Saturday, January 25, 2014

சாதி ஒழிப்பை கையில் எடுங்கள்!
 
இந்த ஆண்டுக்கான பெரியார் விருது ஒன்பது பேருக்கு தரப்பட்டுள்ளது!
 
 பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், உறியடித்தல்... என்று கோலாகலமாக, திருவிழாபோல், சென்னை பெரியார் திடலில் கி.வீரமணி தலைமையில் 'திராவிடர் திருநாள்’ மூன்று நாட்கள் நடந்தது. அதில் பத்திரிகை, எழுத்து, இசை, விமர்சனம் என்று இயங்கும் ஒன்பது பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட்டன.
 
விருது பெற்றவர்கள் பேச்சில் இருந்து...
 
இதழாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்: ''யார் ஒருவன் இந்தச் சமூகத்தில் நீதி நிலைக்கிறது என்று நினைக்கிறானோ... யார் ஒருவன் இந்தச் சமூகத்தின் நீதி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல; அனைவருக்கும் சமமானதுதான் என்று பரந்த பார்வை கொள்கிறானோ... அவனே சிறந்த பத்திரிகையாளனாக இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரையில் சுயமரியாதை இயக்கம் என்பது, அடிப்படையில் ஒரு மனிதனாக செயல்படுவதற்கான பார்வையைக் கொடுத்து இருக்கிறது.'
'
 
எழுத்தாளர் இமையம்: ''என்னுடைய தந்தையும் தாயும், நான் படிக்க வேண்டும்; மனிதனாக இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அவர்கள் மூடநம்பிக்கைகளை எனக்குள் விதைத்தனர். ஆனால், நான் சுயசிந்தனை உள்ள மனிதனாக மாறியதற்குக் காரணம் பெரியார்தான்!''
 
எழுத்தாளர் பாமரன்: ''நான் சின்ன வயதில் ஒழுங்காகத்தான் இருந்தேன். என்னைக் கெடுத்ததே இந்த மாதிரி கறுப்புச் சட்டை போட்டவர்கள்தான். செவ்வாய்க்கிழமை காமாட்சியம்மன் கோயிலுக்குப் போவேன். போகும் வழியில் சுவரில், 'பச்ச ரத்தம் குடிக்கும் பூசாரி, பால்டாயில் குடிப்பானா?’, 'பரிசுத்த ஆவியால் இட்லி வேகவைக்க முடியுமா?’ என்றெல்லாம் எழுதி இருக்கும். இதைப் பார்த்துக்கொண்டே சென்றால், எப்படி விளங்கும்? எல்லாத்தையும் விட்டுட்டேன். நம் இயக்கத்தைப் பற்றியும் விமர்சனம் செய்து எழுதி இருக்கிறேன். ஆனால், அதை எல்லாம் மறந்து எனக்கு விருது கொடுத்து இருக்கிறார்கள்.''  
 
எழுத்தாளர் பிரியா பாபு: ''இந்த விருதைப் பெற்ற எனக்கு இரண்டு வகையான மகிழ்ச்சி. ஒன்று, பொங்கல் திருநாள் அன்று திருநங்கைகளுக்கு புது வெளிச்சம் கிடைத்து இருக்கிறது. அடுத்து, என்னுடைய தேடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இந்த விருது உத்வேகமாக அமைந்து இருக்கிறது. திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதும் இல்லை; வாய்ப்பு கிடைப்பதும் இல்லை. ஒரு வாய்ப்பை மட்டும் எங்களைப் போன்றவர்களுக்குக் கொடுத்துப் பாருங்கள்... திருநங்கைகள் எவ்வளவு சாதிப்பார்கள் என்பது புரியும்.''  
 
டிரம்ஸ் சிவமணி:  ''சிறுவயதில் இருந்தே இசையோடு வளர்ந்தவன் நான். என் வீட்டுப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருந்தது. அங்கு வாசிப்பதைக் கேட்கும்போது அருமையாக இருக்கும். அப்படி என்னுள் ஆர்வம் கலந்து வளர்ந்ததுதான் இசை.''
 
ஆவணப்படத் தயாரிப்பாளர் நிழல் திருநாவுக்கரசு: ''பெரியாரின் கருத்துக்கள் மீது, சிறு வயதில் இருந்தே ஆர்வமும் பரிச்சயமும் இருந்தது. அதன் மூலமாக தமிழ் சமுதாயத்துக்கு தேவையான பணிகளை தொடர்ந்து செய்து வந்தேன். தமிழகத்தில் மறைக்கப்பட்ட இசையாளர்களைக் கண்டு அவர்களது வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கு பெரியாரின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்கிறது.'' 
 
எழுத்தாளர் தமிழ்மகன்: ''என் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு சின்னஞ்சிறு வயதில் இந்தத் திடலுக்கு முதன்முதலில் வந்தேன். மேடையில் பெரியாரைப் பார்த்தேன். அந்த மேடையில் எனக்கு அவர் பெயரில் விருது வழங்கப்பட்டுள்ளது. பெரியாரை இழிவுபடுத்திப் பார்க்க ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. ஆனால், அவர்களால் வெல்ல முடியாது.''  
 
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்: ''விபூதி பூசிக்கொண்டு விழாவுக்கு வந்து இருக்கிறேன்னு பார்க்குறீங்களா? நான் இறை நம்பிக்கை உள்ளவன். ஆனால் மூடநம்பிக்கை இல்லாதவன். எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழன் தனித்துத் தெரிவான். தமிழனால் முடியாதது எதுவுமே கிடையாது.''  
 
பேராசிரியர் அ.மார்க்ஸ்: ''எனக்கு விருதுகள் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அப்படி விருதுகள் கொடுக்க முன்வந்தாலும், ஏதாவது காரணத்தைச் சொல்லி நான் கழண்டுவிடுவது வழக்கம். பெரியார் அறிவுப் புரட்சி செய்தார். அவரது பெயரால் வழங்கப்பட்ட இந்த விருது, எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.''
 
- இப்படி ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை பதிவு செய்தார்கள்.
தலைமை உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. ''திராவிடர் கழகத்துக்காரர்களுக்குக்கூட கலை உணர்வு இருக்கிறதா... கலைஞர்களை அழைத்து பாராட்டுகிறார்களே என்று சிலர் எண்ணுகிறார்கள். எங்களுக்கு கலைஞர்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் அக்கறை இருக்கிறது. நாங்க அவர்களைத் தூக்கி நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்தும் பணி எங்களுடையது.  
 
சிங்கப்பூரின் பிரதமராக இருந்தவர் லீ குவான் யூ. அவரது காலகட்டத்தில்தான் சிங்கப்பூர் பெரிய நாடாக வளர்ந்து வந்தது. அவர் 'one man view of the world' என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். பல நாடுகளைப் பற்றியும் அவரது பார்வையில் சொல்கிறார். இந்தியாவைப் பற்றி குறிப்பிடும்போது, 'இந்தியா வளராததற்கு முக்கியக் காரணம் சாதி. அதனால்தான் இந்தியா இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. சாதிகளால்தான் இந்தியா பிரிந்து சிதறிக் கிடக்கிறது’ என்கிறார். பெரியாரும் இதையேதான் தொலைநோக்குடன் சொன்னார். இத்தகைய கருத்துக்களை விருது பெற்றவர்கள் மக்களிடம் ஆணித்தரமாக எடுத்து உரைக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
 
சாதிகள் ஒழிய அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்!

Wednesday, January 22, 2014

 15 Natural Remedies

Natural remedies are the healthiest way to treat your ailments, but where do they come from? Here are 15 common natural remedies from around the world that you may or may not have heard of. This is necessary information for any health buff!
 
1. Coconuts Fight Fat - Sri Lanka
 
natural remedies

2. Yoga Treats Insomnia - Austria
 
natural remedies

3. Ginger Controls Triglycerides - Indonesia
 
natural remedies

4. Turmeric Steadies Blood Sugar - India
 
natural remedies

5. Mushrooms Fight Cholesterol - Japan
 
natural remedies

6. Mustard Baths Calm Muscle Pain - England
 
natural remedies

7. Chamomile Tea Beats Off Bloating - Germany
 
natural remedies

8. Garlic Fights Off Viruses - Russia
 
natural remedies

9. Acupuncture to Treat Headaches - China
 
natural remedies

10. Coffee Gets Rid of Depression - Finland
 
natural remedies

11. Coriander Rids of Food Poisoning - Egypt
 
natural remedies

12. Honey Treats Sinus Infections - New Zealand
 
natural remedies

13. Aloe Vera to Treat Rashy Skin - Mexico
 
natural remedies

14. Kefir Treats Irritable Bowel Syndrome - Russia
 
natural remedies

15. Arnica to Prevent Bruises - Greece
 
natural remedies

Monday, January 20, 2014

திருமணத்தைத் தள்ளிப் போடும் பெண்கள்


 
மணல் கயிறு’ திரைப்படத்தில் ஹீரோ எஸ்.வி.சேகர், தனக்கு வரப்போகிற மனைவி இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று பத்து கண்டிஷன்கள் போடுவார்...

திருமண மார்க்கெட்டில் மாப்பிள்ளைகள் கண்டிஷன் போடும் காலமெல்லாம் இன்று மலையேறிவிட்டது. இது அப்படியே தலைகீழாக மாறி இப்போது திருமண மார்க்கெட்டில் பெண்கள்தான் தனக்கு வரும் மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள் போடுகிறார்கள்!...

சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் அனுபவமிக்க ஒருவரின் வார்த்தைகளைக் கேட்போம் வாருங்கள்.
எங்களது மேரேஜ் சென்ட்டரில் இதை ஆரம்பித்த 14வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்திருக்கிறேன். சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப்பார்ப்பேன். பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும்தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா...மாப்பிளைகள் அடங்கி ஒடுங்கி திடுமணம் என்றாலே பயப்படும் அவல நிலை தான் இன்றைய சமுதாய வளர்ச்சி.

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...
‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா, நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர்  செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.
 
‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’
 
‘‘வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்குவாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, அல்லது அவன் தானே சமைக்க வேண்டியது தானே?. நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே (!) இவ்வளவு  பேசறான். சமைக்கணும், காஃபி போடணும்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றது எங்களுக்கும் நியாயமா (!) படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார். பேசிப்பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை) நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். இந்த மாதிரி கேட்கக்கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.
 
 
இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

கல்யாணத்திக்கு பின் நான் அவனுடைய பெற்றோர்களை ஏன் அப்பா அம்மா என்று கூப்பிடவேண்டும் எனக்குத்தான் என் அப்பா அம்மா இருக்கிறார்களே ?. 

எனக்கு என் காரியரும் பைநான்ஷியல் இன்டிபெண்டன்சும் தான் முக்கியம். நான் லைஃப்என்ஜாய் பண்ண வேண்டும். முப்பது வயதுக்கு மேல் பார்க்கலாம்
‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை காம்ப்ரமைஸ். நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 32 வயதை நெருங்குகிறாள்....

 
ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம். அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலைபார்க்கற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...
 
 
இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். அவளுக்கு காஃபி கூட கலக்கத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.
‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்...
‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.
‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும்போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மோசமாக
மாறிப்போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

இதுதானா பெண்கள் சுதந்திரம் தந்த பரிசு ?.
வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக கேட்கிறார்கள். பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
 
இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...
‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர்கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய்விட்டது.

‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப்போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான். ‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது. அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே எதிர்பார்க்கிறார்கள்... தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாரோட போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...
 
சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மைகூட மாறி விட்டது... ‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும்கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...

இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.
நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது

Thursday, January 9, 2014

 இயற்கையின் தோழர் நம்மாழ்வார் 
 
றுப்புச் சட்டை அணிந்த பகுத்தறிவுப் பெரியார் செய்தது அரசியல்- சமூகப் புரட்சி எனில், பச்சைத் துண்டு அணிந்த இந்தப் பசுமைப் பெரியார் செய்தது இயற்கை வேளாண் புரட்சி. நம் மண்ணின் மேன்மையை, பயிர்த் தொழிலின் தொன்மையை, இயற்கையின் பேராற்றலை... இந்தத் தலைமுறைக்கு உரத்துச் சொன்ன உழவன் கிழவன். 'விவசாயம்’ என்ற முறிந்துகொண்டிருந்த கிளையை, மரத்துடன் ஒட்டவைத்த நம்மாழ்வார்... நம் காலத்தின் நாயகன்; தமிழ் நிலத்தின் தாய் விதை!
 
1937-ல் பிறந்தது முதல் 2013 டிசம்பர் 30-ம் தேதி இயற்கை எய்தும் வரை தன் வாழ்நாளின் பெரும்பகுதிக் காலத்தை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதிலேயே செலவிட்டவர். இப்போது நம்மாழ்வார் நம்முடன் இல்லை. ஆனால், அவர் பேணி வளர்த்த ஒவ்வொரு செடியும், ஒவ்வொரு மரமும் அவரை உயிர்ப்புடன் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.
 
 'கேணி வீடு’ - தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தில் உள்ள நம்மாழ்வாரின் வீட்டுக்கு, இதுதான் பெயர். அந்த ஊரில் முதன்முதலில் குடிநீர்க் கேணி வெட்டியது அவரது வீட்டில் என்பதால் இந்தப் பெயர். பெற்றோருக்கு இவர் ஆறாவது மகன். எல்லோருக்கும் வைணவப் பெயர்களாக வைத்தார் தந்தை கோவிந்தசாமி. ஆனால் மூத்த சகோதரர் சடகோபன், தி.மு.க-வில் இணைந்து தன் பெயரை 'இளங்கோவன்’ என்று மாற்றிக்கொண்டார். திருவையாறு தொகுதியில் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தார். அண்ணன் வழியில் நம்மாழ்வாரும் திராவிட இயக்க சிந்தனையுடன் இருந்ததால், ''நீயாவது உன் பெயரை மாற்றாதே. இந்தப் பெயர் தான் உனக்குப் பிற்காலத்தில் அடையாளமாக இருக்கப்போகிறது'' என்று கேட்டுக்கொண்டார் அவரது தந்தை. அவர் சொன்னதுபோலவே அந்தப் பெயரை இப்போது தமிழ் மண் மொத்தமும் அறியும்.
 
 
 
''5,000 கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை பண்ணிக்கலை. அவருக்குக் கடன் கொடுத்த வங்கி ஆபீஸருங்க யாரும் தற்கொலை பண்ணிக்கலை. அந்தக் கடனைக் கொடுக்கச் சொன்ன நம்ம அமைச்சருங்க தற்கொலை பண்ணிக்கலை. ஆனா, நமக்கெல்லாம் சோறு போடுற எங்க ஏழை உழவன் சில ஆயிரம் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமத் தற்கொலை பண்ணிக்கிறான். ஏன்னா, உழவனுக்கு மானம்தான் பெரிசு!'' - ஆதங்கமும் பெருமிதமுமாக நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை.
 நம்மாழ்வார், மிகச் சிறந்த பேச்சாளர். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் சிறப்பாகப் பேசுவார். விவசாயம், இலக்கியம், பாடல், நடிப்பு, சட்டம், மருத்துவம், கட்டடக் கலை...எனப் பல்துறைகளைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவர். அவரிடம் பேசுவதற்குக் காரணங்கள் தேவை இல்லை. அவரே பேசத் தொடங்கி, சற்று நேரத்தில் நம்மையும் பேச்சில் இணைத்துவிடுவார்.
 
 புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி, ''அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல... அது என்ன?'' என்று நம்மாழ்வாரிடம் ஒரு விடுகதை போட்டாராம். இவருக்கு விடை தெரியவில்லை. ''நெல்லு அறுக்கும்போது அடிக்கட்டையை வயக்காட்டுலயே விட்டுறோம். நடுவுல இருக்குற வைக்கோலை மாட்டுக்குக் கொடுக்கிறோம். நுனியில் இருக்கிற நெல்லை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறோம்'' என்று அந்தப் பெண் விடையைச் சொன்னபோது, நம்மாழ்வாருக்குள் இருந்த 'இயற்கை விஞ்ஞானி’ விழித்துக்கொண்டார். தன் இறுதிக்காலம் வரையிலும் இந்த 'அடி, நடு, நுனி’ தத்துவத்தை அவர் பரப்பினார்.
 
 
 ''யூரியா போட்டாத்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூடநம்பிக்கையை உருவாக்கிட்டாங்க. யூரியா மூட்டையில் '46 சதவிகிதம் நைட்ரஜன்’னு (தழைச்சத்து) எழுதியிருக்கான். ஆனால், நாம பள்ளிக்கூடத்துல என்ன படிக்கிறோம்? வீசுற காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கு. காற்றுலயே அவ்ளோ இருக்கும்போது, எதுக்கு பொண்டாட்டி தாலியை அடகுவைச்சு யூரியா வாங்கிப் போடணும்? காற்றில் இருக்கிற தழைச்சத்தை இழுத்து மண்ணுக்குக் கொடுக்கிற தட்டைப் பயறு, உளுந்து, துவரை மாதிரியான பயறு வகைகளையும் நுண்ணுயிர்களையும் வளர்த்தாலே போதும்'' - இப்படித்தான் இயற்கை விவசாயம் குறித்தப் பாடங்களை மிகவும் எளிமையாக, நடைமுறை உதாரணங்களுடன் விளக்குவார்.
 
 வேம்பு காப்புரிமைக்கு வெளிநாட்டினர் சொந்தம் கொண்டாடிய நேரம். ஜெர்மனி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த இந்தியக் குழு ஒன்று சென்றது. அதில் நம்மாழ்வாரும் உண்டு. வெற்றிகரமாக காப்புரிமையை மீட்டு வந்த பின்னர், வெற்றி விழாக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் நம்மாழ்வாரின் பேச்சைக் கேட்ட யாரும் அதை மறக்கவே முடியாது. ''கோர்ட்டுக்கு வெளியே பல நாட்டுக்காரனும் நின்னுக்கிட்டு இருக்கான். நான் வேப்பங்குச்சியை எடுத்து வாயில் வெச்சு நல்லாக் கடிச்சேன். ஒருத்தன், 'என்ன பண்ணிக்கிட்டு இருக்க?’னு கேட்டான். 'பிரஷ் பண்றேன்’னேன். 'எது பிரஷ்?’னு கேட்டான். வாயில மென்னுக்கிட்டிருந்த வேப்பங்குச்சியைக் காட்டினேன். 'பேஸ்ட் எங்கே?’னு கேட்டான். 'குச்சிக்குள்ளயே இருக்குற கசப்புச் சாறுதான் பேஸ்ட்’னு சொன்னேன். எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டாங்க. கோர்ட்டுக்குள்ள, 'எங்க ஊர் விவசாயிங்க வேப்பந்தழையையும், மாட்டுக் கோமியத்தையும் கலந்து, பூச்சி விரட்டியாத் தெளிக்கிறான். உங்களுக்கு மேரி மாதா மாதிரி எங்களுக்கு மாரியாத்தா பொம்பளை தெய்வம். அவளுக்கு வேப்ப இலையிலதான் மாலை போடுவோம்’னு சொல்லி சங்கப்பாடல் தொடங்கி, கூழ் வார்க்கும்போது பாடும் கும்மிப்பாட்டு வரை எல்லாத்தையும் பாடிக்காட்டினேன்!'' என்று வாதாடியதை நினைவுகூர்வார்.
 
 'இயற்கை விவசாயம் உடனடிப் பயன் தராது. மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ரசாயன உரம் காரணமாகச் சீரழிந்துகிடக்கும் மண், பழைய பக்குவத்தை அடையவே பல ஆண்டுகள் ஆகும்’ என்ற பிரசாரம், 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அப்போது வட இந்தியாவில் நடைபெற்ற இயற்கை விவசாயக் கருத்தரங்கில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த ஸ்ரீபாத தபோல்கர் என்கிற கணிதப் பேராசிரியர் 'அமிர்த பானி’ என்ற இயற்கை வளர்ச்சி ஊக்கியைப் பற்றி பரிந்துரைத்தார். அதாவது மாட்டுச் சாணம், மாட்டுக் கோமியம், வெல்லம் ஆகிய கலவையைத் தெளித்தால், பயிர்கள் மிக விரைவில் செழிப்புடன் வளரும் என்பதே அது. அதன் உபயோகம் பற்றி தபோல்கரிடம் மேலும் விசாரித்துத் தெரிந்துகொண்டு தமிழகம் திரும்பிய நம்மாழ்வார் 'அமிர்தபானி’க்கு 'அமுதக்கரைசல்’ என்று பெயர் சூட்டி தமிழ்நாட்டில் பரப்பினார்.
 
 எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள காந்தியடிகளின் 'வார்தா’ ஆசிரமத்தில் நம்மாழ்வாருடன் ஓர் அதிகாலை நேரத்தில் நடந்துகொண்டிருந்தோம். உடன் வந்த நண்பர் ஒருவர், ''ஐயா, காந்திக்கு இந்தியா பூராவும் தெரிஞ்சவங்க இருந்தாங்க. ஆனா, ஏன் வார்தாவுல வந்து ஆசிரமம் அமைச்சார்?'' என்று நம்மாழ்வாரிடம் கேட்டார். ''சுதந்திரப் போராட்டம் தீவிரமா இருந்த நேரம். நாடு முழுக்கப் போகணும். அதுக்குத் தோதா இந்தியாவின் மத்தியில் வார்தாவில் ஆசிரமத்தை அமைச்சார். நமக்கும்கூட தமிழ்நாட்டுக்கு நடுவில் ஓர் இடம் வேணும்யா. அது உலகத்துல உள்ள எல்லா விவசாயிகளுக்கும் சொந்தமானதா இருக்கணும்'' என்றார். அவர் சொன்னதைப்போலவே தமிழ்நாட்டின் மையத்தில், கரூர் மாவட்டம் கடவூரில், அவர் விரும்பி உருவாக்கிய 'வானகம்’ இயற்கைப் பண்ணையில்தான் விதைக்கப்பட்டிருக்கிறது நம்மாழ்வாரின் உடல்
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சுமா?
 
பாரதி தம்பி, படங்கள்: கே.குணசீலன்
'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது’ என்பார்கள். உண்மையில் எந்த உழவனும் கணக்குப் பார்ப்பது இல்லை. பச்சை நெல்லின் பால் வாசம் வீசும் மார்கழிப் பனியில், வரப்பில் நடந்தபடியே தன் குழந்தைகளைப் போல பயிர்களை நேசிக்கும் விவசாயி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் பார்ப்பான். யூரியா, டி.ஏ.பி., விலையைப் பார்ப்பான். ஒருபோதும் வரவு-செலவு கணக்குப் பார்ப்பது இல்லை. உழுவதும் உழைப்பதும் தனது பிறவிப் பெருங்கடன் என்று எண்ணியே காலம் எல்லாம் சேற்றில் நிற்கிறார்கள் விவசாயிகள். ஆனால், அது பார்க்கப்பட வேண்டிய கணக்கு. 'விவசாயிகளின் நிலை பரிதாபம்’ என்று அனுதாபப்படுவது இருக்கட்டும். அந்த அவலம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது, மும்பை பங்குச் சந்தையின் வணிகக் கணக்கு அல்ல; வங்கி அரை வருடக் கணக்கு முடிவும் அல்ல. நம் ஊருக்கும் உலகுக்கும் சோறு போடும் உழவர்களின் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரம்!
 
தஞ்சாவூருக்கு அருகே உள்ள காசவளநாடு புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, குமார். இவர் இப்போதுதான் அறுவடையை முடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ஒரு ஏக்கருக்கு எவ்வளவு செலவானது என்று குமார் சொல்லும் வரவு-செலவுக் கணக்கு இதோ...
 
ஒரு ஏக்கருக்கான உழவுக் கணக்கு
 
வெறும் நிலத்தில் எரு அடிக்க வேண்டும். முன்பு ஒவ்வோரு வீட்டிலும் மாடுகள் இருக்கும். எருவும் வீட்டிலேயே இருக்கும். அதை வண்டி வைத்துக்கொண்டு சேர்க்கும் செலவு மட்டும்தான். இப்போது மாடுகள் இல்லை என்பதால், எருவை, காசு கொடுத்து வாங்க வேண்டும் அல்லது ஆட்டுக்கிடை வைக்க வேண்டும். இந்த வகையில் ஒரு ஏக்கருக்கு ஆகும் செலவு 1,500 ரூபாய்.
 
 ஒரு ஏக்கருக்கு நடவு நட, நாற்றங்கால் அமைக்க வேண்டும். டிராக்டர் வாடகை, 350 ரூபாய். ஒரு கூலி ஆள் வேண்டும். அவருக்கு சம்பளம் 350 ரூபாய். இந்த வகையில் மொத்தம் 700 ரூபாய்.
 
 விதை நெல் 30 கிலோ பை - 1,100 ரூபாய். தஞ்சை விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் 39, 38 ஆகிய ரக நெல்களின் விலை இது. ஒருவேளை ஆந்திரா பொன்னி என்றால் 1,400 ரூபாய் வரும். ஆந்திரா பொன்னி ஒருசிலர்தான் பயிரிடுவார்கள் என்பதால், முந்தையதையே கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். விதை நெல் வகையில் ஒரு ஏக்கருக்கு 1,100 ரூபாய் செலவு.
 நாற்றுப் பறிக்க, 30 கிலோ நெல்லுக்கு 1,500 ரூபாய்.
 
 நடவு நட, சேறு அடிக்க வேண்டும். டிராக்டர் செலவு, 2,000 ரூபாய்.
 
 வரப்பு வெட்ட, ஓர் ஆளுக்கு 350 ரூபாய். ஒரு ஏக்கருக்கு, குறைந்தது மூன்று ஆட்கள் வேண்டும். அதற்கு, 1,050 ரூபாய்.
 
 நடவு நட, ஒரு ஏக்கருக்கு 18 ஆட்கள் தேவை. ஓர் ஆளுக்கு இப்போது 100 ரூபாய் கூலி. மொத்தம் 1,800 ரூபாய்.
 
 நடவு நடும்போது நாற்றுக் கட்டுகளைத் தூக்கிப் போட, பட்டம் பிடிக்க... என்று ஒரு ஏக்கருக்கு மூன்று ஆட்களின் வேலை இருக்கும். ஓர் ஆளுக்கு 350 ரூபாய் வீதம், மொத்தம் 1,050 ரூபாய்.
 
 நடவு நடும் பெண்கள் மற்றும் நடவு வயலில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு டீ, பலகாரம் வாங்கித் தர வேண்டும். இந்த வகையில் செலவு, சுமார் 1,000 ரூபாய்.
 
 களை எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு களை எடுக்க, குறைந்தது 20 பேர் தேவை. ஓர் ஆளுக்குச் சம்பளம், 100 ரூபாய். மொத்தச் செலவு, 2,000 ரூபாய்.
 
 நெல் அறுவடையை முன்பு ஆட்கள்தான் செய்தார்கள். இப்போது கடுமையான ஆள் பற்றாக்குறை என்பதால், இயந்திரம்தான் அறுவடைக்கு ஒரே வழி. தவிரவும் இது ஒரு ஏக்கர் அறுவடையை ஒரு மணி நேரத்தில் முடித்துவிடுகிறது. நேரடியாக அறுவடை வயலில் இறங்கும் இயந்திரம் ஒரு பக்கம் அறுத்துக்கொண்டே வர, மறுபக்கம் நெல் தனியாகக் கொட்டிவிடுகிறது. இந்த வகையில் ஒரு ஏக்கர் நெல்லை அறுவடை செய்ய, ஒரு மணி நேரத்துக்கான இயந்திரக் கூலி 2,300 ரூபாய்.  
 
 அறுத்த நெல்லை, நெல் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டுசெல்ல ஆகும் டிப்பர் வாடகை, 800 ரூபாய்.
 
 பெரும்பாலான விவசாயிகள், நடவு நடும்போது டி.ஏ.பி., அடி உரம் போடுகின்றனர். ஒரு ஏக்கருக்கு ஒரு மூட்டை டி.ஏ.பி., தேவை. விலை 1,400 ரூபாய். நடவுக்குப் பின்னர், இரு முறை யூரியா அடிக்க வேண்டும். முதல் முறை 300 ரூபாயும், இரண்டாம் முறை 550 ரூபாயும் செலவாகும். உர வகைகளில், மொத்தம் 2,250 ரூபாய்.
 
 நெற்பயிரில் கதிர் வரும்போது, நன்றாகக் கதிர் பிடிப்பதற்காக மருந்து அடிப்பார்கள். ஒரு ஏக்கருக்கு அடிப்பதற்கான இந்த மருந்தின் விலை 800 ரூபாய்.
 
 இரண்டு முறை பூச்சி மருந்து அடிக்க வேண்டியிருக்கும். ஒரு முறைக்கு 400 ரூபாய் வீதம், மொத்தம் 800 ரூபாய்.
 
 அடி உரம் அடிப்பதில் தொடங்கி, யூரியா, டி.ஏ.பி., பூச்சி மருந்து தெளிப்பது வரை அனைத்தையும் செய்ய கூலி ஆட்கள் தேவை. ஆறு பேர் கூலி என்று கணக்கிட்டால், மொத்தம் 2,100 ரூபாய்.
 
 அறுவடை முடிந்து நெல் விற்கப் போகும்போது, கூலி ஆட்கள் தேவை. 30 மூட்டை போட வேண்டும் என்றால்கூட, மூன்று ஆட்களின் வேலை இருக்கும். இந்த வகையில் செலவு, 1,050 ரூபாய்.
 
 நெல் கொள்முதல் நிலையத்தில், 40 கிலோ கொண்ட ஒரு பைக்கு 20 ரூபாய் கமிஷன் (அதாவது லஞ்சம்) கட்டாயம். சில இடங்களில் இது 15 ரூபாயாகவும், சில இடங்களில் 25 ரூபாயாகவும் உள்ளது. 20 ரூபாய் என்று எடுத்துக்கொண்டால், ஒரு ஏக்கரில் விளைந்த நெல்லுக்கு சுமார் 800 ரூபாய் கமிஷன்.
 
மேலே உள்ளவற்றை மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால், 24,600 ரூபாய் வருகிறது. இது செலவு. இனி, வரவுக் கணக்கைப் பார்ப்போம்.
 
ற்போதைய நிலையில் 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல்லின் விலை, 850 ரூபாய். ஒரு ஏக்கருக்கு சுமார் 36 மூட்டை என்பது அதிகபட்ச விளைச்சல். பெரும்பாலும் 30 மூட்டைகள் தான் விளைகின்றன என்றபோதிலும் நாம் 36 மூட்டைகள் என்றே எடுத்துக்கொள்வோம். இதன்படி கணக்கிட்டால், மொத்தம் 30,600 ரூபாய் வருகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் 6,000 ரூபாய் லாபம். அதாவது 24,000 ரூபாய் முதலீடு செய்து, ஐந்து மாதங்கள் கடுமையாக உழைத்தால் கிடைக்கும் லாபம் வெறும் 6,000 ரூபாய். இதை ஐந்து மாதங்களுக்கான சம்பளமாகக் கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 1,200 ரூபாய். நாள் கூலியாகக் கணக்கிட்டால், தினம் 40 ரூபாய். மத்திய அரசின் திட்டக்குழு அறிக்கையின்படி, கிராமப்புறங்களில் 28 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்கள் ஏழை இல்லை. எனில், நம் விவசாயிகள் ஒரு நாளைக்கு 40 ரூபாய் சம்பாதிப்பதால், அவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் என்ற அரிய உண்மையை நாம் இதன் மூலம் தெரிந்துகொள்கிறோம்.
 
ந்த வரவு-செலவுக் கணக்கு மிகவும் பெருந்தன்மையானது என்பதால்தான், மேற்கண்ட 6,000 ரூபாய் லாபமும் கிடைத்துள்ளது. அது என்ன பெருந்தன்மை? விவசாய வேலைகளைப் பொறுத்தவரை நாற்றங்கால் சேறு அடிப்பதில் தொடங்கி, அறுவடை முடியும் வரை குடும்பத்து ஆட்கள் அத்தனை பேருமே வெவ்வேறு வகைகளில் வேலைபார்க்க வேண்டியிருக்கும். அவர்களுக்கான கூலி எதுவும் இங்கு கணக்கிடப்படவில்லை. ஏனெனில், அதை வெறுமனே 'வேலை’ என்று கருத முடியாது. பயிர், பருவம் பிடிக்கும் நாளில், வீட்டுக்கூடத்தில் அமர்ந்து சோற்றில் கை வைக்கும்போது, தாழ்வாரத்தில் ஒரு சொட்டு மழைநீர் விழுந்தால், அவன் ஈரக்குலை நடுங்கும். ஏனெனில், பால் வைக்கும் பருவத்தில் மழை பெய்தால், அனைத்தும் பாழ். எல்லாம் கருக்காயாகப் போய்விடும். செய்த செலவும் இட்ட உழைப்பும் வீண். நாள் தவறாமல் வயலுக்குச் சென்று நீர் பாய்ச்சவும் வடியவைக்கவும் வேண்டும். இதற்கு என்ன கூலி நிர்ணயிப்பது?
 
காவிரி நீர், பல வருடங்கள் வருவது இல்லை என்பது நமக்குத் தெரியும். அப்போதெல்லாம் விவசாயிகள் போர்வெல் வைத்திருப்பவர்களிடம் காசுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள். ஒரு மணி நேரத்துக்கு 100 ரூபாய். சில ஊர்களில் இது நெல்லாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு பருவம் முழுவதும் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளலாம். அறுவடைக்குப் பின்னர் ஒரு ஏக்கருக்கு ஆறு மூட்டைகள் நெல் கொடுத்துவிட வேண்டும்.
 
 
நெற்பயிர் நேராக இருந்தால்தான், அறுவடை இயந்திரம் விறுவிறுவென அறுக்கும். ஒருவேளை காற்றடித்து பயிர்கள் வயலில் சாய்ந்துகிடந்தால், அறுக்க நேரமாகும். ஒரு ஏக்கர் அறுக்க வழக்கமாக ஒரு மணி நேரம் என்றால், பயிர் சாய்ந்திருந்தால் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். அது அறுவடைச் செலவில், இன்னும் 1,000 ரூபாயை அதிகரிக்கும்.
 
இவற்றையும் செலவில் சேர்த்தால், ஒரு ஏக்கர் நெல் விவசாயத்துக்கு விவசாயி, தன் கையில் இருந்து 5,000 ரூபாய் செலவழிக்கிறார் என்பதே உண்மை. இவ்வளவு இடர் நிறைந்த, லாபமற்ற தொழிலை எப்படி விவசாயிகள் இடைவிடாமல் செய்து வருகின்றனர்? தஞ்சாவூர் விவசாயி ஒருவரிடம் கேட்டால், அவர் சொல்கிறார்...
 
''ஒரு வெள்ளாமைக்காரன் நிலத்தைச் சும்மாப் போட்டிருந்தா, ஊர்ல அப்புறம் நம்மளை ஒரு பய மதிக்க மாட்டான். ஒரு நல்ல நாள்ல நாலு வீட்டுப் பொங்கப் பானையில அள்ளிப்போட, என் வயல்ல வெளஞ்ச அரிசி வேணும்ல தம்பி!''