Wednesday, December 22, 2021

மக்கள் சினிமா இயக்குநர்!
ஆர்.சரவணன்

உலகம் முழுவதும் வகாலிவுட்டைக் கொண்டு சேர்த்தது இணையம்தான். பாருங்கள், இந்தியாவில் தென்கோடியிலிருந்து என்னை வாழ்த்துகிறீர்கள்.

“ஒரு பாதையைக் கண்டுபிடியுங்கள்; அல்லது ஒரு பாதையை உருவாக்குங்கள்!” - ரோம தத்துவஞானி செனிக்கா

வகாலிவுட்... இயக்குநர் பாரதிராஜாவின் சினிமாக்களில் வரும் கிராமத்து வில்லன் பேசும் ஒரு வார்த்தைபோல இருக்கும் இந்தப் பெயர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் உகாண்டா நாட்டின் சினிமாவைப் பற்றிய சொல்! தனி மனிதனாக... பேரியக்கமாக வகாலிவுட்டை தன் குடும்ப வறுமையையும் மீறி உருவாக்கி இன்று ஹாலிவுட் வரை கொண்டு சேர்த்திருக்கிறார் வகாலிவுட்டின் ஒற்றை இயக்குநர் இசாக் நப்வானா. நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களுக்காக ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் உகாண்டா’ என்ற பெயரில் ஒரு டாக்குமெண்டரியை ஹாலிவுட்டைச் சேர்ந்த பெண் இயக்குநர் கேத்தரின் ஜூபெக் எடுத்திருக்கிறார். உலகம் முழுவதும் இசாக் நப்வானாவுக்கு செம வரவேற்பு கிடைத்திருக்கிறது. 2015-ல் வகாலிவுட் சினிமாக்களைப் பற்றி ஆனந்த விகடனில் எழுதியிருந்தேன். இடைப்பட்ட வருடங்களில் ஆப்பிரிக்க சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையாக மாறியிருக்கிறார் 48 வயதான இசாக் நப்வானா. அவரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகள் சொன்னேன்.
“வாழ்த்துகள்... சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் உகாண்டாவில் தற்போது வகாலிவுட் சினிமா பாப்புலராகி விட்டதா?”

“உலகம் முழுவதும் வகாலிவுட்டைக் கொண்டு சேர்த்தது இணையம்தான். பாருங்கள், இந்தியாவில் தென்கோடியிலிருந்து என்னை வாழ்த்துகிறீர்கள். என்னுடைய பத்தாண்டுக் கால உழைப்புக்குக் கிடைத்த பலன்தான் இன்று வகாலிவுட்டை ஹாலிவுட் அங்கீகரித்திருப்பதும், உகாண்டா சினிமாவாக வகாலிவுட் தற்போது வளர்ந்திருப்பதும். உலகம் ஒரு நூற்றாண்டுக்கு முன் சினிமாவை இயக்க ஆரம்பித்து அந்தக் கலையைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது நாங்கள் 2005-ல்தான் திரைப்படங்களே இயக்க ஆரம்பித்தோம். இந்த சினிமா ரேஸில் லேட்டாக ஆரம்பித்தாலும் வேகமாக ஓடி விருதுகள் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பதே ஒரு உகாண்டாக் குடிமகனாக என் கனவு. சர்வாதிகாரி இடி அமீன் ஆட்சியில் கலை நசித்தொழிக்கப்பட்ட பிறகு தொலைக்காட்சியில் மட்டும் நாடகக் கலையாக வளர்ந்த சினிமாவின் விதை வகாலிவுட் சினிமாவாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. இப்போது தலைநகர் கம்பாலாவில் ஆரம்பித்து முக்கிய நகரங்களில் சினிமா தியேட்டர்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. இனி உலக அரங்கில் வகாலிவுட் பெயர் கொடிகட்டிப் பறக்கும்!”

“வகாலிவுட் சார்பாக எத்தனை படங்களை உருவாக்கியிருக்கிறீர்கள். அவற்றுக்கு உகாண்டாவில் வரவேற்பு எப்படி இருக்கிறது?”

“47 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு மணி நேர சினிமாதான். 2010-ல் தியேட்டர் இல்லாத காலகட்டங்களில் வீடுவீடாகச் சென்று வாடகைக்கு என் படங்களை டோர் டெலிவரி செய்து காசு வாங்கிக் கொள்வேன். என்னுடன் நான் வசிக்கும் வகாலிக்கா ஏரியா மக்கள் துணையாக இருந்தார்கள். கம்பாலாவின் பின்தங்கிய சேரிப்பகுதி தற்போது உகாண்டா சினிமாவின் பிறப்பிடமாக அறியப்படுவது மகிழ்ச்சி. எனக்கு முன்பே திரைப்படங்கள் எடுத்த ஹாஜி அஷ்ரப்புக்கு என் சினிமாக்கள் சமர்ப்பணம். இது என் சினிமா என்று சொல்வதே தவறு. இது உகாண்டா மக்கள் சினிமா!”

“மக்கள் சினிமா என்கிறீர்கள். ஆனால், உங்களை ஹாலிவுட்டில் ‘உகாண்டாவின் குவண்டின் டரண்டினோ’ என்றுதானே அழைக்கிறார்கள். மக்களுக்காக மென்மையான, மனிதம் பேசும் படைப்புகளை எடுக்கலாமே...ஏன் ரத்தம் தெறிக்கத் தெறிக்க இத்தனை ஆக்‌ஷன் படங்கள்?”

“நான் இடி அமீன் ஆட்சிக்காலத்தில் என் சிறுவயதைக் கடந்தவன். அவர் ஆட்சி செய்த 8 ஆண்டுகளில் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். அதில் மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பித்தவன் நான். அந்தக் கொடூரத்தின் தாக்கம் என்னுள் இருப்பதால் இப்படிப்பட்ட படங்கள் வரலாம். மற்றபடி ஆக்‌ஷன் படங்கள் என் சாய்ஸ். என் சகோதரன் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அதிகாரி ஒருவரின் வீட்டில் வேலைபார்த்தான். அவர்கள் வீட்டில் அவர்களோடு சேர்ந்து சக் நோரீஸ் மற்றும் புரூஸ் லீ படங்களைப் பார்த்துவிட்டு வந்து வீட்டில் எங்களிடம் சினிமாவைக் காட்சி வாரியாக விவரிப்பான். அவன் சொன்னதைக் காதால் கேட்டே நான் மனதிற்குள் படம் ஓட்டி வைத்திருந்தேன். முதன்முறையாக சக் நோரீஸ் படங்களை நான் வீடியோவாகப் பார்த்தபோது நான் மனதில் நினைத்திருந்ததைவிட ஒருபடி குறைவாக இருப்பதாக உணர்ந்தேன். அந்த நொடியே ‘நாம் ஏன் ஆக்‌ஷன் திரைப்படங்கள் எடுக்கக்கூடாது’ என யோசிக்க ஆரம்பித்தேன். குங்பூ தற்காப்புக் கலையைக் கற்றுக் கொண்டேன். 2005-ல் ‘ரேமோன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் திரைப்பட ஸ்டூடியோவை வகாலிகாவில் ஆரம்பித்தேன். ஆக்‌ஷன் படங்களை இயக்க ஆரம்பித்ததும் என் ஏரியா மக்களே நடிக்க ஆர்வமாக வீட்டின்முன் வந்து நின்றார்கள். ஆக்‌ஷன் படம் என்றாலும், பார்த்ததும் பயம் வராதபடி காமெடி ஜானரில் எடுக்கிறேன். இப்போது மியூசிக்கல் ஆல்பமும் இயக்க ஆரம்பித்திருக்கிறேன். சமீபத்தில் என் மகள் ரேச்சல் பாடிய ஒரு ஆல்பத்தை ரிலீஸ் செய்திருக்கிறேன். அது உகாண்டா டெலிவிஷனில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்றது!”

“திரைப்படங்கள் உருவாக்குவதில் நீங்கள் சந்தித்த சிரமங்கள் என்னென்ன?”

“சிரமம் என்று நினைத்திருந்தால் ஒரு படத்தைக்கூட என்னால் உருவாக்கியிருக்க முடியாது. எடிட்டிங்கை நான் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை. என்னிடம் அப்போது செல்போன் கிடையாது. நிறைய புத்தகங்களையும் வீடியோக்களையும் பார்த்து சினிமாவை தியரியாக ஓரளவு கற்று வைத்திருந்தேன். என் 32-வது வயதில் கிடைத்த செகண்ட் ஹேண்ட் கேமராவையும் ஒரு கம்ப்யூட்டரையும் வைத்து மெல்ல மெல்ல சினிமாக்கள் எடுக்க ஆரம்பித்தேன். நானே தப்பும் தவறுமாக எடிட் செய்தேன். ‘Who killed captain Alex?’, ‘Bad Black’, ‘Tebaatusasula’ எனப் படங்களை எடுத்து யூ டியூபில் வெளியிட்டேன். ‘Who killed Captain Alex’ படத்தைப் பார்த்துதான் ஆலன் ஹாஃப்மானிஸ் என்ற ஹாலிவுட் கலைப்பட இயக்குநர் உகாண்டாவுக்கே கிளம்பி வந்து எங்கள் வகாலிவுட்டிலேயே எங்களோடு சில வருடங்கள் வாழ்ந்தார். அவரின் நட்பால் சர்வதேச சினிமாக்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரையும் நடிக்க வைத்து ஆக்‌ஷன் சினிமாக்களை இயக்க ஆரம்பித்து இன்று உலகத் திரைப்பட விழாக்களில் உகாண்டா சார்பாகக் கலந்து கொண்டு விருதுகள் வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்!”

“தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவது பொருளாதார ரீதியாக உங்களை வளர்த்தெடுத்திருக்கிறதா?”

“நான் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக இருந்தவன். அகதியாக சிறுவயதில் தான்சானியாவுக்கு ஓடிப்போனவன். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொண்டு வாழ்ந்தவன். இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் மரணத்தின் பிடியிலிருந்து மீண்டவன். என் கலை குறித்த ஆர்வத்தின்முன், பணம் ஒரு பொருட்டாகவே இல்லை. நைஜீரியா மற்றும் கானா போன்ற ஆப்பிரிக்க நாடுகளின் சினிமாக்களைப்போல உகாண்டாவுக்கும் அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டேன். ஜீரோ பட்ஜெட் பிலிம் மேக்கிங்கை இங்கு அறிமுகப்படுத்தினேன். என் மக்களையே நடிக்க வைத்தேன். அவர்களின் ஆர்வம் இல்லையென்றால் நானே இங்கு இல்லை. என் தெருவே லொக்கேஷன், என் வீடே புரொடக்‌ஷன் ஹவுஸ், இரும்புக் கடையில் கிடைக்கும் பொருள்களை வைத்து நானே ஹெலிகாப்டர்கள் உருவாக்குவது, மரங்களைக் கொண்டு இயந்திரத்துப்பாக்கிகள் உருவாக்குவது, கிரீன் மேட்டில் கிராஃபிக்ஸ் உருவாக்குவது எனச் செய்ததால் அதிகம் செலவு ஆகவில்லை. இப்போது அரசின் சலுகையும் கிடைத்திருக்கிறது. எனக்கு சிறந்த குடிமகன் விருது கொடுத்து அங்கீகரித்திருக்கிறார்கள். சர்வதேசத் திரைப்பட விமர்சகர்கள் என் படங்கள் பற்றி உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். என் திரைப்படங்களின் டி.வி.டிகள் விற்பனையின் மூலம் வருமானமும் கிடைக்கிறது. இதைவிட என்ன வேண்டும்? ஹாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. விரைவில் இடி அமீன் ஆட்சிக் காலத்தைக் கண்முன் கொண்டு வரும் ஒரு கலைப்படைப்பை சர்வதேச மொழிகளில் உருவாக்கிக்காட்டுவேன். இப்போது மூன்று ஆக்‌ஷன் படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கின்றன. அடுத்த மாதம் கனடா திரைப்பட விழாவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. என் ஆசை இதே வகாலிவுட்டில் சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றை நடத்துவதுதான். ஆஸ்கர் விருதுக் கனவும் எனக்குண்டு. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!”

Wednesday, December 15, 2021

வரலாற்றை இசைப்பவன்!
சு.சூர்யா கோமதிக .தனசேகரன்ராகேஷ் பெ
நன்றி : ஆனந்த விகடன்

மணிகண்டன் இசைக்கும் ஒவ்வொரு இசைக்கருவியும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டைக் காற்றில் கடத்துகிறது. பழங்கருவிகளில் இருந்து புறப்படும் தாளங்கள் அவ்வளவு உயிர்ப்பாக இருக்கின்றன; பறையின் இசையில் அத்தனை கம்பீரம்; கின்னாரத்தின் இசை காற்றை வருடி உடலைச் சிலிர்க்க வைக்கிறது. பழங்குடி இசைக் கருவிகளின் மீது பேரார்வம் கொண்ட மணிகண்டன், நாட்டார் கலைஞர்களைத் தேடித்தேடிப் பயின்றுவரும் கலைஞரும்கூட. பல கிராமங்களுக்குப் பயணம் செய்து, பழங்குடி மக்களுடன் வாழ்ந்து, அழிவு நிலையில் உள்ள பல இசைக்குறிப்புகளையும், இசைக்கருவிகளையும் மீட்டெடுத்துவருகிறார். 60 இசைக்கருவிகள், 20 ஆட்டக்கலைகள் என இசையோடும் ஆட்டத்தோடும் தன் வாழ்வைப் பிணைத்துக் கட்டமைத்துள்ளார். சவுண்ட் இன்ஜினீயரிங் இறுதியாண்டு மாணவரான மணிகண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, துபாய், ஓமன், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ளவர்களுக்கு ஆன்லைன் மூலம் பறை கற்றுத்தருகிறார். சமீபத்தில் இவர் இயக்கிய கின்னாரக் கலைஞர் அருணாசலம் ஐயா குறித்த ஆவணப்படம், பெரிதும் கவனம் பெற்றது. ‘சில்லுக்கருப்பட்டி’, ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். மணிகண்டனுடன் மனதுக்கு நெருக்கமான ஓர் உரையாடல்.

“சொந்த ஊரு ஈரோடு. ரொம்ப சாதாரணக் குடும்பம். அம்மா வீட்டில் துணி தைக்கிறாங்க. அப்பா டிரைவர். சின்ன வயசில் இருந்து இசை மீது ஆர்வம்னு சொல்றதைவிட, பறை மீது ஈர்ப்பு அதிகம்னு சொல்லலாம். எங்க ஊரு கோயில் திருவிழாக்களில் பறை அடிப்பாங்க. ஒரு மணி நேர ஆட்டத்துக்குப் பிறகு, ஆடிக் களைச்ச கலைஞர்கள் தண்ணி கேட்டாக்கூட , குடுக்கத் தயங்கிட்டு ஊர்க்காரங்க வீட்டுக்குள்ள போயிருவாங்க. அப்போவெல்லாம் ‘சாதிதான் இதுக்குக் காரணம்’னு எனக்குப் புரியல.



நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ஒரு நாள் வகுப்பு மேசையில் தாளம் தட்டிட்டிருந்தேன். அப்போ எங்க ஆசிரியர் குறிப்பிட்ட சாதிப் பெயரைச்சொல்லி, ‘அவன மாதிரி தாளம் தட்டிட்டு இருக்கே’ன்னு திட்டினாங்க. அந்த வார்த்தைகள் என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகளை விதைச்சுது. பறை மீதான ஈர்ப்பு இன்னும் அதிகமாச்சு. பறைங்கிறது தமிழர்களின் அடையாளம், அதை ஒரு சாதிப் பெயரைச் சொல்லி ஒதுக்குறது எப்படி நியாயம் ஆகும்? ஒதுக்குறவங்க எல்லாரையும், நான் இசைக்கும் பறைச் சத்தத்தால் ஆட வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். பறைக் கலைஞர்கள் பறை வாசிச்சு முடிச்சு ஓய்வு எடுக்கும் நேரம், நான் போய் பறையை எடுத்து வாசிப்பேன். வீடு தொடங்கி, சொந்தம் வரை அத்தனை எதிர்ப்புகள். வீட்டில் அடியெல்லாம் கூட வாங்கியிருப்பேன். பறை கற்பது கர்வம்னு சொல்லிட்டு விமர்சனங்களைக் கடந்து போயிருவேன். பன்னிரண்டாம் வகுப்பு முடிஞ்சதும், பறை மீதும் பழங்குடி இசைக்கருவிகள் மீதும் இருந்த ஆர்வத்துக்காகவே சவுண்ட் இன்ஜினீயரிங் பிரிவைத் தேர்வு பண்ணினேன். இசைக்கருவிகள் பத்தித் தேடுறதுக்கு முழுச் சுதந்திரம் கிடைச்சுது.

இருளர், சோளகர், ஊராளி மக்கள் இருக்கும் திம்பம் பகுதியிலிருந்து என் பயணத்தைத் தொடங்கினேன். அவங்ககிட்ட இருக்கும் பீனாச்சி, புகுரி, அரைத் தம்பட்டை எல்லாம் ரொம்பப் பழைமையான இசைக்கருவிகள். பழங்குடிகள் அடையாளம் இல்லாமல் இருப்பது போலவே, அவர்களுடைய இசைக்கருவிகளும் சாதிங்கிற திரை போட்டு, அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கு. அந்தக் கருவிகளை மீட்டெடுப்பதுதான் முதல் லட்சியமா இருந்துச்சு. ஆரம்பத்தில் அவங்க என்னை நம்பவே இல்ல. எத்தனையோ ஏமாற்றங்களையும், வலிகளையும் கடந்து வந்த மக்கள் இப்போதெல்லாம் மத்த மனுஷங்களைப் பார்த்தாலே பயப்படுறாங்க. அவங்களை சமுதாயம் ஒதுக்குன மாதிரி, அவங்களும் சமுதாயத்தை ஒதுக்கிப் பல வருஷம் ஆச்சுன்னு அப்போதான் புரிஞ்சுது. அவங்க மேல கோபம் வரல. எவ்வளவு காயப்பட்டுருக்காங்கன்னு தெரிஞ்சுது. ரெண்டு நாள் அவங்க இருப்பிடத்திலேயே இருந்தேன். என் நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு எனக்காக அவங்களோட இசைக்கருவிகளை வாசிச்சுக் காண்பிச்சாங்க. சில கருவிகளையும் எனக்காகக் கொடுத்தாங்க. அவங்க வாசிச்சதை ரெக்கார்டு பண்ணிட்டு வந்து திரும்பத் திரும்பக் கேட்டு நானும் வாசிக்கக் கத்துக்கிட்டேன்.

அதன்பின் வெவ்வேறு கிராமங்களுக்குப் பயணம் பண்ணி, `பவுனி, கொக்கரை, மரக்காப்பு, நெடுந்தாரை, வட்டக்கிளி, இடிகுவளை, மலையொலி மூங்கில், நெடுமக்குடி, சிரட்டைக் குழல், குட்டைத்தாரை’ன்னு 60க்கும் மேற்பட்ட கருவிகளை மீட்டெடுத்திருக்கேன். கரகம், ஒயில், பெரிய கம்பாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம்னு 20க்கும் மேற்பட்ட ஆட்டக் கலைகள் ஆடுவேன்.

இதுபோன்ற ஒரு பயணத்தில் சந்திச்சவர்தான் கின்னாரக் கலைஞர்அருணாசலம் ஐயா. அவர்தான் தமிழ்நாட்டில் இருக்கும் கடைசிக் கின்னாரக் கலைஞர். அவரோடு அந்தக் கலையும் கருவியும் அழியும் நிலையில் இருந்துச்சு. அவரை நான் தேடிப்போகும்போது, சின்னக் குடிசையில் ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தார். அவர் கின்னாரம் வாசிச்சு, கோவலன், கண்ணகியைப் பற்றிச் சொல்லுவதைக் கேட்கும்போது ‘எந்த மேல்நாட்டு இசைக்கருவியும் எங்ககூட போட்டிபோட முடியாது’ன்னு கத்திச் சொல்லணும்போல இருந்துச்சு. ஆனா, அவருக்கு சொந்த ஊரில்கூட மரியாதை கிடைக்கல. கின்னாரத்தை மக்களிடம் கொண்டு போயி சேர்க்கணும்னு முடிவு பண்ணி ஆவணப்படமாக்கினேன். அது பெரிய அளவில் மாற்றத்தைக் கொடுத்துச்சு. அவருக்கு உதவிகளும் கிடைச்சுது’’ என்று சொல்லும்போதே மணியின் கண்களில் அத்தனை ஆனந்தம்.

“நம் பாரம்பரியக் கலைகளையெல்லாம் மீட்டெடுக்கிறது என்பது அந்தக் கருவிகளை இயக்கக் கத்துக்கிறது மட்டுமல்ல, உருவாக்கக் கத்துக்கிறதும்தான். அதற்கான பணிகளைத்தான் இப்போ தொடங்கியிருக்கேன். நிறைய இசைக்கருவிகளை அதன் அடிப்படை தெரிஞ்சு நானே வடிவமைச்சிருக்கேன். ஒவ்வொரு கருவிக்கும் ஒரு பாடத்திட்டத்தை வடிவமைச்சு, அதை மக்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும். இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கு. கலைஞர்களுக்கு போதிய வருமானம் இல்ல. அவங்களுக்கு அவங்களை எப்படி வெளிப்படுத்திக்கணும்னு தெரியல. அதான் ஒவ்வொரு கலையையும் நாம் இழந்துட்டு வர்றோம். பறையை ஒதுக்குறாங்கன்னு சொல்லிச் சொல்லி, இப்போ மக்கள் மத்தியில் பறை குறித்துப் போதிய விழிப்புணர்வு வந்திருக்கு. அதே மாதிரி மற்ற கருவிகளையும் மீட்டெடுக்கணும்’’ என்ற மணிகண்டன், வெளிநாடுகளில் தமிழ்க்கலையைக் கொண்டு சேர்த்த விதம் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

“ஒருமுறை கல்லூரியில் சக நண்பர்களுக்குப் பறை வாசிக்கக் கத்துக்கொடுத்துட்டு இருந்தேன். ஒரு இலங்கைத் தமிழர் பிரான்ஸ் நாட்டில் இருக்கும் வெர்சாய் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, ஒரு மாதம் பிரான்ஸில் பயிற்சி வழங்க என்னைக் கூட்டிப் போனாங்க. அங்க பயிற்சிகள் கொடுத்தேன். எந்தக் குடும்பம் நான் பறை அடிப்பதை இழிவாக நினைச்சாங்களோ, அவங்களே என்னைப் பெருமையா பார்த்தாங்க. எனக்குன்னு ஒரு அடையாளம் கிடைச்சுது. அதன் தொடர்ச்சியாக கொரோனா நேரத்தில் ஆன்லைன் மூலமாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்குப் பறைப் பயிற்சிகள் வழங்கினேன். சொன்னா நம்ப மாட்டீங்க. ஒரு ஐ.டி ஊழியர் சம்பளத்தைவிட ஆன்லைன் மூலமாகப் பறைப் பயிற்சி கொடுத்து நான் சம்பாதிச்ச காசு அதிகம். அந்தத் தொகையில் கொரோனா நேரத்தில் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் முடங்கிய கலைஞர் களைத் தேடிப் போய் உதவி பண்ணினேன். கலைஞர்கள் அவ்வளவு சந்தோஷப்பட்டாங்க. இங்க இருக்கும் கலைஞர்கள், தங்களுக்கு வசதியான வாழ்க்கை வேணும்னு நினைக்கிறது இல்ல. தங்கள் திறமைக்கு மரியாதையும், வாய்ப்பும்தான் எதிர்பார்க் கிறாங்க. சாதி அடையாளங் களைக் கடந்து நம் இசைக் கருவிகளையும் இசைப் பண்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். மேற்கத்திய இசையை அண்ணாந்து பார்ப்பதை விட்டுவிட்டு நம் பாரம்பரிய இசைக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவாய் நிற்போம்” என்கிறார் மணிகண்டன்.

பண்பாட்டின் பழம்வாசனை ஒவ்வொரு வார்த்தையிலும் வீசுகிறது!

Wednesday, November 24, 2021

டெங்கு - ஏடீஸ் கொசு

“டெங்குவும் வைரஸால் பரவும் ஒரு நோய்தான். மலேரியா, சிக்குன் குன்யா, ஜிகா போல இதையும் கொசுக்கள்தான் பரப்புகின்றன. டெங்கு பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடிக்கும் ஏடீஸ் வகைக் கொசுக்கள், அந்தக் கிருமியை இன்னொருவரின் உடலுக்குள் செலுத்துகின்றன. அதன்மூலமாகவே இந்த நோய் பரவும். இருமல், தும்மல் மூலமாகப் பரவாது. இதில் DEN-1, DEN-2, DEN-3, DEN-4 என 4 விதமான வைரஸ்கள் உள்ளன. DEN-2, DEN-4 இரண்டும் தீவிர நிலையை உருவாக்கலாம்''

ஏடீஸ் கொசுக்கள், நன்னீரில் வளரும். இது பகலில் மட்டுமே கடிக்கும் என்று நம்பப்பட்டது. தற்போது இரவிலும் கடிக்குமளவுக்கு இது பரிணமித்துவிட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கறுப்பு நிறத்திலிருக்கும் இந்தக் கொசுவின் கால்களில் வெள்ளை நிறத்தில் வரிகள் இருக்கும். அதனால் இதை Tiger Mosquito என்றும் குறிப்பிடுகிறார்கள். பெண் கொசுக்களே மனிதர்களைக் கடித்து நோயைப் பரப்பும். ஆண் கொசுக்கள் தாவரங்களில் தங்களுக்கான உணவைத் தேடிக்கொள்ளும். பத்துச் சொட்டு நல்ல தண்ணீர் இருந்தால்கூட அதில் முட்டையிட்டு இனத்தைப் பெருக்கிவிடும். இந்தக் கொசுவின் அதிகபட்ச ஆயுள்காலம் 30 நாள்கள். ஒரு ஏடீஸ் கொசு தன் வாழ்நாளில் 300 முட்டைகள் இடும். தண்ணீர் வற்றினாலும் சில மாதங்கள் வரை இந்த முட்டைகள் அழியாது. மீண்டும் ஈரம் கிடைத்தால் லார்வா நிலையை அடைந்துவிடும். முட்டையிலிருந்து கொசுவாக மாற 8 முதல் 10 நாள்களாகும். சுமார் 400 மீட்டர் சுற்றளவு வரை இவை செல்லும். நம் சுவாசக் காற்று, வியர்வையிலிருந்து வெளியேறும் லாக்டிக் அமிலம், யூரிக் அமிலம், கொழுப்பு அமிலங்களின் வாசனை இந்தக் கொசுவை ஈர்க்கும். அதிக உடல் வெப்பம் உள்ளவர்களையும் இந்தக் கொசு தேடிச்சென்று கடிக்கும்.























“வைரஸ் உடலுக்குள் சென்ற 4 முதல் 7 நாள்களுக்குள் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். பிரதான அறிகுறி காய்ச்சல்தான். அதோடு கடுமையான சோர்வும் உடல்வலியும் நடுக்கமும் இருக்கும். கண்ணுக்குப் பின்புறம் வலி, இதன் இன்னொரு முக்கிய அறிகுறி. விழிகளை அசைக்கும்போது வலிக்கும். தலைவலி, முதுகுவலியும் இருக்கும். வாந்தி, வயிற்றுவலியும் சிலருக்கு ஏற்படலாம். பல்துலக்கும்போது ரத்தம் வரலாம். வாந்தியிலும் ரத்தம் சேர்ந்து வரக்கூடும்.

டெங்கு வைரஸ் நம் உடலில் உள்ள நீர்த்தன்மையை வெகுவாகக் குறைத்துவிடும். நம் ரத்தத்தில் வெள்ளையணு, சிவப்பணுபோல தட்டணுக்களும் இருக்கின்றன. இவை எலும்பு மஜ்ஜையில் இருந்து உருவாகும். இயல்பாக 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை உடலின் தன்மைக்கேற்ப ரத்தத் தட்டணுக்கள் இருக்கும். காயம், சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது அதை உறைய வைப்பது இந்தத் தட்டணுக்கள்தான். டெங்கு வைரஸ், இந்த அணுக்களை அழிக்கிறது. அதனால், பற்களின் வழியாகவோ, சிறுநீர், மலம் மூலமாகவோ ரத்தம் கசியத் தொடங்கும். தட்டணுக்கள் மிகவும் குறைந்து, நுரையீரல் பகுதியில் நீர் சேரும்போது `டெங்கு ஷாக் சிண்ட்ரோம்' வருவதற்கான வாய்ப்புண்டு. அதுதான் ஆபத்தான தருணம்.

டெங்கு வைரஸுக்கு என்று நேரடி சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளின் தன்மைக்குத் தக்கவாறு, பாராசிட்டமால் போன்ற மருந்துகளைத் தரலாம். முழுமையான ஓய்வு தேவை. காய்ச்சல் அல்லது காய்ச்ச லுடன் வயிற்றுவலி, மயக்கம், வாந்தி ஏற்பட்டால் மருத்து வரைப் பார்க்க வேண்டியது அவசியம். டெங்குவைக் கண்டறிய NS1 Ag, Dengue IgM போன்ற பரிசோதனைகள் உள்ளன. ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை, ரத்தத்தில் நீரின் அளவு இரண்டையும் குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும். நீராகாரம், பாராசிட்டமால் எடுத்துக் கொண்டாலே 95 சதவிகிதம் சரியாகிவிடும். 5 சதவிகிதம் பேருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 50,000த்துக்கும் கீழே குறைந்துவிடலாம். அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். தேவைப் படும்பட்சத்தில் ரத்தத் தட்டணுக்கள் ஏற்றப்பட வேண்டும். யாரும் சுயமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது. காய்ச்சல் மூன்று நாள்களுக்கு மேல் நீடித்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்'

சுற்றுப்புறத்தையும் நம்மையும் சுத்தமாக வைத்துக்கொள்வது ஒன்றுதான் வழி. வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் சேகரிக்கப் பயன்படுத்தும் டிரம்கள், தரைத் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், சிமென்ட் தொட்டிகள் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்து சரியாகப் பராமரிக்கவேண்டும். வீட்டருகே கிடக்கும் உபயோகமற்ற பொருள்கள், பிளாஸ்டிக் கப்கள், பெயின்ட் டப்பாக்கள் போன்றவற்றை அகற்றவேண்டும். வீட்டைச் சுத்தமாகவும் வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் வைத்திருக்க வேண்டும். கொசுவலை பயன்படுத்துவது நல்லது. முழுக்கை ஆடை அணிவது பாதுகாப்பு. குறிப்பாக குழந்தைகளுக்குக் கால், கைகளை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிவிக்க வேண்டும்.

Monday, November 15, 2021

பழங்குடி மக்களின் ரட்சகன் பிர்சா முண்டா
அந்தோணி அஜய்.ர


ஏராளமான போராட்டங்கள், ஏராளமான உயிர்த் தியாகங்களைக் கடந்து இந்திய நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால், நாம் முழுமையாகச் சுதந்திரம் பெற்றுவிட்டோமா? நாம் போற்றிப் புகழும் நம் சுதந்திரத்தின் மீது நமக்கே நிச்சயமாகச் சந்தேகம் எழும், 'பிர்சா முண்டா'-வைத் தெரிந்துகொண்டோமேயானால்...

ஜார்க்கண்டில் கல்வி நிலையங்கள், போக்குவரத்து நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், விமான நிலையம், விளையாட்டு மைதானம் எனப் பல இடங்களில் பிர்சாவின் பெயரைக் காணலாம். `இது பிர்சா முண்டாவின் மண்!' எனக் கூறித்தான் எல்லாக் கட்சிகளும் அங்கு வாக்கு சேகரிக்கின்றன. கட்சி, கொள்கை என எந்த பேதமும் இன்றி யாரும் தவிர்க்க முடியாத தலைவராக இருக்கிறார் பிர்சா. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படைதிரட்டி வில், அம்புடன் சண்டையிட்டு மாண்டார் பிர்சா. அந்தக் காலத்தில் துணிவுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்த மிகக் குறைந்த தலைவர்களுள் பிர்சாவும் ஒருவர். வாழும்போது ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவும், முண்டா உள்ளிட்ட பழங்குடியின மக்களுக்குக் கடவுளாகவும் இருந்தார் பிர்சா.

பிர்சாவின் புகழ் சொல்லும் நாட்டுப்புறப் பாடல்கள் இன்று ஜார்க்கண்ட் பழங்குடி இளைஞர்களுக்குக் கேட்கும்போதெல்லாம் புல்லரிக்கக்கூடியதாக இருக்கின்றன

இத்தகைய பெரும் பெயர்கொண்ட பிர்சா முண்டாவை இணையத்தில் `இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்’ என அடையாளம் காணலாம். ஆனால் இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்குள் மட்டுமே சுருக்கிவிட முடியாத பழங்குடி மக்களின், மண்ணின் தலைவர் பிர்சா முண்டா!.

பிர்சா 1875-ம் ஆண்டு, எளிமையான பழங்குடிக் குடும்பத்தில் பிறக்கிறார். இந்தியப் பழங்குடிகளின் வாழ்க்கைமுறையும் கலாசாரமும் உயர்ந்தவை எனவும், பாலின பேதமற்றவை எனவும் தற்போது அனைவரும் வியக்கின்றனர். ஆனால், பிர்சாவின் தந்தை சுகுணா முண்டா, தாய் கோர்மி ஹடா முண்டாவுக்கு அத்தகைய அமைதியான வாழ்க்கை கிடைக்கவில்லை. பிர்சா முண்டா இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் என நான்கு பேருடன் பிறந்தார். பிழைப்புக்காக ஊர்களில், கிராமங்களில் கூலிகளாக பிர்சாவின் அம்மாவும் அப்பாவும் அலைந்துகொண்டிருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

குழந்தையான பிர்சா, சால்கண்ட் கிராமத்தில் பெற்றோருடன் வாழ்ந்தார். பிர்சா பிறந்த ஊர் உலிகண்ட் கிராமமா அல்லது சால்கண்ட் கிராமமா என்பது தெரியவில்லை (தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் குந்தி மாவட்டம்). பள்ளிப் பருவத்தில் டால்கா கிராமத்துக்குச் சென்ற பிர்சா, அங்கு தொடக்கக் கல்வியைப் பெற்றார். படிக்கும்போதே புதிய விவரங்களை அறிவதில் ஆர்வம்காட்டிய பிர்சா, தன் முண்டா இன மக்கள் சந்திக்கும் இன்னல்களையும், குழந்தைப் பருவம் முதலே கவனித்துவந்தார். குழந்தைப் பருவத்தில் பிர்சா நண்பர்களுடன் மணலில் புரண்டு மகிழ்ச்சியாக விளையாடுவார் என அவரைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. உண்மையில் அத்தனை மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் பிர்சாவுக்கு நீடிக்கவில்லை என்பதுதான் உண்மை. பிர்சாவின் ஆசிரியர் ஜெயபால் நாக் அவரை உயர் கல்விக்காக சாய்பசா மிஷனரி பள்ளியில் சேரப் பரிந்துரைத்தார்.

மிஷனரிகள் இந்திய மக்களின், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. எனினும், அது வெறும் சேவை நோக்கோடு மட்டும் செய்யப்பட்டதல்ல என்று பிர்சா எண்ணினார். வெள்ளையர்கள் இங்கிருக்கும் மக்களின் வளங்களைச் சுரண்டுவதற்கு ஏதுவாக, மதம் மாற்றும் பணியில் தீவிரமாகச் செயல்படுவதையும், அதற்காக மிஷனரிகள் உதவுவதையும் பிர்சா விரும்பவில்லை. அதனால், பிர்சாவால் தொடர்ந்து படிக்க முடியாமல்போனது.

மிஷனரியில் சேர பிர்சா மதம் மாறவேண்டியிருந்தது. அதனால் பிர்சா, 'பிர்சா டேவிட்'-ஆக கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். படிக்கும்போது பிர்சாவுக்கு கிறிஸ்தவ மதம், மூட நம்பிக்கைகள் இல்லாத அறிவார்ந்த மதமாகத் தோன்றியது. ஆனால், பிர்சாவின் அந்த நிலைப்பாடு வெகு நாள்கள் நீடிக்கவில்லை. மிஷனரியிலிருந்து வெளியேறினார் பிர்சா. அதன் பிறகு, அவர் 'பிர்சா தாவுத்' என அழைக்கப்பட்டார்.

கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியே வந்த பிறகு, பிர்சா மீண்டும் மூட நம்பிக்கைகள் நிறைந்த பழங்குடி மதத்துக்கு மாற விரும்பவில்லை. அப்போதுதான், பிரிட்டிஷ் கைகளில் சிக்கியிருக்கும் தன் மக்களையும் மண்ணையும் மீட்க வேண்டும் என்ற எண்ணம் அவர் இதயத்தில் ஊறத் தொடங்கியது. தன் சிந்தனையில், தன் மக்களின் நிலைக்கு பிரிட்டிஷ் அரசு மட்டுமின்றி, மக்களின் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு அவர்களைக் கூலிகளாக்கிவைத்திருக்கும் நில உரிமையாளர்களும்தான் காரணம் என்பதை உணர்ந்தார்.

வைணவ மதத்தில் இருக்கும் சுரண்டல், பழங்குடி மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகள், கிறிஸ்தவ ஏகாதிபத்தியம் ஆகியவற்றைக் களைந்து புதிய நம்பிக்கையை உருவாக்கிய பிர்சா, அதற்கு 'பிர்சைத்' எனப் பெயரிட்டார். பாதிரியார்கள், அர்ச்சகர்களின் பித்தலாட்டங்களைத் தன் மக்களுக்குத் தோலுரித்துக் காட்டினார். தாய் மதத்தின் கலாசாரங்களை ஏற்றுக்கொண்டு புதிய மதத்தை உருவாக்கியதால், முண்டா மக்களும் பிர்சாவின் பின் திரண்டனர்.

மக்களின் சொந்த கலாசாரம், சொந்த மதம் போன்ற அடையாளங்கள் அவர்களின் உரிமைகளைக் காக்க உதவும் என்பதை அறிந்திருந்தார் பிர்சா. இருப்பினும், உண்மையான அடையாளம், உரிமை தங்களின் நிலம் என்பதையும் ஆழமாக உணர்ந்து, தன் மக்களுக்கும் எடுத்துரைத்தார். ``உழுபவனுக்கே நிலம் சொந்தம், நிலம் எங்கள் உரிமை!" ஆகிய முழக்கங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தார். மக்கள் அவருக்கு, 'மண்ணின் தந்தை' எனப் பெயர் சூட்டினர். பிர்சா தனது மதத்தை உருவாக்கும்போது அவருக்கு வயது 20.

1894-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் வனச் சட்டம் ஒன்றை இயற்றி, பழங்குடி மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளாக அறிவித்தது. இதன் மூலம் பழங்குடிகளால் காக்கப்பட்டுவந்த காடும் வளங்களும் பிரிட்டிஷாரால் கொள்ளையடிக்கப்பட்டன. அங்கிருந்த பழங்குடி மக்கள் காட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இல்லையென்றால், பிரிட்டிஷ் அரசுக்கு வரிகொடுக்க வேண்டும் என்றனர். இதற்கு உள்ளூர் பண்ணையார்கள் பெரிதும் உதவினர். பழங்குடிகளின் நிலங்களை, மலை வளங்களைச் சூறையாட வெள்ளையர்கள் பண்ணையார்களைக் கருவிகளாக்கிக்கொண்டனர். பண்ணையார்களின் வியாபார சூழ்ச்சிகள், கடன் வழங்குதல் உட்பட பல வழிமுறைகளால் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தினர். பழங்குடிகளின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டன.

இன்று வரை எளிய மக்களின் உரிமைகளைப் பறிக்க அதிகாரவர்க்கம் உபயோகிக்கும் மந்திர வார்த்தைதான் `வளர்ச்சி’ (Development). நிலத்தின் சொந்தக்காரர்களான பழங்குடி மக்கள், பண்ணையார்களுக்கும் முதலாளிகளுக்கும், கூலிகளாக வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த அவலத்தைத் தன் கண்முன்னே கண்ட பிறகு, பிர்சா முண்டா பொறுத்திருக்க முடியாமல் கொதித்துப்போனார். முண்டா இன மக்கள் உட்பட, பல பழங்குடிகளை ஒன்றிணைத்து தன் சிந்தனைகளைப் பரப்பினார். பழங்குடி மதத்திலிருந்து மாறிப்போன பல மக்கள் 'பிர்சைத்'-ஐ ஏற்றுக்கொண்டனர். பிர்சாவை முழுவதும் நம்பிய மக்கள், அவரை இறைத் தூதராக ஏற்றுக்கொண்டனர். அவரிடம் ஆசியும் அறிவுரையும் பெறப் பலர் வந்து சேர்ந்தனர். இவர்களில் முண்டா இன மக்கள் மட்டுமல்லாமல் ஓரான், கரியா மக்களும் அடங்குவர்.

பிர்சாவின் மதத்தை 20 வயது இளைஞனின் குருட்டுத்தனமான முயற்சி என நிச்சயம் ஒதுக்கிவிட முடியாது. 12 வயதில் மிஷனரியிலிருந்து வெளிவந்த பிர்சா, தன் மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கான காரணங்களை ஆராய்ந்ததுடன், அவற்றிலிருந்து அவர்களை மீட்க ஆன்மிகம் உள்ளிட்ட பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருந்தார். பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை பெரும்பாலும் மதத்தைச் சார்ந்துதான் இருக்கிறது என்பதை உணர்ந்தவர், பிர்சைத் மதக் கோட்பாட்டை உருவாக்கியதுடன், அதை மக்களை எளிதாக ஒன்றிணைக்கவும் பயன்படுத்திக்கொண்டார்.

பிர்சாவை இதுவரை எந்த ஆய்வும் ஆன்மிகவாதியாக நிறுவியதில்லை. `பிர்சைத்’ எனும் மதத்தை பழங்குடிகளின் மூடநம்பிக்கைகளை விலக்கி தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும், உறுதியான அடையாளமாக இருக்கவும் மட்டுமே பிர்சா உருவாக்கினார் எனலாம். மற்றபடிக்கு பிர்சா பேசியதெல்லாம் அரசியல்தான். பிர்சா, தன் மக்களை ``உரிமையை மீட்போம்" வாருங்கள் என்றார். மக்களும் அவரை இறைத்தூதனாக ஏற்று, அவரைப் பின்தொடர்ந்தனர்.

1894-ம் ஆண்டு முதல் பிர்சாவின் முண்டா இன மக்களும், ஓரா, காரியா மக்களும் பிர்சாவுடன் சேர்ந்து தங்கள் நிலத்தைக் காக்க முன்வந்தனர். ``நிலம் பழங்குடிகளுக்குச் சொந்தமானது. அதற்காக வெள்ளையர்களுக்கு வரி செலுத்தக் கூடாது. கடன் வழங்கிய பண்ணையார்களுக்கும் பணம் வழங்கக் கூடாது" என்றார். பிர்சா முண்டாவின் பின் பேரணியாக வீரர்கள் திரண்டனர். அதனால், உள்ளூர் மிஷனரிகள் துரத்தப்பட்டனர். பண்ணையார்கள் தாக்கப்பட்டார்கள். இதில், பிரிட்டிஷ் அதிகாரிகளும் தப்பவில்லை

ஆனால், பிரிட்டிஷ் ராணுவம் களமிறங்கிய பின்னர், பிர்சாவின் கூட்டம் மிகச் சிறிதாகத்தான் தெரிந்தது. பிர்சாவும் அவர் ஆதரவாளர்களான கலகக்காரர்களும் கைதுசெய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகள் பிர்சாவும், அவர் ஆதரவாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். பழங்குடிகளின் எழுச்சி பிரிட்டிஷ் அரசைக் கோபப்படுத்தியிருந்தது ஒருபுறமென்றால், பிர்சாவின் கலகம் ஆங்கிலேயர்களையும் பண்ணையார்களையும் கலக்கியது மற்றொருபுறம். பிர்சா இனி போராட்டக் களத்தில் இறங்கக் கூடாது, அவரின் சிந்தனைகளை வளரவிடக் கூடாது என்னும் நோக்கில் பிர்சாவின் மீது காசரியாபாத் மத்தியச் சிறையில் நடத்தப்பட்ட சித்ரவதைகள் ஏராளம். ஆனால் பிர்சாவின் மன உறுதி லாக்கப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் பணியவில்லை.


உல்குலான்:

'உல்குலான்' என்றால், `அடக்க முடியாத போராட்டம்’ என்று பொருள். இந்த முறை பிர்சா மேற்கொண்டது இந்த அடக்க முடியாத போராட்டத்தைத்தான். ஆட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததுதான் தோல்விக்குக் காரணம் என்பதை உணர்ந்த பிர்சா, தலைமறைவாக இருந்து அதிக படையினரைத் திரட்டினார். இம்முறை அம்புகள், ஈட்டிகளுடன் பிர்சா வெள்ளையர்களை எதிர்கொண்டார். சண்டையிடுவதற்குக் கெரில்லா போர் முறையைக் கையாண்டனர். பழங்குடி மக்களின் வாழ்வியலைப் போன்றே போராட்டக் களத்திலும் பெண்களும் பங்கேற்றனர். கெரில்லா போர் முறையை அனைவருக்கும் பயிற்றுவித்தார் பிர்சா. 'கெரில்லா' போர் முறையை பிர்சா எங்கே கற்றுக்கொண்டார் என யாருக்கும் தெரியவில்லை. அதை பிர்சாவே உருவாக்கினார் என்ற கூற்றும் இருக்கிறது. பிரிட்டிஷ்காரர்களின் ஆதிக்கம் நிறைந்த இடங்கள் முதலில் குறிவைக்கப்பட்டன. சோட்டா நாக்பூர் பகுதியிலிருந்து ராஞ்சியின் தென் பகுதி வரை கலகம் பரவியது. எல்லாப் பழங்குடிகளும் பிர்சாவின் பின் திரண்டனர். பழங்குடிகளின் படை வெறும் அம்பும் ஈட்டியும் வைத்துத் தாக்கினாலும், ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளை அலறவிட்டன.

பிர்சா இருக்குமிடமே ஆங்கிலேயர்களால் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது. திடீரெனத் தோன்றி மக்களிடம் ஆங்கிலேயருக்கு எதிராக எப்படிச் செயல்பட வேண்டும் எனக் கூறிவிட்டு மறைந்துவிடுவார் பிர்சா. பிர்சாவுக்கு உண்மையாகவே மந்திரசக்தி இருப்பதாகவும் மக்கள் நம்பினர். அதை மெய்ப்பிக்கும்விதமாக, பழங்குடி மக்களை அடிமைகளாக நடத்திய பண்ணையார்கள் மர்மமாகக் கொல்லப்பட்டனர். பின்னர், 1898-ம் ஆண்டு கெரில்லா போர் முறையை விடுத்து, பிரிட்டிஷுடன் நேருக்கு நேராக மோதி பழங்குடிகள் குழு வெற்றியும் கண்டது. ஆனால் மீண்டும் பிரிட்டிஷ் ராணுவம் களமிறக்கப்பட்டது. இந்த முறை பிர்சா மாட்டிக்கொள்ளாமல் தப்பினார். ஆனால் சில போராளிகள் மட்டும் கைதுசெய்யப்பட்டனர். நேரடிப் போர் முறை சரியாக வராது என்பதை உணர்ந்த பிர்சா, மீண்டும் கெரில்லா முறையைப் பின்பற்றத் தொடங்கினார். அப்போதுதான் தொடங்கியது 'உல்குலான்', கட்டுக்கடங்காத காட்டாற்று வெள்ளம்போலக் காட்டின் மைந்தர்கள் ஒருங்கிணைந்து தங்களின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறியத் தொடங்கினார்கள்

பழங்குடிகளின் நிலத்தைப் பறித்துக்கொண்டு நில உடைமைதாரர்களாக இருந்த பண்ணையார்கள், வட்டிக்காரர்கள், வியாபார ஒப்பந்ததாரர்கள் என அனைவரும் தாக்கப்பட்டனர். பிர்சாவின் குறி முழுக்க ஏகாதிபத்திய பிரிட்டிஷ்காரர்கள் மீதுதான் இருந்தது. விஷம் தோய்த்த அம்புகளுக்கு காவல்துறையும் பிரிட்டிஷ்காரர்களும் இரையாகினர். பிரிட்டிஷ் சொத்துகள், சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. இந்தத் தகவல்கள் வெளிவர பிர்சா சுற்றுவட்டார மக்களிடையே ரட்சகனாக, நாயகனாகத் தோற்றமளித்தார்.

பலதரப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிர்சாவைப் பார்த்தே அறியாதவர்களும் பிர்சா நம்மைக் காத்திடுவார் என நம்பிக்கையோடு வெள்ளையர்களை எதிர்த்தனர். இழக்கப்பட்ட அவர்களின் உரிமைகள் கைகூடப்போகின்றன என உறுதியாக நம்பினார்கள். பிர்சாவுடன் இணைந்து ஆங்கிலேயர்களை மக்கள் எதிர்த்தனர். 1899 முதல் 1900 வரை உல்குலான் தொடர்ந்தது. மொத்த கலவரத்துக்கும் அச்சாணி பிர்சா முண்டாதான் என்பதால், பிரிட்டிஷ் அரசு அவரைச் சிறைபிடிப்பது என முடிவுசெய்தது. 1899-ம் ஆண்டு பிர்சா குறித்து தகவல் தருவோர்க்கு 500 ரூபாய் தருவதாக அறிவித்தனர். பிர்சா முண்டாவுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்பட்டவர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். தம்பறி மலைகளில் மறைந்திருந்த பிர்சா முண்டா ஆங்கிலேயர்களிடம் தனக்கு நெருக்கமானவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் பிர்சாவைக் கைதுசெய்தனர். பிர்சாவின் போராட்டம் வேள்பாரியையும், அவரின் கைது ஏசுவையும் நினைவுபடுத்துவதுபோல் இருந்தன.

அதைத் தொடர்ந்து, தம்பறி மலைகளில் வசித்துவந்த முண்டா மக்களை, பிரிட்டிஷ் படை துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லத் தொடங்கியது. கிட்டத்தட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒத்த படுகொலை அங்கு நடந்தது. அந்த இடம் இப்போதும் 'இறந்தவர்களின் மேடு' என்றே அழைக்கப்படுகிறது. இறுதியில் பிர்சாவுடன் 460 பழங்குடியினர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 63 பேருக்கு 15 பல்வேறு வழக்குகளின் கீழ் தண்டனை கிடைத்தது. 39 பேர் நாடுகடத்தப்பட்டனர். 23 பேருக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு மரண தண்டனையும் கிடைத்தன. ஆனால் பிர்சாவுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை. சிறையிலேயே காலத்தைக் கழித்தவர்களில் ஆறு பேர் இறந்துபோனார்கள். அவர்களில் பிர்சாவும் ஒருவர். `பிர்சா ஜூன் 9, 1900-ம் ஆண்டு காலரா நோயால் இறந்துபோனார்’ என ஆங்கிலேயர்கள் கூறினர். ஆனால் சிறைக் குறிப்புப்படி பிர்சாவின் மரணத்தில் பல மர்மங்கள் இருந்தன. பிர்சா உணவில் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார் என சில வரலாற்றறிஞர்களும், அவர் ரத்தத்தில் விஷம் செலுத்தப்பட்டு இறந்தார் என சில வரலாற்றறிஞர்களும் கூறுகின்றனர்.

பிர்சா இறந்துவிட்டார். அவர் கடவுள் அல்ல. சாதாரண மனிதன்தான்" என ஆங்கிலயேர்கள் முழக்கமிட்டனர். அதன் மூலம், பிர்சாவால் மக்களிடையே ஏற்பட்டிருந்த எழுச்சி உணர்வை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வாஞ்சையோடிருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. இன்று வரையிலும் பழங்குடி மக்கள் பிர்சாவைக் கடவுளாகத்தான் பார்க்கிறார்கள்.

காடு சார்ந்து வாழ்தலுக்கும், காட்டை அழித்து செல்வத்தைப் பெருக்குவதற்கும் இடையில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. அதை நாம் உணர வேண்டும். அதை உணராத பண்ணையார்களும் வியாபாரிகளும் பிர்சாவின் அம்புகளுக்கு என்று வேண்டுமானாலும் இரையாகலாம். ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய வாழ்வியல் சூழலுக்கு, பிர்சா முண்டாவின் தேவை இருக்கத்தான் செய்கிறது. பிர்சா முண்டா மரணம் மட்டும் கலவரத்தை நிறுத்திவிடவில்லை, அவர் பற்றவைத்த நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டுதான் இருந்தது. அதன் விளைவாக 1908-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பழங்குடிகளுக்கு ஆதரவாகச் சட்டம் இயற்றியது. அதன்படி, பழங்குடிகளின் வாழ்விடம் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததுடன், அவர்களால் எளிதாக அதை யாருக்கும் விற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம், இன்று ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் பழங்குடிகள் மக்களின் வாழ்விட உரிமை பாதுகாக்கப்பட்டுவருகிறது.

பிர்சாவின், 'நிலம் எங்கள் உரிமை!' எனும் முழக்கம் இன்றளவும் விளிம்புநிலை மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.!

Thursday, November 11, 2021

 இன்சுலினுக்கு இப்போது வயது 100

நன்றி: ஆனந்த விகடன்

நவீன மருத்துவத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இன்சுலினைச் சொல்கிறார்கள். இன்றைக்கு கொரோனாத் தடுப்பூசிகளைக் கண்டறிந்த பல நிறுவனங்கள் இஷ்டத்துக்கு அதற்கு விலை நிர்ணயம் செய்தபோது, ‘ஆராய்ச்சிக்காக அவர்கள் போட்ட முதலீட்டை எடுக்க வேண்டாமா?’ என்று நம்மில் பலரே நியாயப்படுத்துகிறோம். (இத்தனைக்கும் இதில் பல தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளுக்கு அரசுகளே நிதி அளித்திருந்தன!) ஆனால், இன்சுலினைக் கண்டுபிடித்தவர்கள் அதன் காப்புரிமைக்காகப் பெற்றது வெறும் ஒரு அமெரிக்க டாலர். மகத்தான அந்த மருந்து, குறைந்த விலையில் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர்.



சர்க்கரை நோயாளிகளின் வாழ்க்கையை இன்சுலினுக்கு முன்/இன்சுலினுக்குப் பிறகு என இரண்டாகப் பிரிக்கலாம். குறிப்பாக கணையம் செயலிழந்து இன்சுலின் சுரக்க இயலாத நிலையில் இருக்கும் டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு! 1921-ம் ஆண்டு இன்சுலினைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவர்களால் நீண்ட காலம் உயிர்வாழ முடியவில்லை. ஸ்ட்ரிக்ட் டயட் இருக்கச் சொல்வதைத் தவிர, டாக்டர்களுக்கும் எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், சில ஆண்டுகளில் ஒன்று அது சர்க்கரை முற்றி, சாகும்; அல்லது, பட்டினியால் சாகும். இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே அவர்கள் முதுமையை தரிசித்தனர். டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கும் ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரப்பு குறையும்போது இதுவே ஆபத்பாந்தவனாகக் காப்பாற்றுகிறது. பல லட்சம் குடும்பங்களின் கண்ணீரைத் துடைத்த அற்புதக் கண்டுபிடிப்பு அது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த இன்சுலினுக்கு மாற்று வேறு எதுவும் வரவில்லை என்பதே அதன் மகத்துவத்தை உணர்த்துகிறது.

இன்சுலினைக் கண்டறியும் முயற்சி, அதற்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் சர்க்கரை நோய் வரும் என்பதால், இந்தப் பரிசோதனையில் ஏராளமான நாய்கள் உயிர்த்தியாகம் செய்தன. ஆரோக்கியமான நாய்களின் கணையத்தை ஆபரேஷன் செய்து அகற்றியபிறகு, அவற்றின் உடலில் சர்க்கரை அதிகரித்தது. எனவே, ‘சர்க்கரை நோய் வருவதற்கு கணையத்தில் ஏற்படும் ஏதோ ஒரு பிரச்னைதான் காரணம்’ என்று டாக்டர்களுக்குப் புரிந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கணையத்தை இப்படி அப்படி ஆராய்ச்சி செய்து சம்பவ இடத்தை நெருங்கினர். கணையத்தின் லங்கார்ஹன் திட்டுக்கள் பகுதியில் சுரக்கும் ஏதோ ஒரு திரவம்தான் சர்க்கரை நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது என்று புரிந்துகொண்டனர். அதற்கு ‘இன்சுலின்’ என்று ஒருவர் பெயரும் வைத்துவிட்டார்.

1916-ம் ஆண்டு ருமேனிய டாக்டரான நிகோலே பாலெஸ்கு என்பவர் ஒரு நாயின் கணையத்திலிருந்து சுரப்பைத் தனியாகப் பிரித்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்கு அதைச் செலுத்தியதும், அதன் ரத்த சர்க்கரை அளவு இயல்பானது. தான் மிக முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்திருப்பது அவருக்குப் புரிந்தது. ஆனால், அந்த நாய் சீக்கிரமே இறந்துவிட்டது. சில நாள்களில் முதல் உலகப் போர் வந்தது. டாக்டர் அவசரமாக ராணுவ சேவைக்குப் போக வேண்டி இருந்ததால், அந்த ஆராய்ச்சி தடைப்பட்டது.


1920 அக்டோபர்… கனடாவைச் சேர்ந்த ஃபிரடெரிக் பேன்டிங் என்ற டாக்டர், நாயின் கணையத்திலிருந்து தூய்மையான இன்சுலினைப் பிரித்தெடுக்க முடியும் என்று தன் ஆராய்ச்சியில் வெற்றி கண்டார். அவருக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. டொரன்டோ பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியர் மேக்லியோட் என்பவரிடம் போய் இதைச் சொன்னார். பேன்டிங் ஒரு சாதாரண அறுவை சிகிச்சை நிபுணர். பெரிதாக ஆராய்ச்சி செய்த அனுபவமும் இல்லை. அதனால் இவர் சொல்வதை எந்த அளவுக்கு நம்புவது என்று மேக்லியோடுக்குத் தயக்கம் இருந்தது என்றாலும், பேன்டிங் விடாமல் வற்புறுத்தியதால், தன் ஆராய்ச்சி நிலையத்தை அவருக்குக் கொடுத்தார். கூடவே, சார்லஸ் பெஸ்ட் என்ற ஆய்வக உதவியாளரையும் அனுப்பி வைத்தார்.

1921 ஜூலை 30… பேன்டிங்கும் பெஸ்ட்டும் இணைந்து ஒரு நாயின் கணையத்திலிருந்து இன்சுலினை வெற்றிகரமாகப் பிரித்து எடுத்தனர். ‘‘இதன்மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும்’’ என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு சக டாக்டர்கள் சிரித்தனர். ‘‘பழுப்பு நிறத்தில் சேறு மாதிரி இருக்கும் இதைப் போய் மருந்து என்கிறீர்களே?’’ என்று கேட்டனர்.

‘நாய் எண் 410’ என்று பெயரிடப்பட்ட தீவிர சர்க்கரை நோயாளி நாய் ஒன்றுக்கு அந்த இன்சுலின் செலுத்தப்பட்டது. நாயின் ரத்த சர்க்கரை அளவு சில நிமிடங்களில் இயல்புக்கு வந்தது. மரணத்தின் விளிம்பில் இருந்த அந்த நாயை, பேன்டிங் கண்டுபிடித்த இன்சுலின் 70 நாள்கள் உயிருடன் வைத்திருந்தது. இன்சுலின் தீர்ந்தபிறகே அந்த நாய் செத்துப்போனது.

இன்சுலினின் செயல்திறனைப் பார்த்துப் பேராசிரியர் மேக்லியோட் திகைத்துவிட்டார். ஒரு மாபெரும் மருத்துவத் திருப்பத்தின் மையத்தில் நிற்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டார். தன் ஆய்வுக்கூடத்தில் நடைபெற்று வந்த மற்ற ஆராய்ச்சிகளையெல்லாம் நிறுத்திவிட்டு இன்சுலின் ஆராய்ச்சிக்கு இடவசதி செய்து கொடுத்தார். நாய்களிலிருந்து எடுக்கும் இன்சுலின் போதுமானதாக இல்லை என்பதால், கன்றுக்குட்டிகளிலிருந்து எடுத்தார் பேன்டிங். என்றாலும் ‘இது மனிதர்களுக்குக் கொடுக்கும் அளவுக்குப் பாதுகாப்பானதா’ என்ற சந்தேகம் மேக்லியோடுக்கு இருந்தது. ஜேம்ஸ் காலிப் என்ற உயிர் வேதியியலாளரை உதவிக்கு அழைத்தார். இப்போது குழு முழு வேகத்துடன் உழைத்து ஒரே மாதத்தில் தூய்மையான இன்சுலினைப் பிரித்தெடுத்தது.

1922 ஜனவரி 11. கனடாவின் டொரன்டோ பொது மருத்துவமனை. முற்றிய டைப் 1 சர்க்கரை நோயுடன் லியனார்டு தாம்சன் என்ற 14 வயதுச் சிறுவன் அனுமதிக்கப்பட்டிருந்தான். கோமா நிலைக்குச் செல்லும் அளவுக்கு பாதிப்பு. அவனுக்கு இன்சுலினைச் செலுத்த அனுமதி கேட்டார் டாக்டர் பேன்டிங். இதுவரை மனிதர்கள் யாரிடமும் பரிசோதிக்கப்படாத மருந்து. ‘இதைக் கொடுக்காவிட்டாலும் மகன் சாகத்தான் போகிறான். கொடுத்து ஏதாவது பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை’ என்று தந்தை ஹரோல்டு தாம்சன் சம்மதம் தெரிவித்தார்.

இப்படித்தான் இன்சுலின் இன்ஜெக்‌ஷனைப் பெற்ற முதல் மனிதன் ஆனான் லியனார்டு தாம்சன். அது அவன் ரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் குறைத்தது. ஆனால், எல்லோரும் நினைத்ததுபோல அது பரிசுத்தமான இன்சுலின் இல்லை. அதனால் லியனார்டு உடலில் அலர்ஜி ஏற்பட்டது. அடுத்த டோஸ் இன்சுலின் தருவதை உடனடியாக நிறுத்தினர். உயிர் வேதியியலாளர் ஜேம்ஸ் காலிப் அடுத்த 12 நாள்கள் இரவும் பகலுமாகப் பல வேதிவினைகளைச் செய்து அந்த இன்சுலினைத் தூய்மையாக்கினார். ஜனவரி 23-ம் தேதி லியனார்டுக்கு இரண்டாவது டோஸ் இன்சுலின் போடப்பட்டது. இப்போது அலர்ஜி ஏற்படவில்லை. எலும்பும் தோலுமாகக் படுக்கையில் கிடந்த அந்தச் சிறுவன், அடுத்தடுத்து இன்சுலின் போட்டதும் உற்சாகமாகி எழுந்து விளையாட ஆரம்பித்தான். டாக்டர் பேன்டிங் குழுவினர் ஆனந்தக் கண்ணீர் சிந்தினர்.



சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது’ என்ற செய்தி காட்டுத்தீப்போல உலகெங்கும் பரவியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இவான்ஸ் ஹ்யூக்ஸின் மகள் எலிசபெத் ஒரு சர்க்கரை நோயாளி. அமைச்சர் தன் மகளை அழைத்துக்கொண்டு கனடாவுக்கு விரைந்து வந்தார். அவரே இன்சுலின் போட்டுக்கொண்ட முதல் அமெரிக்கர். இப்படி வெளிநாடுகளிலிருந்து பலர் வருவது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு மருத்துவர்களும் இன்சுலினைக் கேட்க ஆரம்பித்தார்கள். அமெரிக்காவின் ஏலி லில்லி மருந்து நிறுவனம் இதற்காக ஒப்பந்தம் செய்து, 1922 நவம்பரில் விற்பனைக்கே கொண்டுவந்துவிட்டது.

இன்சுலினைக் கண்டுபிடித்ததற்காக 1923-ம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு ஃபிரடெரிக் பேன்டிங் மற்றும் பேராசிரியர் மேக்லியோட் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது. ‘என் ஆராய்ச்சிக்கு உதவிய பெஸ்ட்டுக்கும் இதில் பங்கு உண்டு’ என்று சொல்லி, அவருடன் தன் பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொண்டார் பேன்டிங். ‘இன்சுலினைச் சுத்திகரிக்க உதவிய ஜேம்ஸ் காலிப்புக்கும் இதில் பங்கு உண்டு’ என்று சொல்லி, தன் பரிசுத் தொகையை அவருடன் பகிர்ந்துகொண்டார் மேக்லியோட். இந்த அரிதான பெருந்தன்மையைக் கண்டு நோபல் கமிட்டி திகைத்துவிட்டது.

தாங்கள் கண்டுபிடித்த இன்சுலினுக்குக் காப்புரிமை வாங்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கவில்லை. ஒரு சர்க்கரை நோயாளி ஆயுள் முழுக்க இன்சுலினைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், உலகம் முழுக்க எல்லோருக்கும் இது மலிவு விலையில் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால், இவர்களின் அனுமதி இல்லாமலே ஒரு மருந்து நிறுவனம் இதற்குக் காப்புரிமை வாங்க முயன்றது. அப்படி அவர்கள் செய்திருந்தால், அவர்கள் மட்டுமே இன்சுலினைத் தயாரித்திருக்க முடியும். அதற்கு என்ன விலை சொன்னாலும், உலகம் கொடுத்திருக்க வேண்டும்.

இந்த அபாயத்தைத் தவிர்ப்பதற்காக இவர்கள் நால்வரும் இணைந்து, இன்சுலின் காப்புரிமையை டொரன்டோ பல்கலைக்கழகத்துக்குக் கொடுத்துவிட்டு ஒற்றை அமெரிக்க டாலரை அடையாளத் தொகையாகப் பெற்றுக்கொண்டார்கள். ‘இன்சுலினைப் பிரித்தெடுக்கும் வழிமுறையை நாங்கள் வெளிப்படையாகத் தருகிறோம். யார் வேண்டுமானாலும் இந்த முறையைப் பின்பற்றித் தயாரிக்கலாம். ஆனால், கொள்ளை லாபம் பார்க்க முயற்சி செய்யக் கூடாது’ என்று எழுதியும் கொடுத்தார்கள். மருத்துவ அறத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது இந்தச் செயல்.



ஆரம்பக்காலத்தில் கால்நடைகள் மற்றும் பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் பிரித்தெடுக்கப்பட்டது. அதில் சிலருக்கு அலர்ஜி வந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தெடிக் இன்சுலின் அறிமுகமானபிறகு, யாருக்கும் அலர்ஜி பிரச்னை இல்லை. இன்சுலின் பேனா, இன்சுலின் பம்ப் எல்லாம் வந்தபிறகு இதைப் பயன்படுத்துவது இன்னும் எளிதாகிவிட்டது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை ஏறினால் பெரும் கூக்குரல் எழுவதுபோலவே, இன்சுலின் விலை ஏறினாலும் சர்ச்சையாகிறது. மாத பட்ஜெட்டில் இன்சுலினுக்கு ஒரு தொகை ஒதுக்க வேண்டிய நிலையில் நிறைய குடும்பங்கள் இருக்கின்றன. இப்போது அமெரிக்காவில் இன்சுலின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பது அங்கே ஜோ பைடன் அரசுக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன செய்வது… சில கண்டுபிடிப்பாளர்கள் போல பல மருந்து நிறுவனங்கள் மருத்துவ அறத்தைப் பின்பற்றுவதில்லையே!


Friday, November 5, 2021

முழுமையான கம்யூனிஸ்ட் நன்மாறன் 

2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும், கூட்டணிக் கட்சியினர் அவரைத் தூக்கிக் கொண்டாடியபோது, ‘‘இங்கே வேண்டாம். அது தோற்றவர்களுக்கு வருத்தம் தரும்” எனக் கூறி அனைவரையும் வெளியில் அனுப்புகிறார். இதுதான் தோழர் நன்மாறன்!


‘‘மற்ற ஊர்களுக்குள் நுழையும்போது தொழிற்சாலைகள் இயங்குகிற சத்தம் கேட்கிறது. ஆனால், மதுரைக்குள் நுழையும்போது கொத்து புரோட்டா போடும் சத்தம் மட்டும்தான் கேட்கிறது. இங்கு தொழில் வளர்ச்சியடைய டைடல் பார்க் அமைந்திடக் காரணமாக இருந்தவர்.


உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பிரச்னை பற்றி 2008-ல் சட்டமன்றத்தில் விளக்கமாகப் பேசி அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றவர்.

கடந்த ஆண்டு அரசு மருத்துவமனை அருகே பேருந்தில் ஏறியபோது, தவறவிட்ட ஒற்றைச் செருப்பை எடுக்கக் கீழே இறங்கித் தேடுவதைப் பார்த்து வருத்தப்பட்ட ஆட்டோக்காரர் பாண்டி, `ஆட்டோவுல வாரீங்களா?’ என்று கேட்க, `என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கு’ என்று அவர் சொல்ல, ‘பரவாயில்லை’ என்று ஏற்றியபோதுதான், அவர் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் என்பதை அறிந்து அதிர்ச்சியாகி, அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு வீட்டில் இறக்கிவிட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.


வழக்கமாக, பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகம் வருவார் நன்மாறன். ஒருநாள் மனைவியுடன் மனு கொடுக்க நிற்பதைப் பார்த்துச் செய்தியாளர்கள் விசாரிக்க, ‘ஒண்ணுமில்லை, வீட்டு வாடகை அதிகமாகிக்கிட்டே போகுது. அதான் அரசு வழங்கும் இலவச வீட்டுக்கு மனு கொடுக்க வந்தேன்’ என்று சாதாரணமாகச் சொல்ல, செய்தியாளர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.

சமகால ஆடம்பரமான அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, நன்மாறன் ஓர் ஆச்சரிய மனிதர்; அல்லது, பிழைக்கத் தெரியாதவர். அதேநேரம், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படும் நபர். அவர் பெயர் தெரியாதவர்கள் மதுரையில் மிகக் குறைவு. அதனால்தான் அவர் மறைவுச் செய்தி கேட்டதும் அஞ்சலி செலுத்த அனைத்துக் கட்சியினரும், மக்களும் சாரைசாரையாக வந்துகொண்டே இருந்தார்கள்.

இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தாலும் தனக்கென்று எந்தக் கோரிக்கையும் அரசிடம் வைக்காதவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக ஆரப்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து, கட்சி தரும் ஊதியத்தில் வாழ்ந்து வந்த நன்மாறன் முழுமையான கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். அவர் இயல்பே எளிய வாழ்க்கைதான்.

Tuesday, November 2, 2021

ஜெய் பீம்

சில படங்கள் நம்மை உறங்க செய்வதில்லை
அப்படி ஒரு திரைப்படம் ஜெய்பீம்
ஆரம்ப காட்சியிலேயே முகத்தில் அறைந்து சொல்கிறது நம் சாதிய பாகுபாடை
இருளரின் உதவிகேட்டு வந்தும் வண்டியில் தோளில் கை வைக்கும் போது பார்க்கும் ஒரு பார்வை நம் இந்தியாவின் உண்மை முகம்
ரொம்ப வன்முறைப்பா போலீஸ் இப்டியெல்லாமா நடக்குவாங்க என்று வெள்ளந்தியாய் கேட்கும் அப்பாவி நடிக மனிதர்களுக்கு ஜெயராஜ் பென்னிக்ஸை தெரியாதது மாதிரியும் நடிப்பவர்களே
எல்லா சாதிக்காரங்க கால்லயும் விழுந்து ஓட்டு கேட்குறோம் ஒங்க கால்லயும் விழனுமாடானு கேட்கும் ஆண்ட பரம்பரை பார்வை உச்சம்
இந்த சின்ன குஞ்சு எலியா நம்ம பெருங்குடலை நிறைக்கப்போகுதுனு சொல்லும் செங்கனியின் பச்சாதாபம் நான் எக்கிட்டேரியன்னு ஜீவகாருண்யம் சொல்றவனைவிட மேலே
நாம திருடனோம்னு ஒத்துகிட்டா காலத்துக்கும் அதை நாம சொமக்கனும்னு சொல்லும்போது எளிய மனிதர்களிடம் மட்டுமே எஞ்சியிருக்கும் மானமும் அறிவும் அழகே
உங்களுக்கு நான் எந்த ஃபீஸும் கொடுக்கலனு சொல்லும் போது சந்த்ரு உன்கிட்ட பாம்பு கடிச்சு வைத்தியத்துக்கு வந்தவர் காசு இல்லைனா மருந்து கொடுக்க மாட்டியானு கேட்க...அதற்கு செங்கனி என் மாமாவ அடிச்சு கொடுமைப்படுத்துன போலீஸ் காரர் வந்தாலும் சிகிச்சை கொடுப்பேன்னு சொல்லும் செங்கனி மாதர்குல கடவுள் அமைப்பு
இந்த கேஸ்ல நியாயம் கிடைச்சு எனக்கு கிடைக்கும் நிம்மதியான தூக்கமே எனக்கு கிடைக்கும் ஊதியம் என்று சொல்லும் சந்த்ரூ பரிசு எதிர்பாரா நேர்மையின் அசல்.

எல்லா தலைவர்களும் மாறுவேடப்போட்டியில் வந்திருக்காங்க அம்பேத்கர் மட்டும் இல்லை என வினவும் சந்த்ரூ

நீ அரசியல் அமைப்பு சட்டத்தையே எழுதும் அறிவாளியா இருந்தாலும் தாழ்த்தப்பட்டவன் தானே என அம்பேத்கரை நினைக்கும் நம் ஒவ்வொருவரின் சாதிமூளையின் நகல் முகம்

இப்படி அடுக்கிகொண்டே போகலாம்.
இந்த படம் நமக்குள் கடத்திப்போகும் உணர்வுகள்நம்மை நிச்சயம் உறங்கவிடாது 

நம்ம நாட்டுல சட்டத்துல ஓட்டை நிறையா இருக்குபாநியாயம்லாம் கிடைக்காது என்று நேர்மை விளம்பரம் செய்வோர்க்கு சட்டத்தில் உள்ள ஓட்டை மட்டுமே தெரிகிறது நீதிமான்களுக்கு சட்டத்தின் மாண்பும் மனித நேயமும் தெரிகிறது

நீதிபதி சந்த்ரூக்களுக்கு அவை தெரிந்திருக்கிறது 

இந்த சட்டங்களை  அண்ணல் அம்பேத்கர் நமக்கு கொடுத்திருக்கும்ப்போதே நம்மை ஏறி மேய்கிறார்கள்

இன்னும் மனுநீதியை, மனுதர்மத்தை சட்டமாக்கியிருந்தால்தனக்கு மேலே உள்ள ஒவ்வொருத்தன்  பின்புறத்தையும் கீழே உள்ளவன் கழுவவிட்டுகிட்டே இருக்கும்படி வச்சிருப்பார்கள்

நாம எல்லாரும் அவா புட்டத்தை கழுவிவிட்டுகிட்டே இருந்திருப்போம்

நல்லவேளை ஆங்காங்கே அம்பேத்கர் சந்த்ரூக்களை பிரசவிச்சுகிட்டே இருக்கிறார்

நன்றி அம்பேத்கர் ஐயா 

















திரைப்படத்தில் ராசாக்கண்ணுவான மணிகண்டன், செங்கேனியான லீமா ஜோஸ், சந்த்ரூவான சூர்யா, மொசக்குட்டி, பிரகாஷ்ராஜ், சோமசுந்தரம் திரையில் வாழ்கிறார்கள். 

தவறவிடாதீர்கள் இத்திரைப்படத்தை
- ரெ

Monday, September 6, 2021

அயோத்திதாசப் பண்டிதர் யார், அவர் ஏன் 
திராவிடன் - தமிழன் என்ற அடையாளத்தை முன்னெடுத்தார்?
 நன்றி - கௌதம சன்னா, ஆனந்த விகடன்

அயோத்திதாசப் பண்டிதர்

'திராவிடன்', 'தமிழன்' என்கிற இரண்டு அரசியல் அடையாளச் சொற்களைத் தமிழகத்துக்கு வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் பண்டிதர் அயோத்திதாசர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

3.9.2021 தமிழக சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். உண்மையிலேயே வரலாற்றுச் சிறப்பு மிக்கதுதான். அயோத்திதாசப் பண்டிதருக்கு வடசென்னையில் ஒரு மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்ததுடன் நில்லாமல் பண்டிதர் முன்வைத்த இரண்டு வரையறைகளை வலியுறுத்திப் பேசினார்.

'தமிழன்', 'திராவிடம்' என்கின்ற சொற்களைத் தவிர்த்து தமிழக அரசியலைப் பேச முடியாது என்றும், இந்த இரண்டு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக மாற்றியவர் பண்டிதர் அயோத்திதாசர்தான் என்கின்ற வரலாற்றுக் குறிப்பையும் சொல்லி, திருக்குறளுக்கு அவரது பாட்டனார் ஆற்றிய பணிகளைப் பற்றியும் விவரித்தார்.
ஸ்டாலின்

இக்காலத்தில் இந்தக் கருத்து மிகப் புதிதாக தோன்றலாம். திராவிடம் என்ற சொல்லைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் ஒருபுறமும் அதை ஆதரிப்பவர்கள் மறுபுறமும் இருக்கின்ற அதே நேரத்தில் தமிழன் என்கிற சொல்லை உயர்த்திப் பிடிப்பவர்கள் இருதரப்பிலும் இருக்கின்றார்கள். திராவிடம் என்கின்ற சொல்லைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் அச்சொல் திராவிட இயக்கத்தின் கொடை என்கின்ற மூட நம்பிக்கையில் இருக்கின்ற காரணத்தினாலும், திராவிட அரசியல் கட்சிகளை எதிர்க்கவேண்டும் என்ற நோக்கத்தினால் வரலாற்று திரிபு செய்து தங்களது எதிர்ப்பை கட்டமைத்துக் கொள்கின்றார்கள்.

அதேநேரத்தில் திராவிடக் கருத்தியலை முன்வைத்தவர்களும் திராவிடம் என்ற சொல்லை அரசியல் சொல்லாடலாகப் பயன்படுத்திய பண்டிதரின் பங்களிப்பையும் நீண்டகாலம் பேசாமலேயே இருந்தார்கள்.

தமிழ்த்தேசியம் பேசுபவர்களுக்கும் திராவிட தேசியம் பேசியவர்களுக்கும் ஒரு மறைக்கப்பட்ட பொருளாகவே பண்டிதர் அயோத்திதாசர் இருந்து வந்தார். இப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த தடைகளை எல்லாம் உடைத்து பண்டிதருக்கு உரிய அரசு அங்கீகாரத்தை வழங்கி இருக்கின்றார்.

'திராவிடன்', 'தமிழன்' என்கிற இரண்டு அரசியல் அடையாளச் சொற்களைத் தமிழகத்துக்கு வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் பண்டிதர் அயோத்திதாசர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்டது. எனினும் திராவிடர் என்ற சொல்லை பண்டிதர் அயோத்திதாசருடன் பணியாற்றிய ரெவரெண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் 1887-ம் ஆண்டு 'திராவிட பாண்டியன்' என்கின்ற இதழ் தொடங்கியதோடு 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பைத் தொடங்கி உருவாக்கியிருந்தார். 'திராவிட பாண்டியன்' இதழில் பண்டிதர் அயோத்திதாசரின் பங்கும் இருந்தது.
அயோத்திதாசர்

அதற்குப் பிறகு 1891-ம் ஆண்டு 'திராவிட மகாஜன சபை'யினைப் அயோத்திதாசர் தொடங்கினார். ஏற்கனவே ரெவரண்ட் ஜான் ரத்தினம் அவர்கள் உருவாக்கிய திராவிட கழகம் சென்னையில் சிறிய அளவில் மட்டுமே இயங்கி மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது. பிறகு அவர் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பின் பணிகள் படிப்படியாக நின்று போனது. இருந்தாலும் மாலை நேரப் பள்ளிகள் என்கிற செயல்பாடு தமிழகம் முழுவதும் பல்வேறு இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்டு விரிந்து பரவின. இருந்தபோதிலும், அயோத்திதாச பண்டிதர் திராவிட மகாஜன சபையை பெரும் இயக்கமாக கட்டமைத்தார். அந்த அமைப்பு அன்றைக்கு உருவான காங்கிரஸ் அமைப்போடு நேரடியாகவே மல்லுக்கு நின்றது. பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு மனுக்கள் மூலமாக கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தங்களை கொடுத்தது.

எனினும் முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டு விடைத்தேட வேண்டியுள்ளது. ஏன் பண்டிதர் அயோத்திதாசர் திராவிடன் என்ற அடையாளத்தை அப்போது முன்னெடுத்தார்?

இந்த அடையாளத்தை முன்னெடுத்த காலத்தில் மூன்று விதமான இயக்கப் போக்குகள் தமிழகத்தில் உருவாகியிருந்தன. ஒன்று காங்கிரஸ் தலைமையில் உருவாகியிருந்த உயர் சாதியினருக்கான ஒருங்கிணைப்பு. இரண்டாவது, ஆதிதிராவிட மகாஜன சபை; இது நேரடியாகவே தலித் மக்களை முன்னிறுத்தி செயல்பட்ட ஓர் அமைப்பு. மூன்றாவது பண்டிதர் அயோத்திதாசர் உருவாக்கிய திராவிட மகாஜன சபை. ஏறக்குறைய சம காலத்தில் உருவான இந்த இயக்கங்களினால் தமிழகம் மட்டுமன்றி இந்திய அரசியலுக்கான திசை போக்கு தீர்மானிக்கப்பட்டது. மண்ணின் மைந்தர்களாக திராவிடர்களும், சமூக அதிகாரத்தைக் கைகொண்டவர்களாகவும் ஆரியப் பண்பாட்டை கடைபிடிப்பவர்களாகவும் அடையாளப்படுத்திக் கொண்ட காங்கிரஸ்காரர்கள்.

இதில் தமிழ்நாட்டுக்கென பொது அடையாளம் ஏதும் முன் வைக்கப்படாத சூழலில்தான் திராவிடர் என்கின்ற அடையாளத்தை அயோத்திதாச பண்டிதர் முன்வைத்தார். அதுமட்டுமின்றி 'பூர்வ தமிழ்க் குடி' என்றும் 'ஆதித்தமிழர்கள்' என்கின்ற அடையாளத்தையும் முன்வைத்து அவற்றை மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போதே முன்வைத்திருந்தார் அயோத்திதாச பண்டிதர்.
அயோத்திதாசப் பண்டிதர்

அதற்குப் பிறகு இடையில் பல்வேறு விதமான அரசியல் சமூக மத நடவடிக்கைகளில் பண்டிதர் அயோத்திதாசர் ஈடுபட்டிருந்தாலும் தமது திராவிடன் - பூர்வ தமிழன் - ஆதிதமிழன் என்கிற அடையாள முன்னெடுப்பை அவர் கைவிடவே இல்லை.

1897 பிற்பகுதியில் தென்னிந்திய பவுத்த சங்கம் அல்லது தென்னிந்திய சாக்கிய சங்கம் என்கின்ற பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை அவர் உருவாக்கியிருந்தார். அவருடன் இலங்கையைச் சேர்ந்த அனகாரிக தர்மபாலா (இவர்தான் இந்தியாவில் மகாபோதி இயக்கத்தை தொடங்கியவர்) சிங்காரவேலர் (தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படுபவர்) பேராசிரியர் லட்சுமி நரசு (கிறித்துவ கல்லூரி பேராசிரியர்) இந்த பெரும் அறிஞர்கள் இணைந்து பௌத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.

அனகாரிக தர்மபாலா வடநாட்டில் பௌத்தத்தை மீட்க வேண்டும் என்றும், பிற மதத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த புத்தர் ஞானம் அடைந்திருந்த புத்தகயாவை மீட்க வேண்டும் என்று கிளப்பிப் போய் பணியாற்றத் தொடங்கினார். சிங்காரவேலர் இடதுசாரியாக மாறிக் கொண்டிருந்தார். இருந்தும் பண்டிதர் மறைந்த 1914 வரை அவருடன் தொடர்பில் இருந்தார். பேராசிரியர் லஷ்மி நரசு பௌத்த பரப்புரையுடன் மட்டும் நின்றார்; அறிவுத் தளத்தில் செயல்பட்டார். ஆனால் பண்டிதர் அயோத்திதாசர் மட்டும்தான் பௌத்த மறுமலர்ச்சியை இயக்கமாக கட்டமைத்து அதைச் சாதித்து காட்டினார். எனவே சுமார் 800 ஆண்டுகள் தமிழகத்தில் மறைந்து போயிருந்த பௌத்த மதத்தை மீட்டெடுத்த பெருமை பண்டிதர் அயோத்திதாசரையே சேரும்.

தமது இயக்கத்துக்கென தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் பௌத்த கோயில்கள் எனப்படும் விகாரைகளை உருவாக்கினார். சென்னை பெரம்பூரில் அதற்கென தலைமை பௌத்த விகாரையினை உருவாக்கினார். பெரம்பூர் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள நெல்வயல் சாலையில் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும் தென்னிந்திய பௌத்த சங்க விகாரத்தை நாம் காணமுடியும்.
ஒரு பைசா தமிழன்

1907-ம் ஆண்டு 'ஒரு பைசா தமிழன்' என்கிற இதழைத் தொடங்கினார் அயோத்திதாசர். இந்த இதழ் ஓராண்டு காலம் நடைபெற்றது. ஒரு பைசா தமிழன் என்றால் ஒரு பைசாவுக்கு கூட மதிப்பதில்லாத தமிழன் என்று பொருள். அந்த அளவுக்கு அன்றைக்கு தமிழன் என்றால் மரியாதை குறைவு என்ற சூழல். அந்த சிந்தனையை மாற்றி, ஒரு பைசாவுக்குக் கூட மதிப்பில்லாத தமிழனாக கருதப்படுகிறவன் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன் தான் என்கின்ற பொருள்பட 'ஒரு பைசா தமிழன்' என்று பெயர் வைத்திருந்தார். எனவே தமிழன் என்கின்ற சொல்லாடலைத் தமிழ்ச் சமூகம் அன்றைக்கு எவ்வளவு மோசமாக நினைத்துக் கொண்டிருந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு பைசா தமிழன் என்கின்ற இந்தச் சொல்லாடல் உருவாக்கப்படுவதற்கு முன்பும் சரி பின்பும் சரி, தமிழன் என்ற அடையாளத்தைத் தமிழ்பேசும் சமூகங்கள் அன்றைக்கு விரும்பவே இல்லை. ஓர் ஒற்றை பொது அடையாளத்துக்குள் வந்தால் தாங்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கக்கூடிய சாதிபேத அடையாளங்களை முற்றிலும் இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தினால் தமிழன் என்கிற அடையாளத்துக்குள் தமிழர்கள் வரத் தயங்கினார்கள். அதைக் குத்திக்காட்டும் விதமாகத்தான் அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ஒரு பைசா தமிழன் என்கின்ற பெயரை வைத்து இதழைத் தொடங்கி நடத்தினார். அவர் எதிர்பார்த்தது போலவே பல்வேறு தளங்களிலிருந்து கடிதங்கள் அவருக்கு வந்தன. ஒரு பைசா தமிழன் என்கின்ற சொல் சரியானது அல்ல, அதை நீங்கள் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் வாசகர்கள்.

அதன்படி வாசகர்களின் கோரிக்கையை ஏற்று பத்திரிகையின் பெயரை 1908-ம் ஆண்டு 'தமிழன்' என மாற்றி அமைத்தார். இந்திய வரலாற்றில் குறிப்பாக 1920-ம் நூற்றாண்டுகளில் எந்தப் பெயரை சொல்ல மக்கள் தயங்கினார்களோ அதே பெயரை வைக்க வேண்டும் என அந்த மக்களே கோரிக்கை வைக்கக்கூடிய அளவுக்குக் கொண்டு வந்ததுதான் அயோத்திதாச பண்டிதரின் மிகப்பெரிய சாதனை. தமிழன் என்கின்ற சமூக அரசியல் அடையாளத்தை அயோத்திதாச பண்டிதர் நிலைநாட்டி விட்டாலும், யாரெல்லாம் தமிழராக இருக்க முடியும் என்கின்ற வரையறையையும் அவர் அதில் சேர்த்து வைத்திருந்தார். தமிழன் என்றால் “சாதி பேதமற்ற திராவிடனே தமிழன்” என்கின்ற வரையறையை அவர் வைத்திருந்தார்.
அயோத்திதாசப் பண்டிதர்

அவரைப் பொறுத்தவரையில் திராவிடம் என்பது இணைய ரீதியான பெயர் அல்ல; பௌத்த அடிப்படையில் பொருள் புரிந்து கொண்ட திராவிடம் என்கின்ற சொல்லின் தொடர்ச்சியாகவே அதைப் பார்த்தார். சாதி பேதமற்ற திராவிடர்கள் தான் தமிழர்கள் என்பது அயோத்திதாச பண்டிதரின் வரையறுப்பு என்றால், தமிழர்களின் ஆதி அடையாளம் சாதி பேதமற்ற நிலை அவர் காலத்திய சாதிய அடையாளங்களோடு நேரடியாக மோதியது. சாதி எவ்வளவு புரையோடிவிட்டது என்றால், தமிழன் என்ற அடையாளத்தை மறுக்கக் கூடிய அளவிற்கு சாதி உணர்வுகள் கூர்மை பெற்று இருந்தனர் என்பதற்கும் இதுவே தெளிவான சான்று. ஆனால் தமது முயற்சியில் அவர் தளரவில்லை. தனது கருத்தியல் அடித்தளத்தைத் தமிழன் இதழின் வாயிலாக மிக விரிவாக அவர் உருவாக்கினார். விளைவாக பிற்காலத்தில் தமிழன் மற்றும் திராவிடம் என்கிற இரண்டு சொற்களும் அரசியல் அரங்கில் முதன்மை இடத்தைப் பிடித்தன. ஆனால் அவையிரண்டும் தனித்தனி பொருளில் புரிந்து கொள்ளப்பட்டு அவை பெரும் அரசியல் இயக்கமாகத் தமிழகத்தின் அரசியல் அடித்தளத்தை நிர்ணயிக்கும் இயக்கங்களாக உருமாறியிருந்தன.

இன்று தமிழ் தேசியம் பேசுபவர்கள் திராவிடம் என்ற சொல்லைக் கடுமையாக எதிர்க்கின்ற அதேநேரத்தில் மிக லாவகமாகப் பண்டிதர் அயோத்திதாசர் உருவாக்கிய திராவிடர் குறித்த வரையறையை மறைத்து விடுவார்கள். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கூட திராவிடம் என்ற சொல் குறித்து பண்டிதர் முன்வைத்த வரப்புகளில் அதிகமாக பேசுவதைத் தவிர்த்து விடுவார்கள். இரண்டு போக்குகளில் இருந்து மீண்டு வருவது என்பது பண்டிதருக்கு எளிதாகப் படவில்லை. ஆனால் தொடர்ந்த விவாதங்களின் மூலமும் கருத்தியல் பரிமாற்றங்களின் மூலமும் வரலாற்று ஆய்வுகளின் மூலமும் இன்றைக்குப் பண்டிதர் தனக்கான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றார்.
அயோத்திதாசப் பண்டிதர்

ராயப்பேட்டையில் மருந்து வியாபாரியாகவும், மருத்துவராகவும் வேலையார்த்து வந்த கந்தசாமியின் மகனாக, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தெளிந்து ஓடிக்கொண்டிருந்த கூவம் ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த மக்கிமாநகர் அல்லது மக்கீஸ் தோட்டம் என்கிற இடத்தில் 1845ஆம் ஆண்டு மே 20ம் நாள் பிறந்தவர் காத்தவராயன். வள்ளக்காலத்தி வீ.அயோத்திதாசப்பண்டிதர் என்பவரிடம் வடசென்னை காசிமாநகர் என்று அழைக்கப்பட்ட காசிமேட்டில் கல்வி பயின்றார். மருத்துவம், இலக்கியம், இலக்கணம், சமஸ்கிருதம், சோதிடம் உள்ளிட்ட பாடங்களில் தேர்ச்சிப் பெற்றார். குருவின் மீதிருந்த பக்தியின் காரணமாக தனது பெயரை க.அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார்.

பாட்டனாருடன் நீலகிரி போனபோது அங்கே தோடர் பழங்குடி பெண்மணி ஒருவரைத் திருமணம் செய்துக் கொண்டார். ஒரு குழந்தை பிறந்தது. பிறவியேலேயே கண்பார்வையற்ற குழந்தை விரைவில் இறந்து போனது. பிறகு மனைவியும் இறந்துப் போனார். எனவே தமிழ்நாட்டைவிட்டு கிளம்பி பர்மாவில் போய் பத்தாண்டுகள் அலைந்து திரிந்தார். பின்பு நாடு திரும்பி நீலகிரியில் அத்வைதானந்த சபை என்னும் அத்வைத மடத்தினை நிறுவினார். அதன் மூலம் சித்த மருத்தவ பரப்புரையும் மேற்கொண்டிருந்தார். கொஞ்சகாலம் கழித்து ரெட்டமலை சீனிவாசனாரின் தமக்கையாரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் மெட்ராசுக்கே திரும்பினார். 1914 மே மாதம் 5-ம் நாள் மறையும் வரை ராயபேட்டையிலே வசித்து வந்தார்.
அயோத்திதாசப் பண்டிதர்

தென்னிந்திய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தையென வர்ணிக்கப்படும் பண்டிதர் அயோத்திதாசர் பிறந்து 175 ஆண்டுகள் ஆகப்போகின்றன. அவர் மறைந்து 107 ஆண்டுகள் ஆகிறது. இத்தனைக் காலம் கடந்து தமிழகத்தின் அரசியல் வரலாற்றின் அடையாள அடிப்படையை வகுத்துக் கொடுத்த அயோத்திதாச பண்டிதருக்குக் கிடைத்திருக்கின்ற அங்கீகாரத்தின் தாமதம் நெடும் போராட்டத்திற்குப் பிறகு நிகழ்ந்திருக்கிறது.

பகவன் புத்தரை குறித்து பண்டிதர் எழுதிய ஒரு சிறு நூலுக்கு அவர் வைத்த தலைப்பு 'இரவு பகலற்ற ஒளி' என்பதாகும். அந்தத் தலைப்பையே அயோத்திதாசரின் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அணியாகச் சேர்த்திருந்தார். நிச்சயம் அயோத்திதாசர் அவர்களுடைய பணிகள் இரவு பகலற்ற ஒளி போல ஒளிரும் என நம்புவோம்.