத்தைப்பற்றி பேசுவோம்.


கதை இப்போதைய Trend மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் நடக்கும் சேவல் சண்டை அதை வைத்து நடக்கும் பந்தயம், வன்மம், பகை,துரோகம்  இதில் ஒரு காதல்( திணிக்கப்பட்ட... தேவையில்லாத.. அது இல்லையென்றாலும் கதை பாதிக்கப்பட போவதில்லை.). தொழில் குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தம். ஆனால் சீடனுக்கு தெரியாம.


பிளாஷ் பேக்   யுக்தி இல்லாமல் யாருமே இப்போது காதல் சொல்லுவதில்லை. வெற்றி மாறனும் அதையே பயன் படுத்தி இருக்கிறார். வசனம் அப்படியே மதுரை வழக்கு. படத்தில் கதையின் நாயகன் பெயர் கருப்பு.  படம் பார்க்கும் நம் காலடியிலும் கருப்பு கருப்பா ஏதோ...அட முடி. ஏன்னா  மசுரு...ன்ற  சொல்.. அடிக்கடி. மேலும் ஏகப்பட்ட ஒலியற்ற  கெட்ட வார்த்தைகள்.(நமக்குதான் நெறைய தெரியும்ல)
ஒளிப்பதிவு அதிகமாக இருளை படம் பிடித்திருக்கிறது அப்படியே.
தனுஷ் நல்ல நடிகர், அவர் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அவர் ஏன் இந்த படிக்காதவன்....குடிக்காதவன்னு, குட்டி...ஜட்டி னு நடிக்கிறார். எனக்கு தெரிந்து சமீபமா இப்படியொரு நரித்தனமான வில்லன் கதா  பாத்திரத்தை யாரும் படைக்கவில்லை. ஈழத்து கவிஞர் அருமையாக செய்திருக்கிறார்.தனுஷின் நண்பன், நிக்கோலஸ், மற்றும் கிஷோர்...இவர்கள் மனதில் நிற்கிறார்கள். எனக்கு நாயகி பற்றி எதுவும் சொல்ல ஒன்றும் இல்லை. வெள்ளாவி வச்சு வெளுத்து ஏதாவது விளம்பர போர்டில் தொங்க விட வேண்டியதுதானே. இந்த கதைக்கு தேவையே இல்லை. அதுவும் செவப்பா சும்மா கும்முன்னு இருந்தாதான் நடிகையாம்..ஓகே ஓகே. அதுல இருவருக்கும் காதல் வருவது...நம்புங்கப்பா. இசை அய்யய்யோ பாடல் மட்டும் கேட்கலாம். ஜி.வி. பிரகாஷ். பின்னணி இசை  எல்லாம்  புதிதாகவும் இல்லை மனதில் பதிவாகவும் இல்லை.

வெற்றி மாறன் ஆடிய களம். அருமையான களம். அதகளம்.

Friday, February 18, 2011

நான் எழுதி கிழித்தவை

      
 ஹை க்கு(திரை)
நான் படித்து 
தெரிந்து கொண்ட விலங்கு 
வரிக்குதிரை. 

செய்தியும் சிந்தனையும்


விலைவாசி கடுமையாக உயர்கிறது.வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞர்களைத் திணற வைக்கிறது.எங்கும் ஊழல் தொற்று வியாதியைப் போல் பரவிக் கிடக்கிறது. ஆட்சியில் இருப்பவரோ சர்வாதிகார உச்சியில் திளைக்கிறார்.முப்பதாண்டுகளுக்கு மேலாக இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத மக்கள் என்ன செய்வார்கள்?  அதைத்தான் செய்திருக்கிறார்கள் எகிப்திய மக்கள்

எகிப்திய மக்களே உங்களோட ...த்திரத்த கொஞ்சம் எங்களுக்கு குடுங்க அப்பகூட எங்களுக்கு புத்தி வராது.

-------------------------------------------------------------------------------



எத்தனை  பூஜ்யங்கள் போட வேண்டும் என்று மக்களைக் குழம்பித் தவிக்கவைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்.  'ஊழல்களின் பாட்டி'யாக அதையும் தாண்டியதாக 'எஸ் பேண்டு' விவகாரம்  சொல்கிறது!  மண்ணைக் காக்கும் ராணுவத்தில் லஞ்ச பேரம்,  நல்ல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் பகல் கொள்ளை.  சர்வதேசப் பெருமையைச் சேர்த்துக் கொடுக்க வேண்டிய விளையாட்டில் கொள்ளையோ கொள்ளை.  விண்ணில் வலம் வரும் செயற்கைக்கோளையும் ஊழல் வட்டமடிக்கிறது. விஞ்ஞான முறையில் ஊழல்

எப்பூடி ஏய் வாடா வாடா உன் ஊழலுக்கும் என் ஊழலுக்கும் சோடி போட்டுக்குவோம்

-------------------------------------------------------------------



என் இசை வாரிசாக யாரையும் சொல்ல விரும்பல - இளையராஜா
யுவன் ஷங்கர் ராஜா இசை நிகழ்ச்சியில் அருளியது.


நன்றாக இருந்த இசை நிகழ்ச்சியின் நெருடல்கள்

1 . ஹரிசரண் பேசும்போது யுவன் ....தமிழ் ல பேசு என்று சொல்லி கொண்டே வந்தார். அடுத்த நொடியே... அவர் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டு இருந்தார்.

2 . இசை நிகழ்ச்சியின் கொடுமையே இளையராஜாவும் யுவனும் பண்ணிய ஒரு அலம்பல் இசைக்கொடுமை. இளையராஜா எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.... வாயை திறந்து ஏதாவது பேசாமல் இருந்தாலே போதும். you  means ..... ராஜா நீங்கள் தமிழில் பாடினாலே போதும்.....நீங்களும் ஏன் இப்படி இங்கிலீஷ் தெரியும்னு  காட்டிக்கிறீங்க.. அதுவும் you  means   ரொம்ப ஓவர் grammer  பாருங்கப்பா

3 பார்வையாளர்கள் நன்றாக இருந்தால் கண்டிப்பாக once  more  அல்லது தயிரோ  கேட்பார்கள். நீங்களே இம்...சத்தம் பத்தல..... இம் இம் என்று ....... தமிழ் நாட்டின் ஒவ்வொரு கிட்டத்தட்ட எல்லோரும் ஹீரோயசம் நோய்க்கு அடிமைப்பட்டு கிடக்கிறோம்.