Wednesday, September 9, 2020















50 வருசமா திராவிடம் தமிழுக்கு என்ன செஞ்சதுனு தெரியனும். அதானே?

1.எழுத்துச் சீர் திருத்தம்
2.இலக்கிய பரவல்
3.புதுக்கவிதை புரட்சி
4.நாடகத் தமிழ் வளர்ச்சி
5.பரவலாக்கப்பட்ட பழந்தமிழர் இலக்கியம்
6.இந்தியை எதிர்த்து தமிழின் ஆளுமையை நிலைநாட்டல்
7.உலகத் தமிழ் மாநாடுகள்
8.புதுச்சொல் அறிமுகம்
9.செம்மொழி அங்கீகாரம்
10.தமிழிலே பெயர் பலகை கட்டாயம்
11.வள்ளுவர் கோட்டம்
12.வள்ளுவர் சிலை
13.சிலப்பதிகார அருங்காட்சியகம்(பூம்புகார்)
14.தமிழ் எண்முறை உள்ளீடு வளர்ச்சி
15.கணினி எழுத்துரு அறிமுகம்
16.கீழடி அகழாய்வு முடிவுகளை அறிவித்தல்
17.செம்மொழிப் பூங்கா
18.இரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழியை இடம்பெற வைத்தல்
19.தேசிய தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த சட்டப்போராட்டம்
20.தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு அரசு முறை விருதுகள்
21.மாநிலப் பிரச்சனைகளை தீர்த்து நட்புறவு மேம்பட பெங்களூரூவில்
திருவள்ளுவர் சிலை நிறுவுதல்
22.அலி போன்ற பெயர்களை ஒழித்து திருநங்கை சொல் புகுத்தல்
23.ஊனமுற்றோர் சொல்லுக்கு பதிலாக மாற்றுத்திறனாளிகள் பெயர் அளித்தல்
24.விதவை என்ற பெயருக்கு பதிலாக கைம்பெண் என மாற்றுதல்
25.தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் துவக்கம்
26.ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கைக்கு நிதி அளித்தல்
27.பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயம்
28.இன்ஜினியரிங் படிப்பில் தமிழ்வழியை அறிமுகம் செய்தல்
29.தமிழ்வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு
30.செம்மொழி தமிழாய்வு நிறுவனம் துவக்கம்
31.உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
32.கோயில்களில் தமிழ்மொழியில் அர்ச்சனை
33.தமிழ் வளர்ச்சிக்கு தனி அமைச்சகம் அமைத்தல்
34.தமிழ் ஓலைச்சுவடிகளை கணினிமயமாக்கல்
35.டால்மியாபுரம் என மாற இருந்த பெயரை கல்லக்குடி என்ற தமிழ் பெயரையே போராடி நிலைநாட்டியது
36.மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது
37.மதராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியது
38.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் துவக்கப்பட்டது
39.தொல்காப்பிய பூங்க திறப்பு
40.வாகன பதிவெண்களை தமிழ் மொழில் எழுத சட்ட அங்கீகாரம்
41.இளம்அறிவியல் படிப்பபில் பயிற்று மொழி தமிழ்
42.தமிழ் தாய் கோயில் கட்டப்பட்டது
43.பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் துவக்கம்
44.ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்டல்
45.கிறிஸ்து ஆண்டுக்கு பதிலாக திருவள்ளுவர் ஆண்டை அரசிதழில் வெளியிடல்
46.கொரோணா காலத்தில் wfh, இணைய வகுப்பை போல 1999ஆம் ஆண்டு உலகத்
தமிழ் இணைய மாநாடு
47.பேருந்துகளில் திருக்குறள் கட்டாயம்
48.பேரவையின் துவக்கத்தில் அவைத்தலைவரின் திருக்குறள் உரை
49.குறிஞ்சி நில மரபணு பூங்கா துவக்கம்
50.மொழிப்போர் தியாகிகளுக்கு ஓய்வூதியம்
51. இந்தியாவில் முதல் முறையாக கணினி அறிவியல் பாடம் அறிமுகம்.அதுவும்
தமிழில்!!

இன்னும் பல சாதனைகள்

ஐம்பது ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்கு செய்த ஐம்பத்தி ஒன்னு காரியங்களை அடுக்கிவிட்டேன். தமிழை வஞ்சிக்காது வாழ வைத்த திராவிடத்தை போல வேறு இயக்கம் தான் உலகத்தில் உண்டோ
நான் மேல சொன்னதுல ஒன்னாவது பாஜக தமிழ் மொழிக்கு செஞ்சு இருக்குமா?

ஆம்.தமிழ் திராவிடத்தின் குடும்ப சொத்து.

 












திராவிடம் என்ன செய்தது ?

இட ஒதுக்கீட்டில்
படித்து விட்டு
திராவிட இயக்கம்
என்ன செய்தது என்பர்
மதக் கலவரமற்ற
சூழலில் வாழ்ந்து கொண்டு
பெரியார் மண்ணா என
ஏளனம் செய்வர்
உடல் நலிவுற்றால்
கோவில் செல்லாது
மருத்துவமனை சென்று விட்டு
நாத்திகத்தை நக்கல் செய்வர்
அடிப்படை கட்டமைப்பில்
உயர்ந்து நிற்கும் தமிழகத்தை
திராவிடத்தால் வீழ்ந்ததாய்
வீண் பழி சுமத்துவர்
இந்தி பேசும்
மாநிலங்களை விட
தமிழ்நாடு வளர்ந்திருந்தாலும்
இந்தி புகழ் பாடுவர்
தன் பெயருக்குப் பின்
ஜாதிப்பெயர் போட்டுக் கொள்ள
சங்கடப் பட்டுக் கொண்டே
பெரியாரை நாயக்கர் என்பர்
தன் தாத்தனுக்கும் பாட்டிக்கும்
ஏன் கல்வி மறுக்கப்பட்டது
என கேள்வி கேட்காமல்
கேரளாவில் கர்நாடகாவில்
யாரும் படிக்கவில்லையா என்பர்
ஆடு மேய்த்தவரின்
பிள்ளைகளை
IPS ஆக்கியது தான்
திராவிட இயக்கத்தின் சாதனை
IPS-களை
ஆடு மேய்க்க
அனுப்பியது தான்
ஆரியத்தின் சாதனை ...

- பாசு ஓவியச்செல்வன்