Saturday, September 20, 2025

வாசித்ததில் நேசித்தது 



"அப்பனை திட்டாத பிள்ளைகள் உண்டா என்ன தமிழகத்தில் ...?

1. பள்ளிக்கு பஸ் பாஸில் சென்று படித்தவன் கலைஞரை திட்டுவான்.
2.பள்ளியில் முட்டை வாங்கி சாப்பிட்டவன் கலைஞரை திட்டுவான்.
3. அரசு பஸ் ஓட்டுநர்கள் பாதிபேர் கலைஞரை திட்டுவார்கள்.
4.இட ஒதுக்கீட்டில் வேலை பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
5. பம்பு செட்டு வைத்திருக்கும் விவசாயி கலைஞரை திட்டுவான்.
6. சென்னை மெட்ரோவில் போறவன் கலைஞரை திட்டுவான்.
7. கூரை வீடு இல்லாத கிராமத்தில் வாழ்ந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
8. வீட்டில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தியன் கலைஞரை திட்டுவான்.
9. தமிழ்தாய் வாழ்த்து பாடுபவன் கலைஞரை திட்டுவான்.
10. அரசு பள்ளியில் கனிணி பயின்றவன் கலைஞரை திட்டுவான்.
11. IT-டைடல் பார்க்கில் வேலை பார்ப்பவன் கலைஞரை திட்டுவான்.
12. நுழைவு தேர்வு இல்லாமல் BE,Doctor போன்ற பட்டம் பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
13. சிமென்ட் தெருவில் நடப்பவன் கலைஞரை திட்டுவான்.
14. காவல் ஆனையத்தில் இருந்துக்கொண்டு கலைஞரை திட்டுவான்.
15. அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் பயின்று சட்டம் பயின்றவன் கலைஞரை திட்டுவான்..
16. அறுவடை செய்து கமிட்டியில் விற்பனை செய்பவன் கலைஞரை திட்டுவான்.
17. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழால் பயன்பெற்றவன் கலைஞரை திட்டுவான்.
18. 1974 க்கு பிறகு இட ஒதுக்கீட்டில் அரசு வேலையை வாங்கி மூன்று தலைமுறைகளாக அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
19. 1989 க்கு பிறகு மத்திய அரசு பணிகளில் பணியில் அமர்ந்து அதன் மூலம் தேச பக்தனாக மாறியவன் கலைஞரே திட்டுவான்
20. உழவர் சந்தை என்கிற ஒப்பற்ற திட்டத்தை கொடுத்தவர் அனுபவித்துக் கொண்டிருப்பவர்
கலைஞரை திட்டுவார்
21. இலவச மின்சாரத்தால் ஆயிரங்களிலும் லட்சங்களிலும் மின்சார கட்டணத்தை சேமித்தவர்கள் கலைஞரை திட்டுவார்கள்
22.1974 இருந்து எல்லா கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளையும் பொது விநியோக முறையையும் அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
23. 55 வருடங்களுக்கு முன்பே வீட்டுக்கு குடிநீர் வசதியை பெற்று அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்.
24. இந்தியாவிலேயே அற்புதமான சாலை வசதிகளை 60 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருப்பவன் கலைஞரை திட்டுவான்
25. ஜாதி மத சமூக வித்தியாசம் இல்லாமல் முதல் தலைமுறையில் பட்டதாரியானா
கலைஞர் கருணாநிதியை பிடிக்காது
என்ன செய்வது இவை அனைத்தும் #கலைஞரின் ஆளுமையால் தான் கிடைத்தது என்று தெரியாமலே திட்டுவான். 🖤❤️