Wednesday, October 5, 2011

செய்தியும் சிந்தனையும்

நான் இந்தியன்



நான் சமீபத்தில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது அதில் என்னை பாதித்த
சில பத்திகளை இங்கே பதித்துள்ளேன் நீங்களும் படிங்க..


இந்திய மக்களைப் படிப்பது அதி பயங்கரமான அனுபவங்களைத் தருகிறது. ஒரு பக்கம் பிளாட்ஃபார்மில் சாமி கும்பிட்டு, பிள்ளை பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் குடும்பம் குடும்பமாக பக்கெட் சிக்கன் வாங்கிக்கொண்டு இருக் கிறார்கள். ஓட்டுக்குக் காசு வாங்குகிறார் கள். இலவசத்துக்கு முட்டி மோதுகிறார் கள். ஈழப் பிரச்னை உச்சத்தில் இருக்கும் போது வைகோவைத் தோற்கடிக்கிறார்கள். வடிவேலுவில் இருந்து குண்டு ஆர்த்தி வரை யார் வந்தாலும் கூட்டம் காட்டு கிறார்கள். கருத்துக் கணிப்புகளை அடித்து நொறுக்கி, வாக்குகளை மாத்திக் குத்து கிறார்கள். அன்பே சிவத்தையும் ஆரண்ய காண்டத்தையும் காலி பண்ணுகிறார்கள். 'திருப்பாச்சி’யை ஹிட்டாக்குகிறார்கள். அதே டெம்போவில் 'திருப்பதி’ எடுத்தால், மொட்டை அடிக்கிறார்கள். ஈழப் பிரச்னைக்கு 'உச்சு’ கொட்டிக்கொண்டே ஐ.பி.எல். பார்க்கிறார்கள். அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு மெழுகுவத்தி ஏற்றிவிட்டு, ஆர்.டி.ஓ. ஆபீஸில் லஞ்சம் கொடுக்கிறார்கள். குழந்தையை ப்ரீ.கே.ஜி. சேர்க்க ஒரு லட்சம் டொனேஷன்கொடுக் கிறார்கள். உணவகங்களில் மேஜை துடைக்கும் சிறார்களைத் திட்டுகிறார்கள். விஜய்க்கு எதிராக எஸ்.எம்.எஸ். இயக்கம் கட்டுகிறார்கள். 'மக்கள் இயக்கம்’ மாநாடு போட்டால், ரவுண்ட் கட்டுகிறார்கள். மதுக் கடைகளிலும் கூட்டம். தியான மையங்களிலும் கூட்டம். துணிக் கடை, நகைக் கடை எங்கெங்கும் கூட்டம். ஆனால், எப்போது யாரைக் கேட்டாலும், ''ஒரே பணக் கஷ்டம் பாஸ்'' என்கிறார்கள். நேர்மை, நியாயம், கோபம், அன்பு பேசும் எழுத்துக்கும் சினிமாவுக்கும் பேச்சுக்கும் கொந்தளிக்கிறார்கள், அழுகிறார்கள். எதிர் ஃப்ளாட்டில் நடக்கும் வெட்டுக்குத்தை மொபைல் பேசியபடி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருவில் ஒரு சத்தம் கேட்டால், கதவைச் சாத்திக்கொள்கிறார்கள். திருட்டு வி.சி.டி. பார்க்கிறார்கள். நித்யானந்தா சி.டி-க்கு அலைகிறார்கள். யாருக்கும் எதுவும் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் சேர்த்த காசை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் அழுகிறார்கள். சமூகத்தின் பெரும் அவலங்களையும் அபத்தங்களை யும் நொடியில் கடந்து சென்றுவிடுகிறார் கள்!




ஒரு முறை நண்பனை பஸ் ஏற்றிவிட கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போயிருந்தேன். அது பண்டிகை நாள் என்பதால் கூட்டம் கும்மியடித்தது. 200 ரூபாய் டிக்கெட்டுகள் 1,000 ரூபாய்க்கும் கிடைக்கவில்லை. திடுதிப்பென்று ஒரு பிளாட்ஃபார்மில் முண்டியடித்தது கூட்டம். ஒரு வயசுதான் இருக்கும்... ஒரு குழந்தையை யாரோ நடு பஸ் ஸ்டாண்டில் விட்டுப் போயிருக்கிறார்கள். ஒரு தூண் ஓரமாக அது கிடந்து அலறியது.



''ரொம்ப நேரமா அது அங்கதான் கெடக்குது. நானும் யாராவது வருவாங்கனு பாக்கறேன்... காணோம்'' என்கிறார் பக்கத்துக் கடைக்காரர். எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க... ஒரு பெண்மணி மட்டும் சட்டென்று குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டு, ''ச்சூ... ச்சூம்மா... அம்மாவைக் காணமா... வந்துருவாங்கடா குட்டி'' எனத் தட்டிக்கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் போலீஸ் வந்தது. மைக்கில் குழந்தையைப் பற்றி அறிவிப்பு கொடுத்தார்கள். அரை மணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஏதோ ஒரு நொடியில், அந்தப் பெண்மணி சட்டென்று குழந்தையை முந்திக்குள் வைத்துப் பால் கொடுக்க ஆரம்பித்தார். கூட்டத்தைக்கூடப் பார்க்கவில்லை. எனக்கு அந்தக் காட்சியைப் பார்த்த கணம், உடல் சிலிர்த்து அடங்கியது. கொஞ்ச நேரத்தில் கூட்டம் கலைந்து ஓடியது. அவரவர்க்கான பேருந்துகளில், அவரவர்க்கான ஊர்க ளுக்கு, அவரவர் போய்ச் சேர்வதுதான் முக்கியம் அல்லவா? போலீஸோடு குழந்தையை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணி சென்றார். எனக்கு அந்தப் பேருந்து நிலையமே நம் தேசத்தைப் போலத் தோன்றுகிறது

Friday, July 1, 2011


எனக்கு சிறு பிராயம் முதலே
ஒரு தேடல் உண்டு

வருடம் ஒரு முறை
மரணம் எனக்கு ஒரு அறிவுறுத்தலை
கொடுத்து கொண்டே இருக்கிறது.

எங்கிருந்து வருகிறது இந்த தகவலும்
தகவல் சார்ந்த நிகழ்வுகளும்?

எனக்குள் ஒரு கூக்குரல்.
வாடா தம்பி!
என்னென்னவோ கற்றுகொள்கிறாய்
என்னைப்படிடா என்று.
எங்கு கற்றுத்தருகிறார்கள்
நல்ல மரணம்?
அல்லது
எவன் கத்து தர்றான் நல்ல சாவு?

இன்று வரை மனதுக்குள்
அந்த கேள்விகயிறு எங்கு சென்றாலும்
தொடர்ந்து வருகிறது
அது ஒரு சிக்கு கயிறு. 

யார் தான் இந்த மரணத்தை
விரும்பி படிக்கிறார்கள்?
படித்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள்.

காலன் வந்து காலடியில் நிற்கும் போது
நிம்மதியாக போனவர்கள் எத்தனை பேர்?

என் வாழ்க்கையை நான் நிம்மதியாக,
மகிழ்ச்சியாக களித்தேன்,கழித்தேன்
அல்லது
என் வாழ்நாள் களி தேன் என்று.
விரும்பி விடை கொடுத்தவர் எவர்?


எனக்கு மரணம் கற்று கொடு
நான் தயார் என்று காலனின் பாடத்தை 
காதருகில் கேட்டவர்கள் எத்தனை பேர்  

அது போல் கேட்கவும் கற்கவும் தான் ஆசை
காலா என்னை கூப்பிட்டு செல்லும் முன்
எனக்கு மரணம் கற்றுக் கொடு...
நான் என்ன வாழ்க்கை வாழ்ந்தாலும்
முழு மனதோடு விடை கொடுத்து
மரணப்பள்ளியில் விசும்பலில்லா
சேர்க்கை கிடைக்க வேண்டும்.
விண்ணப்ப படிவம் எங்கு கிடைக்கும்
முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்
இயற்கை செல்வங்களே
இயற்கை கடவுள்களே!

Saturday, April 30, 2011

நிகழ்வும் தகவலும்


உயிரினங்கள் சிலவற்றினைப் பற்றிய சுவாரஷ்சியமான தகவல்கள்………


  • ஒக்டோபஸ்சின் மூளையில் சராசரியாக 300பில்லியன் நியூரோன்கள் உள்ளன.
  • நத்தைகள் 15 வருடங்களுக்கும் அதிகமாக வாழக்கூடியவையாகும்.



  •  ராஜ நாகத்தின் விஷம் மிகவும் அபாயகரமானதாகும். ராஜ நாகத்தின், 1கிராம் விஷமானது 150 பேரைக் கொல்லக்கூடியதாகும்.
  • சுண்டெலிகளின் இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 650 தடவைகளாகும்.

  • மின்மினிப்பூச்சிகளில், ஆண் மின்மினிப்பூச்சிகளே பறக்ககூடியவையாகும்.
  • பூனைக்குட்டிகள் பிறக்கும்போது குருடாகவும், செவிடாகவும் காணப்படும்.
  • உலகில் மிகச்சிறிய கிளி இனமாக பிக்மி (Pygmy) கிளிகள் விளங்குகின்றன. இந்த இன கிளிகளின் சராசரி நீளம் 8சென்ரி மீற்றர்கள் ஆகும்.

  • இறைச்சியினை உண்ணுகின்ற ஒரே கிளி இனமாக அவுஸ்திரேலியாவின் கியா இன கிளிகள் விளங்குகின்றன.
  • குதிரைகள், எலிகள் ஆகியனவற்றினால் வாந்தியெடுக்க முடியாது. இதன் காரணத்தினால்தான் எலிகளுக்கு விஷம் வைத்து அவற்றின் தொல்லையினை கட்டுப்படுத்த முடிகின்றது.

  • உலகில் மிகப்பலமான ஒலியினை(188 டெசிபல்கள்) வெளிப்படுத்துகின்ற உயிரினம் நீலத்திமிங்கிலங்களாகும். இவற்றின் ஒலியினை 800கிலோமீற்றருக்கும் அப்பாலும் உணரமுடியுமாம்
வாசித்ததில்  நேசித்தது




டேவிட் டி ஏன்ஜலோ என்ற எழுத்தாளர் டேட்டிங் பழக்கமுள்ள ஆண்களுக்கான சில குறிப்புக்களை வெளியிட்டுள்ளார். அதில் பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விடயங்கள் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார்.


01. பெண்களிடம் எப்போதுமே முத்தம் ஒன்றைக் கேட்காதீர்கள். முத்தம் கேட்கும் ஆண்களை சிறுவர்களாகவே பெண்கள் நோக்குகின்றனர். இதற்கு அவர்கள் சம்மதித்தாலும் கூட உள்ளூர நல்ல அபிப்பிராயம் ஏற்படாது.

02. உன்னை எங்காவது வெளியில் அழைத்துப் போகவா என்று ஒரு போதும் பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

03. உங்களுடைய வாகனம் பற்றி அல்லது நீங்கள் வாழும் வீடு பற்றி ஒரு போதும் ஜம்பமாகப் பேச வேண்டாம். ஏனெனில் அவர்களை இலகுவாகக் கவர நீங்கள் எடுக்கும் முயற்சியாக அவர்கள் அதைக் கருதக் கூடும்.

04. இரவில் என்ன செய்யப்போகிறாய் என்று பெண்களைக் கேட்க வேண்டாம். ஏனெனில் அதற்கான திட்டம் ஆணிடம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பு.

05. என்னை நீ விரும்புகின்றாயா என்றும் பெண்களைக் கேட்டு விடாதீர்கள். இந்த ஒரு கேள்வி ஒட்டுமொத்தக் கதையையே மாற்றிவிடக் கூடும்.

06. நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு பதில் கிடைக்காவிட்டால் அதைப் பற்றியும் பேசாதீர்கள். பதில் வராதது உங்களுக்கு கவலையளிப்பதாக அவர்கள் எண்ணக்கூடும்.

07. நீ இதற்கு முன் எத்தனை பேருடன் உறங்கியிருக்கின்றாய் என்றும் கேட்க வேண்டாம். இது அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக அவர்கள் உணரக் கூடும்.

08. ஒரு பெண்ணைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே அடுத்த சந்திப்புக்கான திகதியைக் கேட்காதீர்கள். உங்கள் மீதுள்ள ஆர்வம் அதனால் இழக்கப்படக்கூடும்.

09. தொலைபேசியில் உரையாடும் போது அவதானமாகப் பேசுங்கள், அடுத்தக் கட்டத்தை தொலைபேசி மூலமே திட்டமிட முயற்சிக்க வேண்டாம்.

10. ஒரு பெண்ணின் ஆண் நண்பர்கள் பற்றி அவளிடம் தவறாகப் பேச வேண்டாம். ஏனெனில் உங்களைப் பற்றி மிகத் தவறான எண்ணங்களை இது விரைவாக ஏற்படுத்தி விடும்.


நான் இன்னா நெனக்கிரேன்னா

பெண்கள் சொல்றதெல்லாம் தட்டாம முகம் சுளிக்காம மானம் ஈனம் ரோஷம் பாக்காம செய்ற / இருக்குற காதலன் நல்ல காதலன் அதே போல் செய்ற / இருக்குற கணவன் நல்ல கணவன்.

Thursday, April 21, 2011

தழும்பு





பேகம்பூர் ஸ்டாப்பிங்லாம்  இறங்குங்கப்பா..... பாக்யராஜ் அண்ணன் குரல் கேட்டது...நான் என் அம்மாவின் மடியில் தலை வைத்து படுத்திருந்தேன். அம்மா அப்பொழுதுதான் தலைக்கு ஊத்தி முடியை சிக்குநீக்கியால் உருவி விட்டு கொண்டிருந்தார்கள். எனக்கு எப்போதும் என் அம்மாவின் மடியில் படுத்து அல்லது உக்கார்ந்து இருப்பது மிக மிக பிடிக்கும் ஏனென்றால் அது ஒரு தொட்டில் போலவே தோன்றும். நான் விருட்டென்று எழுந்து கொண்டேன். வெளியே வந்து பார்த்தேன். என் அண்ணன் கண்டக்டர் ஆகவும் பாக்யராஜ் அண்ணன் டிரைவர் ஆகவும். முன்னும் பின்னும் இடைவெளி விட்டு இடுப்பில் கயிறு சுற்றி பேரூந்து விளையாட்டு விளையாடுவது கண்டேன். பயணிகளை ஒவ்வொரு தெருவுக்கும் சென்று கட்டாயபடுத்தி இழுத்து வந்திருப்பார்கள் போல. பயணிகள் முகத்தில் கோவமும் பயமும். ஏனென்றால் என் அண்ணன் நண்பர்கள் ஒரு பெரிய பட்டாளம். டிரைவர் பாக்யராஜின் தொல்லை தாங்கமுடிய வில்லை. அவர்களுக்கு பிடித்த வீட்டின் வாசலை ஒரு ஸ்டாப்பிங் அல்லது ஒரு பெரிய ஊராகவே நினைத்து பயணிகளுக்கு எச்சரிக்கை விட்டு கொண்டிருந்தார். பஸ் கொஞ்ச நேரந்தான் நிக்கும் இறங்குரவுங்க இறங்கிக்கங்க...ஓவரா பஸ் போலவே பீல் பண்ணி கொண்டிருந்தார். எங்க அண்ணன் டிக்கெட் கிழித்து ஒவ்வொருவர் கையிலும் கொடுத்து வைத்திருந்தார். இதுல ஒரு ச்செக்கர் வேற வருவாரு அடுத்த தெருவில். இந்த டிக்கெட் எல்லாம் நாங்க பள்ளிக்கு செல்லும் போது பஸ்ல கொடுப்பதை சேகரித்து வைத்தவை. நான் என் அண்ணனிடம் நானும் வர்ரேன்னு கேட்டேன்..உடனே டிரைவர் ....டேய் நீயெல்லாம் ஸ்பீடா எங்க கூட ஓட முடியாது பேசாம இருடான்னு  சொன்னாரு. என் அண்ணன் வேற போடா வீட்ல உக்காரு உன்னால ஓட முடியாதுன்னு சொல்லும்போதே. நான் வீட்டுக்குள்ள  போய் என் அம்மாவை ரெக்கமண்டஷன் க்கு கூட்டிட்டு வந்துட்டேன்...எங்க அம்மா வேண்டாஞ்சாமி பேசாம் இங்க இருடா அவுங்க கூட உன்னால் வேகமா ஓட முடியாதுடான்னாங்க. அப்பறம் என் தொல்ல தாங்காம .. தம்பி இவனையும் சேத்துக்கங்கப்பா....கீழ விழுந்துராம ஓடு சாமின்னு அனுப்பி வச்சாங்க. எங்கண்ணன் மொரச்சுக்கிட்டே ஏறிதொலடா ன்னு நேர் கோட்டுல கயிருக்குள்ள நின்ன பயணிகளோடு நானும் குனிஞ்சு உள்ள போய்ட்டேன். டிரைவருக்கு நான் ஏறினது பிடிக்கல. பல ஸ்டாப்ல கழட்டிவிட பாத்தாங்க. நான் ..ம்ஹூம் நகராப்ள தெரியல. உடனே டிரைவர் எல்லாரும் கம்பிய பிடிச்சுக்கங்க பஸ் பறககபோகுது டாப் கியர் போட்டு ஓட்ட ஆரம்பிக்க. பயணிகள் வேகமா ஓட ஆரம்பிக்க .....என்னால வேகமா ஓட முடியல ...உடனே பஸ்ல இருந்து குதிக்கும் எண்ணத்தில் ஒரு காலை தூக்கி கயிறுக்கு மேலே தூக்கி தாவி தப்பிக்க முயற்சி பண்ண . கயிறு என் பின் முழங்காலை உரசி வேகமா முன்னால் செல்ல கயிறு என் காலை அறுக்க ஆரம்பிக்க கத்த ஆரம்பித்து விட்டேன். டிரைவர் உடனே சடன் பிரேக் போடா பயணிகள் என் மேல் விழ. அலுத்து கொண்டே டிரைவர் மற்றும் நடத்துனரால்  வெளியேற்றப்பட்டேன். உடனே. காலை விந்தி விந்தி இழுத்துக்கொண்டே வீட்டுக்கு  வந்தேன் அம்மா நீ போகும் போதே தெரியும்டா இப்டி நடக்கும்னு சரி உக்காரு ன்னு ஏதோ ஒரு களிம்பு தடவினார்கள்..... ஒரு வாரமா அந்த புண்ணை ஆற விடாம பாத்துக்கிட்டேன்.  எனக்கு மனசுல ஒரு வெறி வந்துச்சி அடுத்த வாரம் நான் கயிறு ரெடி பண்ணி கண்டக்டர் ரெடி பண்ணி பயணிகள் ரெடி பண்ணி டிரைவர் ஆனேன். ஆனா என் பஸ் எல்லைரையும் ஏத்திகிச்சு ....மெதுவாகவும்  போச்சு வேகமாவும் போச்சு...குழந்தைகள் முதல் எல்லைத்தையும் ஏத்திக்கிச்சு அந்த கால வச்சுகிட்டே பன்க்ச்சர் ஆன டயரோட பஸ்ஸ ஓட்டினேன்.நேற்று வேலையின் என்கிரிந்தோ வந்த நீளமான கம்பி என் முழங்காலை உரசி எனது 
பாண்ட்டை கிழித்த பொது தழும்பு தெரிய  தடவினேன்......கீழ விழுந்திடாம ஓடு சாமி ன்னு எங்கம்மாவின் குரல்  அதே தொனியில்  அதே கணீர் குரலில் என் காதுக்குள்ளே கேட்டது.

Sunday, April 3, 2011

செய்தியும் சிந்தனையும்


இந்திய கிரிக்கெட் அணியின் இல்லை இல்லை சோத்துக்கே இல்லாட்டினாலும் கிரிக்கெட் ல் ஜெயித்தால் நாமே ஜெயித்தது போல் இருக்கும் ஒவ்வொரு இந்தியனின் கனவும் நிஜமாகிப் போனது. மறுபடியும்
நாட்டுக்காக விளையாடும் மன நிலையே ஜெயித்துள்ளது. அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்கள். இறுதி விளையாட்டில் Man  of  the  match award கௌதமுக்கு கிடைத்திருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர்தான் அணியின் சிக்கலான சூழ்நிலையை விடுவித்தவர். பரவாயில்லை தோணியும் சுய விளம்பரத்துக்கான விளையாட்டை எப்போதும் ஆடதவராகவே தெரிகிறார். எனவே அவர் வாங்கியதில் ஒன்றும் வருத்தமில்லை. நான் நினைத்தது போலவே யுவராஜ் Man  of  the  Series  அவரது பெற்றுள்ளார். எனக்கு ஒரு வருத்தம் முத்தையா முரளிதரன் பந்தை பொரிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அவர் மேல் ஒரு விளையாட்டு வீரரா ஒற்றும் வருத்தமில்லை ஆனா அவரை என்னால் ஒரு தமிழனாக பார்க்கவே முடியாது. காரணம் மக்களுக்கு பயன்படாத விஞ்ஞானம் தேவையே இல்லை என்பது போல். இது வரை தமிழர்களின் நலனில் அல்லது அவர்கள் மரணத்தில் கூட வருத்த படாத உள்ளம் அவருக்கு. பாப் மர்லே  தன இசைத்திறமையின் மூலம் மக்கள் விடுதலைக்கு வழி வகுத்தார். முரளி ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் அவ்வளவே. கல்யாணம் செய்யும் பொது மட்டும் நம் தமிழ்நாட்டில் வந்து பெண் எடுத்தார். எப்படியோ போகட்டும். தோணி கையால் உலககோப்பை வாங்கியது மிக சந்தோசம். சந்தோசம் சந்தோசம்.
அவர்கள் எல்லாம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்.

ஆனால் அதே நேரத்தில்

அரசாங்கம் இவர்களை கௌரவ படுத்துகிறேன் என்ற பெயரில் மத்திய மாநில அரசுகள் பரிசுகளை பணத்த நிலத்தை வாரி இறைப்பது வருத்த்தமளிக்கிறது. ஏனென்றால் உலகத்திலேயே மிக மிக பணக்கார கிரிக்கெட் போர்டு நம் ICC தான். இத்தனைக்கும் அவர்கள் நம் அரசாங்கத்துக்கு கட்டு படாதவர்கள். மற்ற விளையாட்டு துறை இப்படியா
என்று நாம் சிந்திக்க வேண்டும். ஒரு அரசாங்கத்துக்கு கட்டு படாத போர்டு க்காக விளையாடும் வீரர்களுக்கு ஏன் நம் அரசாங்க பணத்தை செலவழிக்க வேண்டும். மேலும் நம் நாட்டு மற்ற விளையாட்டு வீரர்களை நினைத்து பாருங்கள் எத்தனையோ குறிப்பாக ஒலிம்பிக் ல் விளையாடிய
வீரர்கள் பலர் சோத்துக்கே கஷ்டபடுகிறார்கள். ஒரு அரசாங்க வேலைக்கு நாய் படாத பாடு படுகிறார்கள். இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

இப்படி ஏதாவது கேட்டால் நம்மை திட்டுவார்கள். உங்களுக்கெல்லாம் நல்லதே தெரியாத என்று. எப்படியோ போங்க......

Tuesday, March 29, 2011


வாசித்ததில்  நேசித்தது





என் நண்பர் சிவா துபாய் ல் இருக்கிறார். என்னுடன் ஆரம்ப பள்ளியில்
இருந்து மேல்நிலைப்பள்ளி வரை என்னுடன் படித்தவர் அவர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அது எனக்கு பெருஞ்செய்தியாகவே
எனக்கு பட்டது அதை நீங்களும் படியுங்கள்.


தமிழ் நாட்டில் வாழ்வதற்கு உண்டான தகுதிகள்



நீங்கள் படித்தவரா ? ..............
உங்களுக்கு சொந்த வீடு உள்ளதா ?.............
டேக்ஸ் அதிகம் கட்டுபவரா ?...........
சொந்த தொழில் செய்பவரா ?.................

அப்படியானால் நீங்கள் புத்திசாலி இல்லை

ஆமாம் ........ நீங்கள் தமிழ் நாட்டில் வாழும் புத்திசாலி இல்லை

ஏனென்றால்

நாங்கள் படிக்காதவர்கள் .......
சொந்த வீடு , தொழில் எதுவுவுவும் ........ இல்லை .........
பரம ஏழை ..........

ஆனால்

வாழ்வதற்கு வீடு ............
மாதம் தோறும் 35 கிலோ அரிசி
அதை பொங்கி திங்க காஸ் அடுப்பு ........
அரைத்து திங்க கிரைண்டர் , மிக்சி ......
இதற்க்கு ஏற்ப மளிகை சாமான்கள் .....
தீபாவளி பொங்கலுக்கு துணிகள் .....
காலை உணவு முடித்து பகல் பொழுது கழிய மாலை வரை வண்ண தொலைகாச்சி பெட்டி ...
இடையே அரட்டை அடிக்க செல் போன் ....
இரவு வந்தா மலிவு விலை மது , இலவச மின்சாரம் ....
பிறகு சும்மானச்சுக்கும் போரடிச்சா 100 நாள் வேலை ( இஷ்டம் இருந்தா .. போன போவுது )

எங்கள் குழந்தைகள் படிக்க ... இலவச பஸ் பயணம் , சைக்கிள் , மதிய உணவு ,, லேப்டாப் ... உதவி தொகை ....

அவர்கள் கல்யாண செலவு , பிறகு புள்ள பேருக்கு ஊக்க தொகை ,..

பிறகு எதுக்குங்க நாங்க உங்கள மாதிரி கஷ்ட படனும்
நாங்க செய்வது தினமும் இரண்டு வேலை ....

ஒன்னு எங்க காலை கடனை நாங்களே முடிக்கணும் ,
இரண்டு நைட் சமா சரத்தே நாங்களே முடிக்கணும்
( ரொம்ப கஷ்டமான வேலை )

பிறகு 5 வருசத்துக்கு ஒரு முறை போய் ஒரு பட்டனை அழுதிட்டு வந்தா

எங்களுக்கு எல்லாமே வீடு தேடி வந்திடும்

இவ்வளவு நல்வங்கள .. தமில் நாட்டில் மட்டுமே பார்க்கமுடியும் ...


என்னவோ போங்க நீங்க எல்லாம் கஷ்டபடுறத எங்களாலே சகிக்க முடியலே ...

சீக்கிரம் நீங்களும் எங்களோட சேர்ந்துடுவீங்க ....

நிச்சயமா ... எங்க குலதெய்வம் .. முனியப்பா சாமி சத்தியம் ... குலதெய்வம் பக்கத்துக்கு உங்களுக்கு துணையா இருக்கும்


என்னவோ நான் சொல்லறத சொல்லிட்டேன் .. அப்புறம் கஷ்ட படறதும் படா ததும் உங்க இஷ்டம் ...

உங்களுக்கு புத்தி சொல்லறளவுக்கு நான் ஒன்னும் பெரிய புத்திசாலி இல்லை

ஏனென்றால் நான் படிக்காதவன்....... பரம ஏழை ......



இப்படிக்கு ..,

தமிழ் நாட்டின் பரம ஏழை