Thursday, June 9, 2016

சைபர் குற்றங்கள்- காத்துக்கொள்வது எப்படி?


1) செல்போனை சர்வீஸ் அல்லது ரிப்பேருக்குக் கொடுத்தால் மெமரி கார்டை எடுத்துவிட வேண்டும். அதேபோல போனில் உள்ள படங்கள், வீடியோ, கான்டாக்ட்ஸ் உள்பட அனைத்தையும் பேக்அப் எடுத்து விட்டு, போனில் உள்ளவற்றை முழுமையாக அழித்துவிட்டு அதாவது ஃபேக்டரி ரீசெட் செய்துவிட்டுத் தரவேண்டும். 

2) ஃபேஸ்புக்கில் தெரியாத நபர்களிடம் இருந்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால், அனுப்பியவரின் விவரங்களை சரிபார்த்துவிட்டு முடிவெடுப்பது நல்லது.

3) ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் அக்கவுன்ட் பாஸ்வேர்டுகளை உங்கள் மெமரிக்குள் மட்டுமே சேவ் செய்யுங்கள். பேப்பரில் எழுதியோ, அலுவலக கணினியில் சேமிப்பதோ நல்லது அல்ல. 

4) நம்பிக்கைக்குரிய திருமணத் தகவல் மையங்களில் மட்டுமே உங்கள் விபரம் மற்றும் புகைப்படங்களைக் கொடுங்கள். கண்ட கண்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவேண்டாம். 

5) செல்போனில் அவசியமான அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்துங்கள். கண்டதையும் பதிவிறக்கம் செய்து உங்கள் செல்போனில் இருக்கும் விபரங்களைத் திருடி எடுக்க நீங்களே வழி அமைத்துவிடாதீர்கள்! 

No comments:

Post a Comment